ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2024

உண்மைகளைத் தேடிச் சென்றாலும்… பெற முடியாத நிலையாகப் போய்க் கொண்டுள்ளது

1.அரசியல் ரீதியிலும் சரி… பாட நிலைகளில் தத்துவங்களைப் போதித்துக் கொண்டிருப்போரும் சரி…
2.ஞானிகள் காட்டிய அறநெறிகளைக் கடைப்பிடித்து அதன் வழியில் இன்று செயல்படுகிறார்களா…! என்றால் இல்லை.

யாரையும் தவறாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். “நான் அல்ல இதைச் சொல்வது…!” குருநாதர் காட்டிய அருள் வழியில் தான் இதை உணர்த்துகின்றேன்.

காரணம்… இன்றைய உலக மக்கள் நல்லதை ஏங்கித் தவிக்கும் போது அந்த நல்ல உணர்வின் செயல்கள் எவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

மதங்களில் தவறில்லை…! மதத்தின் தன்மை வகுத்து நல்ல ஒழுக்கங்களை ஞானிகள் கொடுத்திருந்தாலும் பிற்காலங்களில் தவறின் நிலைகளுக்கு வருகின்றது.

அகஸ்தியன் வழியில் வியாசகர் அண்டத்தின் தன்மையைக் கண்டறிந்து அதை உணர்த்தினாலும் அவருக்குப் பின் வந்தவர்கள்…
1.ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து முழுமையின் தன்மையை அறிய முடியாது
2.காலத்தால்… அரசு… அரசியல் என்ற நிலையில் இது மறைந்து விட்டது.
3.தன் நாட்டைக் காக்க தன் மதத்தைக் காக்கப் போர் முறைகள் உருவாக்கப்பட்டதால் உண்மைகள் மறைந்து விட்டது.

அன்று “மந்திரவாதிகளால்” மக்களை அடிமைப்படுத்தும் நிலைகள் இருந்தது. மனிதன் மடிந்த பின் அவன் உணர்வைக் கவர்ந்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல் பில்லி சூனியம் என்று அன்றைய காலங்களில் அரசர்கள் செய்தார்கள்.

இஸ்ரேல் நாட்டில் அன்று போர்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் குறி வைத்து அம்பை எய்து “ஜோதிடம் பார்த்துத் தான்” அதனைச் செயல்படுத்துவார்கள். அம்பு எய்த நிலைகள் கொண்டு அரசனின் வலுவின் நிலை அறிந்து தான் செயல்படுவார்கள்.

நமது நாட்டிலும் அரசனாக இருந்த கட்டபொம்மனும் மந்திர ஒலியால் “ஜக்கம்மா” என்ற நிலையில் குலதெய்வமாக வளர்க்கப்பட்டு… அதனை ஈர்க்கப்பட்ட கருவின் தன்மை கொண்டு எதிரிகளைக் கண்டுணர்ந்து… எதிரிகளிடமிருந்து தப்பிக் கொள்ளும் உணர்வின் தன்மை கொண்டு செயல்பட்டான்.

மற்ற நாடுகளிலும் இதே போன்று மந்திர ஒலிகளால் தனக்குள் கவரப்பட்டு தன்னையும் தன் நாட்டையும் காத்திடும் நிலையாக மனிதர்களுக்குள் மதங்களை உருவாக்கினார்கள்.

1.மதத்தால் சொன்ன நிலைகளை ஏற்படுத்திய பின் அதையே மந்திரம் ஆக்கி
2.அந்த மந்திரத்தின் நிலைகள் கொண்டு மனிதன் இறந்து விட்டால் அதைக் கவர்ந்து சக்தி வாய்ந்ததாக மாற்றி
3.தன் நாட்டினுடைய நிலைகளுக்கு மதங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எந்த மதமாக இருந்தாலும் ஞானிகள் காட்டிய நிலைகள் மனிதர்களுக்குள் படர்ந்த பின்… பதிந்த நிலைகள் எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையை மந்திர ஒலிகளாக மாற்றித் தான் செயல்படுத்தி வந்தார்கள்.

அந்த மகான்கள் காட்டிய நிலைகளை யாரும் இப்போது கடைப்பிடிக்கவில்லை. எந்த மதத்தின் நிலைகள் கொண்டு பிரிவுகள் பிரிந்ததோ அந்த ஞானிகள் சொன்ன உண்மை நிலைகள் மறைக்கப்பட்டது.

நான் பெரிது… அவர்கள் செய்வது தவறு… இவர்கள் சொல்வது பொய்… என்று மதத்திற்குள் இனங்களாகப் பிரிக்கப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு
1.உலகெங்கிலும் மகான்கள் கொடுத்த நிலைகள் மக்களுக்குக் கிடைக்க முடியாதபடி
2.இன்று உண்மைகளைத் தேடிச் சென்றாலும் பெற முடியாது நிலைகளாக மடிந்து கொண்டுள்ளது “விஞ்ஞான அறிவு கொண்டு...”