ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2025

நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்


“அணு ஆயுத இயந்திரங்களை…” கால மணிகளை உருவாக்கும் நிலைகள் கொண்டு எலக்ட்ரானிக் முறைப்படி நாடாக்களில் திவு செய்து பாதுகாப்பாக வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.
 
அதன் மூலம் விஷத்தன்மை கொண்ட அணுகுண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.
 
மற்ற நாடுகளில் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக அதாவது அங்கிருந்து எதிர் அலைகள் வந்தால் சீறிப்பாய்ந்து அந்த இலக்கினைத் தாக்குவதற்காக அடுத்த நாட்டை அழிப்பதற்காக இப்படி வைத்துள்ளார்கள்.
 
விமானங்களையும் ராக்கெட்டுகளையும் கம்ப்யூட்டர் துணை கொண்டு இயக்கச் செய்யும்… உணர்வின் அறிவு எலக்ட்ரானிக்காக மாற்றப்பட்டு எதிர் அலை கொண்டு இவன் இடும் கட்டளைகளைச் சீராக வேலை செய்யும் நிலையில் வைத்திருக்கின்றார்கள்.
 
ஆனால் சூரியனுக்குள் இயங்கும் எலக்ட்ரிக் இப்போது அதிகமாகி விட்டால் என்ன நடக்கும்…?
 
இன்று வீடுகளில் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரம் அதிகமாகிவிட்டால் பல்புகள் ஃபியூசாகி விடுகின்றது. அதைப் போல்
1.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் சூரியனுக்குள் அதிகரிக்கப்படும் பொழுது உற்பத்தியாகும் எலக்ட்ரிக் அதிகமாகி
2.சீராக இயங்கிக் கொண்டிருக்கும் எலக்ட்ரானிக் குண்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்தச் சாதனங்கள் செயலிழந்து விடும்
3.இராக்கெட்டுகளோ மற்ற சாதனங்களோ தன்னிச்சையாக இயங்கத் தொடங்கும்.
 
காரணம் அதற்கென்ற மானிட்டர்கள் வைத்துச் செயல்படுவது செயலிழந்து சிதைவுண்டு விஷத் தன்மைகள் அதிகளவில் பரவும் நிலை உண்டு.
1.அத்தகைய நிலை வெகு நாளில் இல்லை வெகு துரிதத்தில் இயங்கி விடும்.
2.இதைக் குறித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் விஞ்ஞானிகளை அறியாமலே இத்தகைய சிதைவுகள் இனி வரும்.
 
நடக்கப் போகும் த்தகைய கொதி நிலைகளில் இருந்து தப்ப வேண்டும் அல்லவா. ஆகவே உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.
 
விஷத்தன்மைகள் பரவி விட்டால் இந்தப் பூமி பரிசுத்தமாகப் பல ஆயிரம் ஆண்டுகளாகும். அதற்குள் மனிதர்கள் வாழ்ந்தால் மிருகமாகத் தான் வாழ வேண்டும்.
 
விஷத் தன்மை கொண்டு சிந்தனையற்ற நிலைகளில் ஆரம்ப நிலையில் இந்த பூமியில் உருவான மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தது போன்று தான் வாழ முடியும். சிந்திக்கும் தன்மை இழந்தே இருக்கும்.
 
1.ஆகவே இப்பொழுது நல்ல நினைவு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.
2.உங்கள் குடும்பங்களில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்கள் முன்னோர்கள் ஆன்மாக்களை விண் செலுத்த மறந்து விடாதீர்கள்.
3.அவர்களை ஒளியின் சரீரம் பெறச் செய்யுங்கள்.
 
அவர்கள் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் இனி எதிர்காலம் விஞ்ஞான உலகில் இருந்து தப்பும் நிலையாக பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று செயல்படுத்துங்கள்
 
இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி விட்டால் நாம் விண்ணுலகம் செல்ல முடியும்.
1.துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை உணவாக எடுத்து
2.ஒளியின் சுடராக வாழ்வது போன்று நாமும் வாழ முடியும்.
 
இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் இங்கிருந்து அகன்று சென்று மற்ற மண்டலங்களின் சக்திகளை நுகர்ந்தறிந்து விண்ணிலே “என்றும் 16” என்ற நிலையை அடைய முடியும்.
 
மனிதனான நாம் தான் இத்தகைய நிலையை உருவாக்க முடியும். அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்குவோம்… மெய் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வோம் என்று உங்களைப் பிரார்த்தித்து வேண்டிக் கொள்கின்றேன்.
 
நான் சொல்வதைத் தயவு செய்து அலட்சியப்படுத்தி விடாதீர்கள் குரு எனக்கு இந்த உண்மைகளை உணர்த்தினார் அதைத்தான் நீங்களும் பெற வேண்டும் என்று
1.உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலைச் சிவமாக மதித்து
2.அந்த உயர்ந்த நிலை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று நான் தவம் இருந்து கொண்டிருக்கின்றேன்.

சரீரத்தின் அனைத்து அணுக்களும் “உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்

சரீரத்தின் அனைத்து அணுக்களும் “உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்


குணங்களாக உள் அடக்கும் ஓர் மறை பேறு என்பதே மனித மனம் வளர்த்துக் கொள்கின்ற குண நலன்கள் அகத்தின் அருட் சிந்தனையில் பிரகாசிப்பதே உயர் ஞானம்…”
1.ஞானச் செல்வங்கள் (நீங்கள்) அகத்தின் அருள் செல்வத்தினை
2.உங்கள் சிந்தையில் பற்றுக…! என அன்பு கொண்டே அழைக்கின்றோம்.
 
காலமாம் வேக கதியில் அனைத்துமே மறைதல் தத்துவம் பெறுகின்றது.
 
உயிர் சக்தி வலு கூட்டிக்கொள்ள இந்தச் சரீரமும் காக்கப்பட வேண்டும். நோயுற்ற ஒருவனைப் பிழைத்தெழ வைத்திடும் வைத்திய நூல் கற்று அதனைச் செயல்படுத்திக் காட்டிட்ட எத்தனையோ மருத்துவர்கள் உள்ளார்கள்.
 
இருந்தாலும் அவர்களும் காலத்தின் பிடியில் தான் சிக்கி உள்ளார்கள். உடலை விட்டு எப்படியும் பிரிந்து தான் ஆக வேண்டும்.
 
ஆனால்
1.மெய் ஞானத்தின் விழிப்பு கொண்டு உயர் ஆத்ம சக்தியை வலுக் கூட்டிய மாமகான்கள்
2.காலத்தால் இன்றும் அழியாது வாழ்ந்து வருகின்றனர்
 
அவர்கள் செயல் கொள்கின்ற நிலை என்ன…?
 
காலில் அணியும் சலங்கை பார்த்திருக்கின்றாய் அல்லவா. உயர்ந்த உலோகத்தால் உருவாக்கப்படும் கால் சதங்கை ஒலிப்பது எவ்வாறு…?
 
பொருத்தமான பரல்கள் உள்ளிட்டு அமைக்கப்படும் அந்தச் சதங்கை வாய் ஒலிக்கின்ற ஒலி போல்
1.இங்கே யாம் காட்டும் பொருளை
2.ஆத்ம பலம் கூட்டிடும் ஞானத்திற்கே காணுதல் வேண்டும்.
 
பொருந்தாப் பொருள் அமையப் பெற்ற சதங்கை எவ்வாறு ஒளி நாதத்தைக் காட்டாதோ அதைப் போன்றே
1.சரீரத்தின் அனைத்து அணுக்களும் உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்த்துக் கொண்டிடும் பக்குவம் இல்லை என்றால்
2.மனிதச் சரீரத்தை ஒளியாக்கிடும் சித்தன் நிலை குறைவுபடுமப்பா.
 
நாம் ஈர்க்கின்ற உயர் காந்த சக்தியை சரீரத்தில் உள்ள அனைத்து அணுக்களும் பெற்று உயிர் ஆத்ம சக்தியின் வலுவால் ஒலிக்கின்ற நாதமே பின் விந்து கலையாகும்…”
 
அந்த நிலையின் பக்குவம் பெற்றுவிட்டால் துடி முழவின்” (இசைக் கருவி) ஒலி கேட்டிருக்கின்றாய் அல்லவா. அத்தகைய முழங்கு நாதம் சொல் (உன் சொல்) அறப்பெற்றிடலாம்.
 
இதையே சரீரத்தின் தொடர்பிற்கும் உணவினை உட்கொள்ளும் குணங்களாகக் காணலாம்.
 
உடல் பொருந்துகின்ற உணவினையே உட்கொள்ளல் வேண்டும் உணவின் குண மாறுபாட்டால் நம் சரீரத்திற்குள் பிற உயிர்த்தொகைகள் உட்கொள்ளும் உணவின் குண விசேஷ வாசனையால் ஆட்கொண்டு உடல் வாழ்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
 
சமைக்கப்படும் உணவில் அதன் வாசனைக்கொத்த உயிரணுக்கள் அசைகின்ற தன்மைகளையும் அதன் செயல்பாட்டையும் காட்டி இருக்கின்றோம். “இலையில் திகழ்கின்ற பிண்டம்…!” என்று உரைத்திருக்கின்றோம்.
 
ல்லாமே வாசனைகள் ஆகுகின்றன. ஆனாலும்
1.குணங்களின் வேகத்தை அது எத்தகையதாக இருந்தாலும்
2.ஆத்ம பலத்திற்கே அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
 
தொழில் புரியும் ஓர் தொழிலாளி கருத்தொன்றி தொழில் நாட்டம் கொண்டிட்டால் பசி தாகத்தை உணர்வதில்லை. சிலர் பொருளைப் பெற்றிடும் வேகத்தால் உத்வேகம் ஊட்டப்பெறும் ஒன்றின் கருத்தால் பசியினை மறந்தும் தொழில் புரிகின்றார்கள்.
 
இப்படி வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சம்பவங்களைக் காண்கின்றோம் அதுவும் கருத்தொருமித்த நிலை தான்.
 
அதே மனநிலையைத்தான் இந்தத் தியானத்திற்குச் சிறிதளவேனும் செயல் கொள்ளுங்கள்…” என்று உரைப்பதெல்லாம்.
 
1.ஞானத்தின் வித்துக்களைத் தேர்ந்தெடுக்கும் வேகத்திற்கே சப்தரிஷிகள் செயல் கொள்கின்றனர்
2.ஆக்கம் அனைத்தையும் காக்கும்.

January 30, 2025

பிறருக்கு நன்மை செய்தாலும்… தீமை நமக்குள் ஏன் வருகிறது…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

பிறருக்கு நன்மை செய்தாலும்… தீமை நமக்குள் ஏன் வருகிறது…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் உரைகளைத் தான் உங்களுக்குப் போதித்து வருகின்றோம் அதை நீங்கள் தெளிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் செம்மையான பாதையினை அமைத்துக் கொள்ள அதற்குண்டான பக்குவங்கள் வரும்.
 
இது தீமை இது நன்மை என்று சொல்லும் பொழுது
1.தீமை என்ற நிலைகளை விலக்கி விட்டுச் சென்றால் தீமை வருவதில்லை.
2.நன்மை பயக்கும் இடங்களுக்குச் சென்றால் அந்த நன்மையே வலிமையாக அது உங்களை அழைத்துச் செல்லுகின்றது.
 
இதைப் போன்று தீமை நன்மை என்றும் உணரும் நிலைகளில் நீங்கள் எதனை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று சற்று சிந்தியுங்கள் உங்கள் சிந்தனைக்குரியதாக இதை விட்டு விடுகின்றேன்.
 
இன்று நமக்கு ஞானத்தைப் போதிப்பவர்களில் புகழ்வதற்கும் போற்றுவதற்கும் தான்சீர்வதிக்கின்றார்கள். புகழுக்காக ஏங்குகின்றார்கள் போற்றுவதற்கு ங்குகின்றார்கள்.
 
நாம் போற்றித் துதிக்கவில்லை என்றால் இவன் ஏதோ பழித்துப் பேசுகின்றான்…! நம்முடைய தெய்வங்களுக்கும் கொள்கைகளுக்கும் விரோதமானவன்…! என்று குறை கூறி மாயக்காரன் என்றும் மாயா ஜாலக்காரன் என்றும் மதிக்கக் கூடியவன் அல்ல என்றும் அசுர குணங்கள் கொண்டவன் என்றும்
1.உண்மையின் உணர்வுகளை அறியாது உண்மையின் உணர்வை அறியச் செய்தாலும் அதைப் போதிக்கும் ன்மைகள் இழக்கப்பட்டு
2.மனிதனின் வாழ்க்கை ஞானிகள் உணர்வைத் தனக்குள் பெருக்கும் நிலையை இழக்கச் செய்துவிட்டார்கள்.
 
ஆக யாரையும் நான் குறை கூறவில்லை அவர்கள் அறிந்தார்களோ இல்லையோ…! மெய் உணர்வுகளைத் தான் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
 
பிறருக்குத் தர்மம் செய்ய விரும்புவோர்
1.வேதனைப்படுவோர் உணர்வை நுகர… அந்த வேதனையான அணுக்கள் உடலுக்குள் புக
2.இந்த இந்திரலோகத்திற்குள் (இரத்த நாளங்கள்) நன்மை செய்யக்கூடிய நிலைகள் இழக்கப்படுகின்றது
3.எம்மா எப்பா…! என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.
 
அப்பொழுது தன்னுடைய திசைகள் எங்கே செல்கின்றது…? அதற்குப்பின் தர்மம் செய்யப் போகின்றாரா…?
 
எல்லோருக்கும் நன்மை செய்தேன் என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் பேசுகின்றார்கள் தவிர
1.எதனால் இது வந்தது என்று அறிய வாய்ப்பினைக் கொடுத்தாலும் அதை அறியாத வண்ணம் காலத்தால் மறைந்தே சென்று விட்டது.
2.அதைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
3.அருள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றேன்நினைவு கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
தீமைகள் எப்படிப் புகுகிறது…? உங்களுக்குள் அறியாது புகும் அந்தத் தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் அதை மாற்றும் வல்லமை உங்கள் ஆறாவது அறிவுக்கு உண்டு என்று தான் உணர்த்துகின்றேன்.
 
ஆகவே ஆறாவது அறிவின் துணைனை கொண்டு அருள் ஞானிகள் உணர்வுகளை நுகருங்கள். அதை உங்களுக்குள் சிருஷ்டி ஆக்குங்கள். உங்கள் ரத்த நாளங்களில் பெருக்குங்கள். தீமைகள் வராது தடுக்க இது உதவும்.

“நிற உலகு...” ஒன்று இருப்பதை மனிதன் அறியவா போகின்றான்…?

“நிற உலகு...” ஒன்று இருப்பதை மனிதன் அறியவா போகின்றான்…?


காலம் குறுகியது என்று பல முறைகள் உரைத்திட்டோம் அதை எத்தனை பேர் அறிவில் தெளிந்து கொண்டனர்…?
 
பேரண்ட சூட்சும இரகசியத்திற்குள்... காலத்தின் நிலையால்
1.இதுவரை கடந்து சென்றிட்ட வெகு நீண்ட கால நிகழ்வுகள்
2.எதிர் கொள்ள இருக்கின்ற வெகு நீண்ட காலத்தின் நியதிகள்
3.இதிலே உன்னுடைய பங்கு எவ்வளவு என்று கூற முடியுமா…?
 
பேரண்டத்தின் அளவீட்டில் மானிடப் பிறப்பு என்பது அணுவிற்குள் அணுவே. ஈர்த்து உயர்த்திக் கொண்டிடும் செயல் வேகம் கண்டாயா…?
 
மனிதன் என்ற ஜீவ பிம்ப வாழ்க்கையின் குறுகிய காலத்தினை அறிந்து கொண்டு காலச்சக்கரத்தில் அனைத்தும் மறைந்துவிடும் மாயை…! அதுவே புனிதமாகத் தோன்றும் செயலின் சித்து. சித்து என்பது எதுவப்பா…?
 
ஜடப்பொருளாகப் புறப்பொருள் காட்டுவது சித்து விளையாட்டு.
 
சிருஷ்டியின் சித்து சகலமாய்ச் சகலமும் தோன்றிடும் ஜீவ பிம்பம் காட்டிடும் அனைத்து பொருட்களும் மற்றும் அதனுள் அடங்குவது ஜடப்பொருள்களும் தான்.
 
சித்தன் நிலை பெற்றால் சித்து நிலை விளங்கும்.
 
சகலமும் பொருள்கள் என்றே உரைத்திட்டோம். காலம் குறுகியது என்பதை உணர்ந்து விட்டால் நாம் உரைத்த சகல பொருட்களின் தன்மையும் விளங்கும்.
 
தோன்றி மறையும் அனைத்தும் வேகம் வேகம் வேகம் தான்…! நிலை பெற்றிடும் பொருள் எது…?
 
மனித மனத்தின் சிந்தனை ஓட்டம் செயல்படுவதை ஊன்றிப் பார்த்திருப்பாய். இந்தப் புற உலகத்தில் வாழும் வாழ்க்கைக்கே பொருள் தேடுகின்ற மனிதனின் ஆசைக்கு எல்லை உண்டா…?
1.பொருள் தேடும் சிந்தனையில் பேராசை வயப்படுகின்றான்... அந்தப் பொருளுக்காக உலகினை நேசிக்கின்றான்.
2.பொசுக்என பொருள் மறைந்தால்…? உலகின் கண் பகைமை காட்டுகின்றான்.
3.மனித மனத்தின் முரண்பாடே ஒரு பொருளாக இரு செயல் நிகழ்வுற்று
4.அந்த இரண்டிலும் பாதிப்புக்கு உள்ளாவது பகைதான் “மனது தானப்பா பகை…!”
 
இவைகளில் உழலுகின்ற மனிதன் “நிற உலகு...” ஒன்று இருப்பதை அறியவா போகின்றான்…? அந்த வட்டச் சுழற்சியில் இருந்து விடுபட்டு உயரவே இவ்வளவு “கடுமையாக உரைக்கின்றோம்…”
 
நிற உலகு என்பது “ஒளிதானப்பா…”
 
இகழ்ந்துரைக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். உலகம் பழிக்கின்ற செயல் இது என வழிகளாக நெறிமுறைகள் வகுத்துத் தந்த மாமகான்கள் நன்நெறியில் வளர்ப்பாக்கும் செயலில் மனிதன் தெய்வநிலை பெற்றிட மெய்ஞானச் சுடராக விளங்கிட போதனைகள் உரைத்திட்டனர்.
 
இகழ்ந்துரைக்கும் நிலை மாற்றுகின்ற மனம் வேண்டி உறுதியாக நிலை நின்று மனிதன் செயல் கொண்டால் “உட்பொருள்... தன் பகை நீக்கும்…”
 
பாடநிலையின் ஆரம்பத்தில் கொடுத்த வினாவிற்கே வருகின்றோம்.
 
1.மனிதன் புறப்பொருளைப் பிரிந்த ஏக்கத்தால் பேராசையின் அதிர்வு கொண்டிட்ட ஆவேசம்
2.வெறுப்பின் சிந்தனையில்... புற உலகினைப் பகைப்பதாக எண்ணித் தன் மனதையே தான் பகையாக்கி
3.வாசம் செய்திடும் இறை சக்தியை... உட்பொருளை... அகத்தின் அருட் சிந்தனையை... பகை உணர்வு கொண்டுவிடுகின்றான்.
 
அப்படிப் பகை கொள்கின்ற (தனக்குள்... தனக்குத் தானே) செயலின் வீரியம் எந்த நிலை பயக்கும்...? என உணர்ந்திருப்பாய்.
 
1.”உட்பொருள்...” தன் பகை நீக்கும் வழி வகைதனைக் காட்டி விட்டோம்
2.தியானத்தின் மேன்மையை அக உணர்வால் உண்ணல் வேண்டும்
 
சித்து... சடம்... இரண்டிலும் “ஈஸ்வர ரூபம்…” மனித மனத்தின் அகலவொண்ணா பொருள் அதுவே. அதைப் பெற்று உயர்ந்திட எனது ஆசிகள்.

January 29, 2025

“குருநாதர் மூலம் பெற்ற சக்திகளை” நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்

“குருநாதர் மூலம் பெற்ற சக்திகளை” நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்


நஞ்சுகளை எல்லாம் முறித்தவன் துருவ மகரிஷி…” அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள் சப்தரிஷி மண்டலங்களாக பிறவியில்லா நிலை அடைந்து வாழ்கின்றார்கள்.
 
அதனின்று வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.
1.அதை நீங்கள் பருக வேண்டும் பெற வேண்டும் உங்களுக்குள் வளர்க்க வேண்டும்.
2.குருநாதர் அதைப் பெறும் தகுதியை எனக்கு ஏற்படுத்தினார் உண்மையின் உணர்வுகளை உணர்த்தினார் கேட்டறிந்தேன்…!
3.நீங்களும் பெற வேண்டும் என்று இப்பொழுது உணர்த்துகின்றேன்.
 
காடு மேடெல்லாம் அலைந்தேன். துன்பம் நேரும் போதெல்லாம் அதை அகற்றிடும் நிலை பெற்றேன். அதே போல்
1.துன்பப்படுபவருக்கெல்லாம் அந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் அகல வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்று
2.எனக்குள் இந்த உணர்வுகளை வளர்த்தேன் அதைத்தான் இப்போது உங்களுக்குப் போதிக்கின்றேன்.
3.இந்த உணர்வை யார் பெற வேண்டும் என்று ஏங்குகின்றார்களோ அவர்களுக்கு அந்த நன்மைகள் ஏற்படுகின்றது.
 
புத்திர பாக்கியம் இல்லை கரு உருவாகும் சிசுவாக உருவாகும் அந்த வளர்ச்சி இல்லை. என்று சிலர் சொல்லலாம்.
 
தற்கொலை செய்து கொண்ட ஆன்மாவோ இடைமறித்து மடிந்ததோ… தாய் கருவிலிருக்கும் போது இத்தகைய உணர்வுகளை நுகர்ந்தால்… ரத்த நாளங்களில் தன் இனத்தை உருவாக்கும் அணுக்கருக்களை அது வளர விடாது தடுக்கும்.
 
அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் அங்கே வளர வேண்டும். இனவிருத்தியின் உணர்வுகள் வளர வேண்டும் என்று இந்த உணர்வுகளை நுகர்ந்து…
1.உனக்குக் குழந்தை கிடைக்கும் போ இந்த உணர்வினை பாய்ச்சுகின்றேன்.
2.அதைப் பெறுவோம் என்று ஏங்கிப் பெறுபவருக்கு நிச்சயம் குழந்தைகள் கிடைக்கும்.
3.கேன்சர் நோயே வந்திருந்தாலும்… இல்லை…! இது கேன்சர் அல்ல சாதாரண நோய் தான்…!
4.சீக்கிரம் குணமாகிவிடும் என்ற வாக்கினைப் பதிவு செய்தால் தை ஏற்றுக் கொண்டு
5.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இந்த உணர்வின் அணுக்கருக்கள் விளைந்து அந்தத் தீமைகளை அகற்றும்.
 
ஆனால் இது எல்லாம் யாம் வாக்காகக் கொடுக்கிறோம் நோய்கள் அகலும் என்று…!
 
எங்க சாமி…?” நோய் எங்களை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் அந்த உணர்வுகள் இயக்கிக் கொண்டுதான் இருக்கும். கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று சொன்னால் வேதனை வந்து கொண்டு தான் இருக்கும்.
 
சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நம்மைப் பார்ப்போருக்கும் நம் மீது வெறுப்பு வரும். கடையிலிருந்து ஒரு பொருளை எடுத்துக் காட்டினாலும் வெறுப்பு தான் வரும்.
 
ஆனால் அதை வாங்குவோர் நலம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எனக்குள் படர வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று இவ்வாறு எண்ணினால் இந்த உணர்வின் மம் அந்த அருள் உணர்வினைப் பெற்று அவர்கள் நுகரப்படும் பொழுது
1.“அவர்களுக்கும் இது நல்வழி காட்டும். நமக்குள்ளும் நல் உணர்வுகளாக விளையும்…”
2.இதையெல்லாம் உங்களுக்கு வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன். எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளுக்கு ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது

மெய் ஞானிகளுக்கு ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது


பூமியின் இயக்கச் சுழற்சி அது கதியுறும் ஓட்ட அமைப்பு தொடர்பு கொண்ட கோளங்களாக சூரியக் குடும்ப அமைப்பில் அவை அவை ஈர்த்திடும் நிலைக்கொப்ப வளர்க்கும் வளர்ப்பாக்கி... காலத்தின் சுழற்சியாக இயற்கையின் நிகழ்வில் பூமியில் நடைபெறும் மாற்றங்களை... மனிதன் “விதி” என்று உரைக்கின்றான்.
 
உடல் நலக் குறைவுபடும் காலத்தை நோய் என்று பெயரிட்டு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையுடன் நோயின் குணம் நாடிப் பத்தியமும் இருக்கின்றோம்.
1.மருத்துவர் அளித்திடும் மருந்தினைக் “கசப்பு” என்று விலக்கிடுவோமா…?
2.இங்கு நோயைப் போக்க வேண்டும் என்ற கருத்தே முதன்மையாகின்றது.
 
மனிதச் சரீரமும் பூமியும் ஒன்றே. கருத்தொன்றும் செயல் என விலக்கிடுவோமா…? ஆனால் கருத்தொன்றும் செயல் என்பான் மெய் ஞானி.
 
பூமியின் இயற்கை மாறுதல்களில் பூமித்தாயின் நலன் கருதி...
1.அதை ஏற்றுக் கொண்டிடும் பக்குவ மனது வேண்டும்
2.இவை அனைத்தும் மன வலிமை கொண்டு ஈர்த்திடும் செயலாக...
3.ஜெபத்தின் வளர்ப்பில் வளர்ப்பாக்கவே உரைப்பதெல்லாம்.
 
கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் வண்ணம் கலந்த நீர் அது எந்த வண்ணமோ அந்த வண்ணத்தையே குடுவையில் காண்கின்றோம். இது மனித மனத்தின் நிலை.
 
ஆனால் மெய் ஞானிகளுக்கோ ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது.
 
இந்தக் கலியின் மனித மனத்தின் நிலை உயிர் ஆத்ம சக்தியைக் கேடுறுத்தும் செயலுக்கே செயல்படுகிறது என்று பல முறை கூறிவந்துள்ளேன்.
 
சாயம் ஏறிய நூல் போல் இன்றைய மனிதன் தான் கொண்டிட்ட தீய எண்ணத்தின் வலுவால் தன் ஆத்மாவையே கொடுமைக்கு உள்ளாக்குகின்றான்.
 
இதை எந்த வார்த்தையில் உரைப்பது…?
 
தனக்கு உகந்த இரையை நாடிச் செல்லும் நாரையானது செல்கின்ற தூரம் எவ்வளவு இருப்பினும் அந்தத் தூரத்தைப் பறந்தே கடந்து செல்கின்றது.
1.பறந்தே ஏகுகின்ற அதன் வலிமையை மனதில் கொள்...!
2.”பார்வையின் கூர்மை... அது இரையை நாடுகின்ற நாட்டம்…”
 
மனிதனுக்கு நரை திரை நாட்டம் ஏற்படுகின்றது பார்வையின் ஒளியும் குன்றுகின்றது. நரை திரை நாட்டத்தின் செயலே உலகோதயம்.
1.அத்தகைய குறைவு நிலைகளை... “போ...!” என்றால் போகும்படி செய்வார்களா…! மெய் ஞானியர்... இல்லை...!
2.”ஆத்ம பலம் நாடும்... சிந்தனா சக்தி அன்றோ இங்கே முதன்மை வழி...”

January 28, 2025

உயிர் இயக்கினாலும்… ஆணையிடும் சாதனம் சிறு மூளை

உயிர் இயக்கினாலும்… ஆணையிடும் சாதனம் சிறு மூளை


உதாரணமாக ஒரு விஷம் கொண்ட தேளினை நாம் அடித்துக் கொன்று விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் உற்றுப் பார்த்துத் தான் அதை அடித்தோம் இருந்தாலும் அது எப்படி வேதனைப்பட்டதோ சூரியன் காந்த சக்தி கவர்ந்த அந்த விஷமான உணர்வலைகள் கரு முட்டைகளாக நம் ரத்த நாளங்களில் பரவிச் சுழலத் தொடங்கி விடுகின்றது.
 
நம் ரத்தம் போகும் பாதை எல்லாம் சுழன்று செல்லும் காற்று மண்டலத்தில் தூசிகள் எப்படிச் சுழல்கின்றதோ ரத்த நாளங்களில் அது ஊடுருவி மிதக்கும்.
 
அதாவது…
1.தரையிலே சக்கரம் வைத்து வாகனங்களை ஓட்டுகிறோம்
2.கடலிலே துடுப்பை வைத்துப் படகினைத் தள்ளுகின்றோம்
3.நீருக்குள் ஓடுவது போன்று இங்கே காற்றலைகள் படர்கின்றது… இரத்த நாளங்களில் அந்த அணுக்கள் சுழல்கின்றது.
4.இப்படிச் சுழன்று வந்தாலும் சுழற்சியின் தன்மையில் எந்த உறுப்புகளின் மீது மோதி அங்கே தேங்கி நிற்கின்றதோ அதற்குள் ஒட்டுகின்றது.
 
முட்டையைக் கோழி அடைகாக்கும் பொழுது அதனின் பருவமான பின் ஓடை விட்டு குஞ்சு எப்படி வெளி வருகின்றதோ அதைப் போன்று
1.இரத்த்த்தில் கருமுட்டையாக இருக்கும் விஷத்தை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
2.அந்த அணுவின் தன்மை நம் உடல் உறுப்பின் பாகத்தில் ஒட்டிக் கொள்கின்றது
3.பின் அந்த விஷத்தின் தன்மை நுகர்ந்து தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.
 
தேள் கொட்டினால் எவ்வளவு விஷமோ எப்படிக் கடுகடுக்கின்றதோ இதைப் போல கடுகடுக்கச் செய்யும் அணுக்களாக அது ருப் பெற்று விடுகின்றது.
 
அப்படி அணுவாக விளைந்து விட்டால் அது தன் உணவுக்காகப் பசிக்கு ஏங்கும். அப்படி ஏங்கப்படும் பொழுது அதே உணர்வை நம் உடலுக்குள் இருக்கும் உயிர் அந்த உணர்ச்சியை உள் நின்று இயக்கப்படும் பொழுது அது ஆணையிடுகின்றது.
 
கண்ணின் புலறிவுக்கும் உடலின் நிலைகளுக்கும் சுவாசிக்கும் மூக்கிற்கும் இந்த உணர்வுகளைக் கவர்ந்த பின்
1.கண் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.சுவாசித்த உணர்வோ உயிருக்குள் சென்று இந்த உணர்வலைகளை உடலுக்குள் பரவச் செய்து
3.உருவான அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றது இந்த உயிர்.
 
செடி கொடிகளை வளர்த்த பின் சூரியன் அதிலிருந்து வெளிப்படும் சத்தைக் கவர்ந்து வைத்து அதில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே உணர்வின் கிளர்ச்சி எழுந்து அதே செடியாக விளைந்து அதன் வித்துக்களை மீண்டும் உருவாக்குவது போன்று
1.நாம் நுகர்ந்தறிந்த அந்த விஷமான உணர்வுகள் கருவாகி உடலுக்குள் தேங்கிய பின் அணுவாக மாறிவிட்டால்
2.அந்த உணர்ச்சியைத் தூண்டி இந்த உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது நம் உயிர் மற்ற உறுப்புகளுக்கு ஆணையிடுகின்றது.
3.அந்த ஆணையிடும் சாதனம் சிறுமூளை.
4.இந்த உணர்வுகள் பட்டபின் ஆணையிட்டு உணர்வினை கவர்ந்து நுகரச் செய்து உயிருடன் இணைக்கச் செய்து உடல் உறுப்புகளில் பரப்பச் செய்கின்றது.
 
ரத்த நாளங்களில் இப்படிப் பரவி வருவது விஷத்தின் அணுக்களாகப் பெருக்கமாகின்றது. அது உணவாக எடுத்து விஷத்தின் அணுக்களாகத் தன் இனமாகப் பெருகத் தொடங்குகிறது.
 
ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
 
தேள் நம்மைக் கொட்டி விடுமே என்று நம்மைக் காக்கத் தான் அதை அடித்தோம். ஆனால் அது வேதனைப்பட்டுத் துடித்த உணர்வலைகள் நம் ரத்தங்களில் இப்படி விஷமான அணுக்களாகப் பெருகுகிறது.
 
தேளின் உயிரானமா மனிதனாகப் பிறக்கின்றது ஆனால்
1.தேளின் விஷத்தன்மை நம் இரத்த நாளங்களில் அணுக்களாகப் பெருகும் பொழுது மூட்டுக்கு மூட்டு அது பளீர்ர்ர்… என்று மின்னும்.
2.உறுப்புகளின் சில பாகங்களுக்குள் சென்றால் ஊசி தைப்பது போல் பளீர் என்று மின்னும்.
3.அந்த உணர்வலைகள் அங்கே பரவி நம் உடலில் வேதனை உருவாக்கும் அணுக்களாகப் பெருகி விடுகின்றது.
 
இதைத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சாஸ்திரம் கூறுகின்றது.
 
நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் உயிர் அந்த உணர்வின் அணுவாக உருவாக்கி விட்டால் அந்த அணு தன் இனத்தைப் பெருக்கி விடும். அது தன் இனமாக எந்த அளவிற்குப் பெருக்குகின்றதோ அதன் உணர்வின் தன்மை கொண்டு அது வளர்ச்சிக்கு வருகின்றது.
 
இந்தப் பேருண்மைகளை எல்லாம் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது

மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது


உயிரணுவின் ஈர்ப்பின் செயலால் ஆத்ம நிலை பெற்று ஜீவ பிம்பம் பெற்றிடும் செயலில் சரீரத்தினுள் அடக்குவது பஞ்சபூதங்கள் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்.
 
இவற்றின் கூறுகள் மூலசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலில்... அளப்பரியா அவைகளின் செயல் நிகழ்வுகள் இயல்பாக இயங்கிடும் சக்தி அண்டசராசரம் முழுவதிலும் உண்டு.
 
மனிதன் என்ற சரீரத்தினுள்ளும்... சரீரம் பெற்றிட்ட உயிர்த்தொகைகள் அனைத்தினுள்ளும் அந்தப் பஞ்சபூதங்களே கட்டுக்குள் அடங்கிச் செயல் புரிகின்றன.
 
ஆனால் பகுத்தறிவு கொண்ட மனிதன்...
1.அந்த ஆற்றலின் துணையினால் மனதின் இயக்க சுதந்திரம் பெற்று வாழும் வகைகள் அறிந்த பின்னும்
2.பஞ்சபூத சக்தியைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனிதன் உரைக்கின்றான்... “மனதினை அடக்க இயலவில்லை என்று…”
 
பிறர் தர்ம செய்கையால் ஞானத்தின் வழியில் நிற்போர் மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது. ஏனென்றால்
1.மற்றவர்களின் காரியங்களால் நாம் பாதிக்கப்படும் நிலை பெறுவதல்ல.
2.பிறர் மேல் நாம் கொண்டுள்ள கருத்துக்களால்... “அவர்களின் செயல்கள்...” நம்மைப் பாதிப்பதாக எண்ணுகின்றோம்.
 
ஆவேச உணர்வுகள் நீக்கம் பெற்று ஜெபநீர் ஆடிடவே அழைக்கின்றோம்
 
1.”வலைஞன்வீசுகின்றான் வலை. அந்த வலையினுள் படுகின்ற மீன்களைத் தன் ஆகார நியதிக்கே கொண்டு செல்கின்றான்.
2.அவன் பற்றியது ஒன்று அப்பற்றும் பொருளினால் அவனுள் குடிகொண்ட குறிக்கோள் மற்றொன்று.
 
இடையில் நடைபெறும் காரண காரியங்களின் சூட்சுமப் பொருளை அறிந்து கொண்டவனப்பா நீ.
 
1.தன்னுள் சுரந்து வெளிவரும் ஓர் பசையினால் வலையைப் பின்னுகின்றது “சிலந்தி…” அதுவும் வலை விரித்தே காத்திருக்கின்றது.
2.தன் வலையில் விழும் சிறு உடல் ஜீவன்களை நேரடியாகத் தன் நிலைக்கே புசிக்கிறது.
 
மனக்கருவைக் குணங்களாகக் காணல் வேண்டும். ஆவேச நிலையின் இயக்கத்தைக்  காட்டிடவே பாடங்கள்,
 
ஆகாரத்தின் நிலைக்கு மற்றொரு பொருள் காட்டுவோம்.
 
1.”திகம்பரன் (சந்நியாசி) செய்யும் பூஜை... அவனும் ஆகார நியதியை அளித்தே
2.அறிந்து கொண்ட வழிமுறைகளால் “ஏதோ” ஒன்றினைப் பெற்றிட முயல்கின்றான்.
 
மேலே சொன்ன மூன்று நிலைகளையும் (வலைஞன், சிலந்தி, திகம்பரன்) விளங்கிக் கொள்…!
 
ஜெபத்தின் தன்மையாகச் சிந்தனையில் கொண்டு பார் ஆவேச நிலைகள் நமக்கு உரியனவன்று.
 
தாகவிடாய் கொண்டவன் அருந்த நீர் கேட்பான் தாகம் தீராமல் நீராட முயல்வானா…? ஞானமும் அத்தகையது தான்…!
 
1.தவசியே ஆனாலும் “அருந்த வேண்டிய பசி” ஒன்று உண்டு
2.ஞான தாகம் தீர்ப்பதே மகரிஷிகள் வழி காட்டிய போதனைகள்.
3.அதைப் பெற்று அந்தப் போதனையின் வழி நடந்து முனைவது மனக்குளத்தின் ஜெபநீர் ஆடிடவே.
 
உணர்வுகளை மாற்றிடும் ஆவேசம் நீக்கு...! என்றே இங்கே இந்தப் பாட நிலையில் பகர்கின்றோம்.