ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 1, 2024

“நல்ல மழை பெய்ய வேண்டும்” என்று தினமும் நாம் தியானிக்க வேண்டும்

“நல்ல மழை பெய்ய வேண்டும்” என்று தினமும் நாம் தியானிக்க வேண்டும்


ப்பொழுது நாம் மழை இல்லை மழை இல்லை…” என்று தான் சொல்லிப் பழகுகின்றோம். காரணம்… பூமிக்கு அடியில் உள்ள நீர் எல்லாம் போய்விட்டது. உறிஞ்சி எடுத்து எடுத்து எல்லாம் போய்விட்டது சில பகுதிகளில்…
 
ஆயிரம் அடி ஆழத்திற்குப் போர் போட்டாலும் கூட தண்ணீர் காணாமல் போகின்றது. அந்த அளவிற்கு வந்து விட்டது.. இனி இருக்கக்கூடிய காலமோ அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லாது போகலாம். அதுவும் இன்னும் கொஞ்சம் இரண்டு மூன்று மாதங்கள் போனால் எப்படியோ தெரியவில்லை.
 
மாடு கன்றுகளுக்குக் கூட சில இடங்களில் தண்ணீர் இல்லை. நமக்கே தண்ணீர் இல்லை. ஆகவே
1.எது எப்படி இருந்தாலும் மனதை நன்றாக வலுப்படுத்தித் தியானிப்போம்.
2.இதற்காக இரவு படுக்கும் பொழுது ஒரு பத்து நிமிடம் நல்ல மழை பெய்ய வேண்டும் நாடு செழிக்க வேண்டும் என்று சிறிது நேரம் தியானியுங்கள்.
 
ஓம் ஈஸ்வரா குருதேவா!
 
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் கலந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சொல்லி உங்கள் கண்ணின் நினைவை இதே மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள்.
 
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர வேண்டும் மேகங்கள் கூடி நல்ல மழை பெய்யக்கூடிய அந்தச் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நினைவனைத்தும் அந்த மேகத்தில் செலுத்துங்கள்
2.இந்த மாதிரி செலுத்தும் பொழுது உங்கள் உடலில் ஒரு குளிர்ந்த காற்று வரும்…” வந்தது என்றால் ரொம்ப நல்லது.
 
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
உங்கள் நினைவெல்லாம் வான் வீதியில் செலுத்தி
1.மேகக் கூட்டங்கள் கூட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
2.அதிலே அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
 
இந்த மாதிரி நாம் வெளியிடக்கூடிய உணர்வுகள் எல்லாமே ரேடியோக்களில் எப்படி ஒலி அலைகளைப் பரப்புகின்றார்களோ இதே மாதிரி நாம் வெளியிடும் அலைகளைச் சூரியன் கவர்கின்றது.
 
இதே உணர்வு கூடக் கூட எதிலே செலுத்துகின்றோமோ… அதிலே பதிவாகிவிடும். மழை நீரில் இருந்து தான் எல்லாம் விளைகின்றது.
1.அதனால் இதை அங்கே தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
2.நாம் இந்த மூச்சுலைகளை விடப்படும் பொழுது நாம் எதை நினைத்தோமோ அந்த அலைகள் கூடி
3.மழை பெய்யும் பொழுது தாவர இனங்களில் பட்டு நல்ல தாவர இனங்களாக விளைகின்றது.
 
நம்முடைய உணர்வுகள் மோதி நாம் எந்த இடத்தில் எடுத்துச் செயல்படுத்துகின்றோமோ அங்கே மழை வரும். இதே மாதிரி உங்களுடைய மூச்சும் பேச்சும் நாடு செழிக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
சும்மா இதைக் கேட்டு விட்டுப் போனது என்று இல்லாமல் இரவு படுக்கும் போது” ஒரு ஐந்து நிமிடமாவது இதே மாதிரி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வானில் பரவி மேகங்கள் கூட வேண்டும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
முந்திக் காலத்தில் எல்லாம் காடுகளுக்குச் செல்வார்கள். தண்ணீரைக்  குட்த்தில் கொண்டு போய் ஊற்றிவிட்டுத் திரும்ப வரும்பொழுது மழையைக் கூட்டிக் கொண்டு வருவார்கள்.
1.முன்னாடி வந்து கொண்டிருப்பார்கள் மழை பெய்யும்.
2.இந்த மாதிரி ஒரு தெய்வீகப் பண்பு கொண்ட நமது நாடு தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
 
அந்தக் காலம் எல்லாம் கடந்து போய்விட்டது.
 
வரக்கூடிய விஷக்காலங்களில் இனியாவது நாம்
1.நமது வீடு நன்றாக இருக்க நமது ஊர் நன்றாக இருக்க நமது உலகம் நன்றாக இருக்க
2.தினம்தோறும் சிறிது நேரம் பிராத்தனை செய்தால் மிகவும் நல்லது.
 
வீடும் ஊரும் உலகமும் எல்லாம் நமக்குள் இருக்கின்றது. எல்லாருடைய உணர்வும் நமக்குள் இருக்கின்றது. ஊரில் இருக்கக்கூடிய மக்களின் உணர்வு அனைத்தும் நம் உடலுக்குள் இருக்கின்றது யாரும் பிரிந்து செல்லவில்லை.
 
ஆகவே எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக மழைக்காக தியானமிருங்கள். இந்த நாடு நலமாக இருக்க வேண்டும் என்று அ;லைகளைப் பாய்ச்சுங்கள். உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
1.அருளைப் பெறுங்கள் இருளை அகற்றுங்கள்.
2.அகஸ்தியன் கண்ட வழியில் நாம் உலகைத் தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்வோம்
3.உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம் தவமிருப்போம்.