ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2024

போகன் காட்டும் மெய் வழி

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும்… நவக்கோளின் உணர்வுகளையும்… நவக்கோள்களால் விளைந்த தாவர இனங்களையும் சேர்த்து… சிலையாக போகன் உருவாக்குகின்றான்.

சூரியனிலிருந்து வெளிப்படும் பாதரசம் தான் எல்லாவற்றிலும் கலக்கிறது. பாதரசம் எதனைக் கவர்கின்றதோ அது விந்தாக மாறி அதன் உணர்வே கருவாகி உருவானது என்பதை சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

பாதரசத்தை வைத்து நவக்கோள்களில் உருப்பெற்ற பாஷாணத்தையும் இணைத்து ஒரு உருவமாக மனிதனைப் போன்று வடிக்கின்றான். இதன் உணர்வைக் கவர்ந்த பின் ஒவ்வொரு தாவர இனங்களிலும் இந்த ரசங்கள் உண்டு. அதை எல்லாம் அந்தச் சிலைக்குள் “சாரணையாகக்” கொடுக்கின்றான் போகன்.

தாவரங்களை ஆடு மாடுகள் தின்றாலும்… புலி அதை அடித்துச் சாப்பிட்டாலும்… இந்த உணர்வு அதிலே எப்படியும் அதற்குள் கலக்கின்றது. அதனின் உணர்வுகள் சிறுகச் சிறுகக் கலவைகள் ஆகி… தீமைகளை நீக்கும் மனித சரீரமாக உருவாக்குகிறது என்பதனை உணர்ந்தவன் அருள் ஞானி போகன்.
1.ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதை உணர்ந்தவன்.
2.ஆனால் ஆதியில் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருப்பினும் அவனுடைய அறிவு கொண்டு போகன் செயல்படுத்தினான். அதன் வழி முருகன் சிலையை உருவாக்கிப் பழனி மலையில் ஸ்தாபித்தான்.

1.அந்தச் சிலையின் மீது சிறிது நீரை விட்டால் போதும்
2.அது வெப்பமாகும்.. ஒரு ஆவியின் தன்மை கிளம்பும்…
3.”அதை நுகர்ந்து நமது ஆன்மாவாக ஆக்கிடல் வேண்டும்…”

அதாவது… நாம் கீழிருந்து மேலே படியில் ஏறும் போதே அதைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் “முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் அந்த மணங்களைச் சுவாசிக்க நேர்கின்றது…”

இடையிலே இடும்பன் மலை என்றும் வைத்திருப்பார்கள்

காரணம்… மேலே ஏறிச் செல்ல வேண்டும் என்கிற போது வேதனையென்ற உணர்வாகிவிட்டால் கை கால்களை முடங்கச் செய்து விடுகின்றது… ஆப்படி இடைமறித்துத் தடுப்பதை இடும்பன் என்று காட்டினார்.

மீண்டும் ஏக்க உணர்வுகளை மேலே செலுத்தி… களைப்பை நீக்கி அவன் அருளைப் பெற வேண்டும் என்று கிரிவலம் வந்தால் அங்கே தூப ஸ்தூபி இருக்கும்.
1.அதற்கு நேராக நின்று வானை நோக்கி எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்வதற்காக அதை வைத்தார்கள்.

அந்த உணர்வுடன் ஆலயத்திற்குள் சென்று அவன் அறிவின் தொடர் கொண்டு… முருகன் சிலையிலிருந்து வரும்… தீமைகளை நீக்கிடும் ஆவியின் தன்மையை நுகர்தல் வேண்டும்.

1.சிலையைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து நாம் பதிவாக்கப்படும் பொழுது கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்.
2.சிலையைப் பதிவாக்கிய பின் அதிலிருந்து வரக்கூடிய மணத்தைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்கின்றது
3.நுகர்ந்து உயிரிலே பட்டபின்… இந்த உணர்ச்சியின் தன்மை தீமையை நீக்கும் சத்தாக
4.போகன் வடித்த உணர்வை… அந்த வெண்ணையை…
5.நம் கண் திருடி… நம் உடலுக்குள் தீமையை நீக்கிடும் சக்தியாகப் பரவச் செய்கின்றது.

வெண்ணை என்றால் நெய்யாக நம் உடலுக்குள் அது எப்படிச் சத்தாக ஆகின்றதோ… அதே போல் சிலையிலிந்து வரும் மணத்தின் சத்தை நாம் வடிக்கப்படும் பொழுது… நம் உடலில் தீமையை நீக்கும் அருள் சக்தி கிடைக்கின்றது.

கண்டுணர்ந்த மெய் ஞானியான போகன்… கண்ணின் இயக்கமும் உயிரின் இயக்கமும் உடலின் அமைப்பும் என்ற நிலையில்
1.சாதாரண மக்களும்… தன்னைத் தான் தனக்குள் இயக்கும் நிலைகளை அறிந்து கொள்ள
2.தீமையை நுகரும் பொழுது என்ன நடக்கின்றது…? என்றும்
3.தீமையை நீக்கிய அருள் ஞானிகள் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
4.இந்த உடலில் என்ன விசித்திரங்கள் நடக்கிறது…? என்பதையும் காட்டினான்.

ஏனென்றால் தீமையான உணர்வுகளை நல்ல குணம் கொண்டோர் நுகரும் பொழுது அது எத்தகைய விஷத்தன்மையாக மாறுகிறது…? நல்ல குணங்கள் ஏப்படி மாறுகின்றது…? உடல்கள் எப்படி நலிகின்றது…? என்பதை அறிந்த போகன் தன் இன மக்களுக்கு அதிலிருந்து மீட்டிக் கொள்ளும் உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று அன்று செயல்பட்டான்.

தன் இன மக்கள் என்றால் சாதாரணமாக எண்ணவில்லை…!

ஒவ்வொரு மனிதனின் உயிரும் கடவுள்.. அவனால் அமைக்கப்பட்ட ஆலயம் அந்த உடல். அந்த ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தவே அதைச் செய்தான் போகன்.

ஏனென்றால் உயிரே கடவுள்… அவனே உள்ளிருந்து ஆளுகின்றான்… “பிறருடைய நிலைகளை அந்த ஆண்டவன்…” என்று எண்ணிச் செயல்படும் பொழுது… மகிழ்ச்சி என்ற உணர்வை வெளிப்படுத்தும் போது… எல்லோரும் அதன் உணர்வின் தன்மை பெறுவதற்க்காக போகன் அந்த வழியில் செய்தான்.

1.யாரெல்லாம் போகனை எண்ணி அதைச் செயல்படுத்துகின்றனரோ
2.ஆயிரக்கணக்கானோர் அந்த ஆலயத்தில் நலம் பெறும் சக்தியாகக் கிடைக்கின்றது.

மனித உடலில் இருக்கும் போது தான் இத்தகைய வேலைகளைச் செய்தான்.

தீமைகளை நீக்கிய உணர்வின் தன்மை பெற்று… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி... ஒளியின் சரீரமாக… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக போகன் இன்றும் உள்ளான்.

1.அவன் ஒளியான உணர்வை நாம் நுகரப்படும் பொழுது
2.அவன் சென்ற பாதையில் நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகி
3.இருளை நீக்கிடும் அருள் சக்தி பெற்று இந்த உடலுக்குப் பின் அவன் வழியிலே அங்கே (சப்தரிஷி மண்டலம்) செல்ல முடியும்.
4.போகன் அதைப் பெறவே… அதன் உணர்வைப் பெற்று அங்கே பெற்றான்.
5.அவன் வழியில் செல்லப்படும் போது… நாமும் அங்கே செல்ல முடியும்.

போகன் காட்டிய தூப ஸ்தூபியின் முன் நின்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதை வட மேற்காக வைத்திருப்பார்கள். விநாயகரை வைத்தது போலேயே முருகன் சிலையையும் போகன் அவ்வாறு தான் வைத்துள்ளான்.
1.நாம் வட கிழக்காகப் பார்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணும் பொழுது
2.அவன் காட்டிய முறைப்படி நாமும் நஞ்சை வென்று… அவன் அடைந்த எல்லையை அடைய முடியும்