ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2024

நம் பூமியில் இன்றுள்ள மூல சக்தியே நம் பூமிக்குள்ள கடலும் நீரும்தான்

நம் பூமியில் இன்றுள்ள மூல சக்தியே நம் பூமிக்குள்ள கடலும் நீரும்தான்

 

நம் பூமிக்கு இரண்டு பக்கமும் வடதுருவ, தென்துருவக் கடல்களின் நிலையினால் இப்பூமி முழுவதற்குமே ஆங்காங்குள்ள நீர்நிலைகளும், ஆறு குளங்களும் இப்பூமியில் பெய்திடும் மழையின் நிலையும் கடல்களினால் தான் இப்பூமி முழுவதற்குமே நீர் நிலை பெறும் சக்தி வந்தது.
1.காற்றுடன் நீர் இல்லா விட்டால் தாவரங்கள் மட்டுமல்ல
2.இப்பூமியில் வளர்ந்திடும் எக்கனி வளங்களும் எவ்வுயிரணுவும் இன்றைய நிலை கொண்ட வளர்ச்சிக்கு வந்திருக்க முடியாது.

எவ்வமிலமும் இந்நீருடன் தன் சக்தியைச் சேமிக்கும் சக்தி கொண்ட பூமி இது. இன்று நம் பூமியில் கடல்கள் உள்ள இடங்களில் கடல்களில் உள்ள நீர் பகலில் குறைந்தும் இரவில் அதிகப்பட்டும் உள்ளது.

அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களிலும் மற்ற நாட்களைவிட இந்நீர் அதிகமாகப் பொங்கி வரக் காண்கின்றோம்.

பகலில் சூரியனின் நேர் ஒளி படும் நிலையில் பூமியின் கோளத்தின் அக்கடலின் நீர் உள்ள நிலையில் நேராய் சூரியனின் ஒளி பட்டவுடன் அந் நீரிலிருந்து ஆவியான அமிலங்கள் காற்றுடன் கலந்துவிடுகிறடு.

பின் பூமி சுழலும் நிலைகொண்டு இரவில் சூரியனின் ஒளிக்கதிர் அந்நீர் நிலையில் படாமல் அக்கடல் நிலையுள்ள இடமும் இச்சுழலும் தன்மையில், நம் பூமியின் அசைவைக் கொண்டு இக்கடல் நீரும் வட துருவமோ அல்லது தென் துருவமோ இந்நிலையில் இரவு நேரத்தில் அக்கடல் நீர் அந்நிலையில் மோதி,
1.பூமியின் சுழலும் வேகத்தில் இரவின் அசைவினால் வட துருவத்தில் மோதப்பட்டு
2.பகலில் ஆவியான இவ்வமிலமும் குளிர்ச்சி கொண்டு வட துருவ பூமியில்
3.படிவமாய்க் குளிர்ந்த நிலையில் பனிக்கட்டியாய் உறைந்து விடுகின்றது.

இப்பூமியின் வட துருவத்திலும் தென் துருவத்திலும் பாறை போல் உறைந்து குளிர்ச்சியான உப்புக் கலந்த அமில சக்தியைக் கொண்ட நீராய் உறைந்துள்ளது.

சூரியனின் ஒளி இரவில் இல்லாததினாலும், அவ்வுஷ்ண அலைகள் இக்கடலில் தாக்காததினாலும்
1.பகலில் ஈர்த்து ஆவியான நீர்களே
2.இரவில் அவ்வுறைந்த நிலை கொண்ட பகுதியில் இக்காற்றாலைகள் மோதி நீராய் வடியப் பெற்று
3.இரவில் கடல்களில் நீர் நிலைகளின் பெருக்கத்தைக் காண்கின்றோம்.
4.வட துருவம் தென் துருவம் இரண்டு பக்கத்திலுமே இந்நிலை கொண்ட சக்திதான் உள்ளது.

அமாவாசை அன்றும் பௌர்ணமி அன்றும் ஏற்படும் இவ்வணுக்களின் மாற்றத்தினால் இக்காற்று மண்டலத்தின் சக்தியில் சந்திரனிலிருந்து கிடைக்கப் பெறும்
1.குறைந்த அமாவாசையின் அணு சக்தியும் பௌர்ணமியில் கிடைத்திடும் அதிக அணு சக்தியும்
2.இவ்விரண்டு பக்கத்திலும் உறைந்துள்ள நீரின் அமில சக்தி மாற்றம் கொள்ளும் நிலையில் இக்கடல் நீர் “பொங்குகின்றது…”

இன்று இப்பூமிக்கு ஜீவனாய் பொக்கிஷமாய் அமைந்துள்ள இந் நீர் நிலைகள் வட துருவமாயும் தென் துருவமாயும் இப்பூமி சுழல்வதற்கே சக்தி கொடுத்து நிறைந்திருக்கா விட்டால் :நம் பூமிக்கு இம்மழையும் மற்ற நீர் நிலைகள் எவையுமே கிடைத்திருக்காது…”

ஜீவனாய் இப்பூமிக்கு இருக்கும் இச்சக்தி ஒவ்வொரு மண்டலத்திலும் மாறு கொள்ளுகின்றது.

சந்திரனில் நம் பூமியில் பெய்யும் மழையும் மற்ற நீர் நிலைகளும் இங்கு தேங்கியுள்ளதைப் போல் அங்கு மாறு கொண்ட நிலையில் சந்திரனின் நிலை கொண்டு இன்றுள்ளது.

இதுவே இப்பூமியின் மாற்றத்தினால் நம் பூமியின் சக்தியைப் போல் நம் பூமிக்கு அருகாமையில் பூமியுடன் அதிகத் தொடர்பு கொண்ட சந்திர மண்டலம் இருப்பதினால் “இப்பூமியின் நிலையைப்போல் சக்தியை வளர்க்கப் போகிறது…”
1.நம் பூமியைக் காட்டிலும் சுழலும் வேகம் குறைவு
2.ஆனால் மாற்றத்தில் சந்திரனின் சக்தி கூடி துரித வேகம் அதிகபடப்படுகின்றது.

துரித சக்தியின் வளர்ச்சியினால்… ஈர்ப்பு சக்தியின் இன்று செழித்து வளரும் நிலையில்லாமல் காற்றும் மழையும் குறைந்துள்ள நிலையில்… மழையென்றால்… நம் பூமியில் பெய்வதைப் போல் பூமி ஈர்த்து ஆங்காங்கு வெளிப்படுத்தும் பருவ மழைகளும் இக்கடலில் புயலால் ஏற்பட்டு உருக்கொண்டு வீசிடும் காற்றில் இருந்து… இங்கு பெய்யும் மழையின் நிலையும் இரவு பகல் என்ற மாற்றம் கொண்ட நிலையும் சந்திரனில் இல்லாமல் உள்ள இன்றைய நிலையே… இக்கலியின் மாற்றத்தினால்…
1.இப்பூமியின் சக்தியின் நிலையே
2.சந்திரனின் சக்தி நிலையுடன் செயல் கொள்ளப் போகின்றது.