ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2024

மகரிஷிகளுக்கும் ஆசை உண்டு

மகரிஷிகளுக்கும் ஆசை உண்டு


ஒன்றின் துணையுடன் ஒன்றியே மற்றொன்றின் செயல் உள்ளது‌. தொடர் நிலை இல்லாத செயல் எதுவுமே இல்லை. பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற சக்தியை ஈர்த்துச் செயலாக்கும் சக்தி உண்டு.
 
வானமும் பூமியும் எதுவுமே ஒன்றின் தொடரில்லாமல் ஒன்றில்லை. வியாழனின் நிலையை அன்று கேள்விக்குறியாக்கி வியாழனில் இருந்து நம் பூமிக்கு எப்படி அணுக்கள் வந்து தோன்றின...? என்பதனை உணர்த்தத் தொடர் கொண்டு நிறுத்தியுள்ளேன்.
 
1.நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் வாழ்ந்த பூமிதான் வியாழன் மண்டலம்.
2.ஆனால் இன்று மனித உடல் கொண்ட அறிவு நிலையும் செயல் திறமையும்
3.எண்ணத்தின் வளர்ச்சி சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள் அங்கில்லை.
4.ஆனால் அங்கிருந்து வந்தவர்கள்தான் நாம் எல்லோரும்.
 
இம்மனித உடல் எய்தி வாழ்ந்திடும் ஆத்மாக்களில் முதலில் தோன்றிய உயிரணுக்களின் தொடர் சக்தி வியாழனிலிருந்து வந்ததுதான்.
 
நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் அங்கு வாழ்ந்த காலத்திலேயே தன் அறிவினால் எண்ணத்தில் ஜெயம் கொண்டு சூட்சுமம் கொண்டோரின் சக்தியினால் வியாழனின் சக்தித் திறனை நம் பூமி ஈர்த்து வாழப் பழகிக் கொண்டவுடன்
1.சூட்சுமத்தில் உள்ளோரால் (வியாழனிலிருந்து சூட்சுமம் கொண்டவர்கள்) நம் பூமியின் இயற்கையின் வியாழனின் சக்தித் தன்மை கூடி
2.நீர்நிலைகள் பெருக்கம் கொண்டு மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் பக்குவ நிலை வந்தடைந்த பிறகு
3.இச் சூட்சுமத்தில் அங்கிருந்து வாழ்ந்து வந்தவர்களால் அவர்களின் தொடர் சக்தியை இப் பூமியில் வளர விட்டு
4.அதன் தொடர் நிலையிலிருந்து வந்ததுதான் இக் கலிகாலம் வரை.
 
இச்சூட்சுமம் கொண்டு செயல்படுபவர்களிலும் தன் இனப் பெருக்கத்தைச் செயலாக்கும் ஆசை நிலையுண்டு.
 
எப்படி இன்று நம் பூமியில் வந்து வாழ்ந்து சூட்சுமம் கொண்ட முருக ஜெபத்துடன் ஒன்றிய போகரினால் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது செயலைக் கொண்டு பல மருத்துவ நிலைகளையும் பக்தி நூலையும் ஏடுகளையும் இப் பூமியில் பதியச் செய்தார்.
 
தன் நிலை உணரவும் தன் சக்தியின் சக்தியைப் பலருக்கும் பரப்பும் ஆசையுடன் செய்திட்ட நிலை போகரின் நிலை.
 
முருகரின் பக்தி கொண்டு முருகருடன் ஒன்றிய எண்ணம் கொண்டோருக்கெல்லாம் போகரின் சக்தியில் ஈர்த்து செயல்படுத்தி அவ்வட்டத்தின் வளர்ச்சியையே ஓங்கச் செய்கின்றார்.
1.மனித ஆத்மாக்களுக்கு மட்டுமல்ல ஆசை நிலை… ரிஷிகளுக்கும் அவ் ஆசை உண்டு… ஆசையில்லா விட்டால் எதுவுமே இல்லை
2.பேராசைப் பிடியில் சிக்குண்டு அடிமைப்படாமல் அன்பான ஆசையில் தான் அனைத்துமே செயல் கொள்கின்றது
3.வியாழனில் வாழ்ந்தவரின் ஆசையினால் நம் பூமி சக்தி பெற்றது.
4.நம் பூமியில் வாழ்ந்து செயல் கொண்டு சூட்சுமம் கொண்டோரினால் சந்திரனில் சக்தி நிலை கூடப் போகின்றது
5.சந்திரனுக்கு நம்மை ஒத்த உயிராத்மாக்கள் சென்று வாழ்வதற்கே இச் சூட்சுமம் கொள்வோரின் சக்தியினால் தான் செயல்படுத்திட முடிந்திடும்.
 
இப்பொழுது செப்பிடும் சந்திரனில் மனித ஆத்மாக்கள் வாழப்போகும் நாட்களின் நிலை, ஒரு வருடம் அல்லஇரண்டு வருடம் அல்லஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் ஆகலாம்.
 
பல கோடி ஆண்டுகளாய் பல நற் சக்திகளை ஈர்த்து இயற்கையிலே பல பொக்கிஷங்களைப் பெற்றிட்ட நம் பூமியே இக்கலியினால் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களினால் மாற்றம் கொள்ளப் போகின்றது.
 
நம் பூமியின் மாற்றத்தினால் இக்கலியினால் வந்த மனித ஆத்மாவினால் நிகழப் போகும் இயற்கையின் கொடுமையான மாற்றத்தினால் நம் பூமி மட்டுமல்ல இதன் தொடர்பினால்
1.ஒவ்வொரு மண்டலத்திற்கும் இம்மாற்ற நிலை ஏற்பட்டு
2.பால்வெளி மண்டலமும் நம் சூரியனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்
3.எழுத்திலும் எண்ணத்திலும் எண்ணத்தகா மாற்ற நிலை இக்குறுகிய காலத்தில் நிகழத்தான் போகின்றது.