ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2024

சந்திரனில் “இனி” ஏற்படப் போகும் மாற்றங்கள்

சந்திரனில் “இனி” ஏற்படப் போகும் மாற்றங்கள்


கலியின் மாற்றம் கொண்டு நம் பூமியின் நிலை மாற்றம் கொள்ளப் போகிறது என்று உணர்த்தினேன். அந்நிலை கொண்டு அனைத்து மண்டலங்களின் நிலையும் மாறுவதை உணர்த்தியுள்ளேன்.
 
இன்று நம் பூமியின் இயற்கை சக்தியைப் போல் சந்திரனின் இயற்கை வளமும் கூடப் போகின்றது. நம் பூமியில் கடல்கள் உள்ளதைப் போல் ஆழ்ந்த நீர் நிலை அங்கு இல்லை.
 
பூமியில் வட துருவ, தென் துருவ நீர் நிலையின் சக்தியினால்
1.இப்பூமி சுழலும் நிலையில் காற்று மண்டலம் இந் நீர் நிலையிலிருந்து வருவதினால்
2.இவ்விரண்டு பக்க நீர் நிலையில் ஒன்றை ஒன்று உலகம் சுழலும் நிலையில் ஈர்க்கும் சக்தியும் ஏற்படுவதினால்
3.நம் பூமிக்குக் காற்று மண்டல சக்தியுடன் நான்கு நிலை கொண்ட கால நிலையினால்
4.இங்கு ஏற்படும் மழையும் மற்றச் சீதோஷ்ண நிலைகளின் மாறு கொண்ட சக்தியும் நம் பூமியின் பொக்கிஷமாய் உள்ளது.
 
தைப் போல் இக்கலி மாறும் தருணத்தில் சந்திரனின் ஈர்ப்புடன், சந்திரனுக்கு அருகாமையில் நீரை ஏற்படுத்தும் அமில நிலை கொண்ட உப்புக் கலந்த அமில சக்தி கொண்ட நட்சத்திர மண்டலங்கள் அதிகமாய் உள்ளன.
 
1.மாறும் தருவாயில் இன்று இம்மனிதன் சந்திரனுக்குச் சென்று அவனது சுவாச அலையை அங்கு விட்ட நிலையிலும்
2.இப்பூமியிலிருந்து ஆத்மாக்களில்லா ஏவுகணைகள் பல அந்நிலைக்குச் சென்று, இப்பூமியின் சக்தி சந்திரனில் இன்று செயல்படும் நிலையிலும்
3.நம் பூமியின் பார்வை நிலையில் நம் பூமியின் ஈர்ப்பு சக்தியும் சந்திரனில் நிறைந்துள்ள நிலையிலும்
4.தெரிந்தோ தெரியாமலோ சந்திர நிலவை, அப்பௌர்ணமி நாளை நம் ஆத்மாக்களில் பலர் ஆண்டவனாய் வழிபட்டதின் நிலையில்
5.நம் பூமியின் ஆத்மாக்களின் எண்ண சக்தியின் அலையும் சந்திரனில் இன்று குடி கொண்டுள்ள நிலையில்
6.நம் பூமியில் இருந்து ஈர்த்து அமிலப்படுத்திய நீர் நிலை கொண்ட அமில சக்திகளெல்லாம் சந்திரனுடன் சேரும் நிலையில்
7.இன்று சந்திரனில் நாம் காணும் அப்பள்ள நிலைகளே நம் பூமியின் நிலை போல் சந்திரனில் இரண்டு பக்கங்களிலும் நீர்நிலை கூடப் போகின்றது.
 
நம் பூமியில் உள்ளதைப் போல் தாவர வளர்ச்சி நிலையும் செயல் கொண்டு நம் பூமியின் சக்தி நிலைகொப்ப வளரும் நிலை சந்திரனுக்குக் கூடப் போகிறது.
 
அந்நிலையில் இருந்து நம் பூமியில் உள்ள ஆத்மாக்கள் நம் பூமியின் இக்கலி மாற்றத்தில்நம் பூமியின் சுவாச நிலையின் சக்தி கொண்ட சந்திரனில் வாழப் போகின்றார்கள்.
 
எந்நிலை கொண்டு…?
 
நம் பாட நிலையில்தான் இப்பூமியில் வாழ்ந்த ஆத்மாக்கள் மாறு கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்திட முடியாது என்று உணர்த்தியுள்ளோம்.
 
இப்பூமியின் ஆத்மாக்கள் எப்படிச் சந்திரனுக்குச் சென்று வாழ்ந்திடும்…? என்ற எண்ணம் இதைப் படிப்பவருக்குத் தோன்றிடலாம். தொடர் நாளை…!