ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2024

எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!

எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!


 
நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா.
 
இந்த உயிர் உடலில் இல்லை என்றால் நாம் இருக்க முடியுமா இந்த உயிர் இல்லை என்றால் இந்த உடலில் நாம் இல்லை. “உயிரின் இயக்கமாகத் தான் நாம் இருக்கின்றோம்…”
 
உயிர் பூமியிலே தோன்றி புழுவில் இருந்து பல கோடிச்ரீரங்களில் பட்சியாக பறவையாக மிருகமாக பாம்பாக தேளாக யானையாக புலியாக நரியாக நாயாக எத்தனையோ உடல்கள் பெற்ற நிலையில்
1.ஒவ்வொன்றிலும் தன்னைக் காத்துக் கொள்ள அதன் வழி கொண்டது காத்திடும் உணர்வே விளைந்தது.
2.அந்தக் காத்திடும் உணர்வு கொண்டு மனிதனாக உருவாக்கியது உயிர்.
 
ஆகவே எத்தகைய தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்றும்
1.தீமையிலிருந்து விடுபடும் நிலையாக என் உடலாஎப்படி ஆக்கினாயோ
2.இந்தத் தீமையை நீக்கிய உணர்வின் நினைவெல்லாம் எனக்குள் வர வேண்டும்.
 
நான் எத்தனை துன்பங்களை பட்டேனோ துன்பங்களிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றேனோ இதைப் போல எனது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள்
1.எனக்குள் துன்பத்தையும் துயரத்தையும் வேதனையும் வெறுப்பையும் ஊட்டாது
2.அந்த நினைவெல்லாம் எனக்குள் துன்பத்தை நீக்கிய உணர்வின் சக்தியாக நான் பெற வேண்டும்.
 
தைத் தான் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று சொல்வது…”
 
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ துன்பத்தைக் கடந்து என்னை மனிதனாக உருவாக்கினாயோ அந்த நினைவெல்லாம் எனக்குள் வரவேண்டும் என்று தான் நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் என்று பாடலைப் பாடுவது.
 
அதாவது
1.தீமைகளை நீக்கிடும் இந்த உடலான நிலைகள் இருந்து ந்த நினைவெல்லாம்
2.தீமைகளை நீக்கிடும் அந்த அருள் சக்தியாகன்னிலே வளர வேண்டும் என்று நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும்
 
உலகை எல்லாம் அறியக்கூடிய சக்தியை நீ எப்படிக் கொடுக்கின்றாயோ நான் நுர்ந்த உணர்வை எனக்குள் அறிவிக்கின்றாயோ இதைப்போல
1.உன் உணர்வின் தன்மை எதுவோ உன் ஒளியின் தன்மை எதுவோ
2.என் உடலின் அணுக்களும் அவ்வழியே ஆக வேண்டும் என்று
3.எல்லா நினைவையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் என்று உயிரிடம் வேண்டி கேட்கின்றோம்
 
நான் அதைச் செய்வேன். இதைச் செய்வேன் என்ற நிலையில் எண்ணம் கொண்டு உண்மைகளை உணராது பல எண்ணங்களில் தனது ஆசையைக் கூட்டினால் அதன் வழி வளரப்படும்பொழுது
1.எனக்குள் தீமை வராது தடுத்துக் கொள்ள
2.ல நினைவுகள் நமக்குள் வராதபடி நீயே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
 
அதைத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாத பரிபக்குவமான நிலைகளை நான் பெற எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா…! என்று நாம் வேண்டுகின்றோம்.
 
இவ்வாறு எண்ணும்பொழுது நமது உயிர் ஓம் நமச்சிவாய த்தகைய நிலைகளை நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
 
நாம் பக்குவ நிலை பெற வேண்டும் என்று ஏங்கினால் அந்த உணர்வின் அணுவாக்கி அதன் உணர்வை உணவாக்கி அந்த உணர்வின் தன்மை நாம் நுகரப்படும் பொழுது
1.சிந்தித்துச் செயல்படும் திறனும்
2.தீமையிலிருந்து விடுபடும் உணர்வும்
3.நாம் பக்குவப்படும் நிலையும் நமக்குள் உருவாகின்றது.
 
ஆகவே தான் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய். ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டச் சொல்கிறோம்.
 
நாம் எண்ணும் உணர்வின் தன்மை ஓம் நமச்சிவாய ன்று உடலாக்கினாலும் அதன் உணர்வின் தன்மை அணுவின் கருவாக அணுவாகும் போது… அது உணவுக்காக உந்தப்படும் பொழுது அந்த நினைவு பக்குவப்படும் உணர்வின் எண்ணங்கள் எனக்குள் உருவாகி அதன் வழி என்னைக் காத்திடும் அந்த அருள் நிலை பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று நாம் எதை எண்ணுகின்றோமா அதை நமது உயிர் உருவாக்குகின்றது என்று நாம் அறிவதற்குத் தான் ஈசனிடம் இந்த உணர்வினை வேண்டுகின்றோம்.