ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2013

பூமியின் மாற்றத்திலிருந்து தப்பி, நினைவிருக்கும் பொழுதே விண் செல்ல வேண்டும்

இந்தச் சரீரத்திலே, நாம் ரொம்ப நாட்கள் நீடித்து இருப்பதில்லை. உயிர் “எந்த நிமிடம் இந்த உடலைவிட்டுச் செல்லும்” என்று சொல்ல முடியாது.

ஏனென்றால், நாம் முன்பு சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு, அந்த உணர்வுக்குத் தக்கவாறுதான் இந்த உடலிலே நிலைத்திருக்கும்.

ஆனால் உடலைவிட்டுச் சென்றபின்,
நாம் எப்படியும் விண்ணிற்கே செல்ல வேண்டும்.
இன்னொரு உடல் பெறக் கூடாது.
இன்னொரு உடல் பெற்றுவிட்டால், இதைப் போன்ற சந்தர்ப்பம் எப்படி வரும்? என்று சொல்ல முடியாது.


இந்தச் சுற்று போய்விட்டால் அடுத்து இந்த பூமியினுடைய நிலைகள் மாறுபடும் நிலைகள் வருகின்றது. அந்த நிலைகளுக்குள் நாம் சிக்குண்டுவிடக் கூடாது.

இங்கே நீர்வளமே அதிகமாகும் நிலை வரப் போகின்றது. ஆக, ஜனங்களுடைய பெருக்கங்கள் அவ்வளவு கூட்டங்கள் கூடும் பொழுது நிலங்களே இருக்காது. நீங்கள் யுத்தமே செய்யவேண்டாம். இன்று ஐந்து வருடக் குழந்தைகளாக இருக்கின்றார்கள் என்றால் (உபதேசம் செய்த வருடம் 1989),
இனி இருபது வருடம் போகும் பொழுது,
இதனுடைய நிலைகளில் யாரோ, எவரோ என்றுதான் இருப்போம்.

ஜன நெருக்கடியில் நிலங்கள் குறைகின்றது, அதே சமயத்தில் விஞ்ஞான அறிவுகளால் செயல்படுத்தப்பட்ட அனைத்துமே, மழை பெய்வதைத் தடுக்கும் நிலையாக வந்துவிட்டது. மழை எல்லா இடங்களிலும் சரியாகப் பெய்யவில்லையென்றல், நமக்கு விவசாயம் இல்லை.

விவசாயம் இல்லையென்றால், உணவுக்காக வேண்டி கடந்த காலங்களில் எப்படிக் காட்டுமிராண்டி போல, ஒன்றை அடித்து ஒன்றை விழுங்கியது போன்று, உலகத்திலேகூட என்ன நடக்கிறது என்று தெரியாது.

ஆக, மனிதனுடைய சத்துக்களைச் சாப்பிட்டால் அது நல்லது என்று, இன்று குழந்தைகளைக் காணவில்லை என்று பார்க்கிறோம். இவையெல்லாம் பார்சலாகின்றது. மேலை நாடுகளில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டிருந்தலும், அங்கே இந்த மாதிரி அசுத்த நிலைகள், மனிதனை விழுங்கும் நிலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

சிறிது காலம் போய்விட்டால், நாம் சிந்திக்கக்கூட நேரமில்லாமல் போய்விடும். இதைப் போன்ற நிலைகள் வருவதற்கு முன் நாம் நினைவிருக்கும் பொழுதே, இந்த பூமியிலிருந்தே விண் செல்ல வேண்டுமென்ற நியையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
ஏனோ தானோ என்று இல்லாதபடி, நாளொன்றுக்கு பத்து முறையாவது தியானம் செய்யுங்கள். உங்களுக்குத் துன்பம் வரும் பொழுதெல்லாம், ஆத்ம சுத்தி செய்துகொள்ளுங்கள்.


இதைப் போன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் இதைச் செயல்படுத்த முற்பட வேண்டும். ஏனென்றால், காலங்கள் குறுகிக் கொண்டிருக்கின்றது. விஷ அலைகள் பரவிக் கொண்டிருக்கின்றது. சிந்திக்கும் நிலை தடுமாறிக் கொண்டே போகின்றது.


இதைப் போன்ற விஞ்ஞான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் இந்த உடலிலிருந்தே, நினைவு இருக்கும் பொழுதே, ஒளியாக மாற்றிச் செல்லும் நிலையை நாம் பெறவேண்டும்..