ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 8, 2024

“மனிதன் தெய்வ நிலை அடைவதற்காகத் தான்” காவியங்கள் படைக்கப்பட்டன

உலகிலே உதித்த உடல் கொண்ட
1.உடல் தொடர்பின் வானியலை வழி வகுத்த மாமகரிஷிகள்
2.மனிதன் பெறுகின்ற பேறு என உண்மைகளை முழுவதும் பெட்டகத்தில் வைத்துப் பூட்டிடவில்லை.

தனித்து இயங்கும் ஆற்றலாக… முகிழ்விக்கும் ஞானம் செயற்கொண்ட வளர்ச்சியின் முதிர்வாக… மெய்ஞான அனுபவங்கள் உலகின் கண் செயல் கொண்ட காலத்தே…
1.உலகோதய வாழ்க்கை நெறி வழி மெய் ஒலி மெய்ஞானம் பிறந்திட…
2.க்ஷண நேர சலனம் அக்கணநேரம் என்பது படி…
3.பலன் உருவாக விளைய மீண்டும் மீண்டும் கூட்டிக் கொண்டிட்ட அனுபவ நிலைக்களன்களே (சான்றோர்) சாட்சி.

காவியமாகப் படைத்து அளித்திட்ட நிலைகள் எதற்கப்பா…?

இன்று சமுதாய சீர்திருத்தம் என்ற நிலையில் மக்கள் நலன் பெற உழைக்கின்றோம் என உரைக்கின்றவர்கள்… வாழ்வின் மாளிகை அமைக்கப் பெறும் அஸ்திவாரத்தைக் கூட அறிந்து கொண்டார்களா…?

வாழ்வின் நலன் காக்கும் ஒழுக்கம்… ஒழுக்கத்தின் வழி நற்பண்புகள்… அப்பண்புகள் நெறி கொண்டு சமைத்த பாசம்… சங்கட நிலை விலக்கி நீதியை நிலைநாட்டும் வீரம்… எதிர் மோதல் குணங்கள் நெருங்கிடாக் கவசம்… என சீரிய சிந்தனையாக தானம்… நெறி முறையை மாற்றிக் கொண்டிடும் செயல்களுக்குத் தக்க ஒறுத்தல் (தண்டனை) என்ற சட்ட நிபுணத்துவங்கள்…! இவை அனைத்தும் உலகிற்கு அன்புடன் அளித்திட்டாலும் “அதில் ஓர் சூட்சமம்” உள்ளது.

1.”ஒளி கொண்டு ஈர்த்தல்” என்றே தன் நிலையின் உயர்வைக் கூட்டிக் கொண்டிட…
2.வெளியிடாத காரியார்த்த உண்மைகளும் உண்டு.

வான்மீகி மாமகரிஷி மனிதன் தெய்வ நிலை பெற்றிடும் வளர்ச்சியின் வழியையே… குணங்கள் நிறங்கள் சூட்சும மணங்கள் என்று மகிழ்ச்சியுடன் அளித்திட்ட உண்மைகளை இனி உரைப்போம்.

அன்றோ காட்டுக்கு அரசன்… இன்றோ இராம ராஜ்ய ஜெப விசால அரசருக்கு அரசன்…! மூடமதி விலகிட “க்ஷண நேர சபலம்… மின்னலின் ஒளி என வித்தாக ஆனது…”