ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 3, 2024

தியானம் செய்யும் போது “உயிரின் காந்தத்தைப் பயன்படுத்த வேண்டிய” சரியான முறை

தியானம் செய்யும் போது “உயிரின் காந்தத்தைப் பயன்படுத்த வேண்டிய” சரியான முறை


அகஸ்தியனும் அவன் மனைவியும் பூமியின் துருவத்தின் எல்லையை கடந்து அதிலிருந்து ஒளியாக மாற்றும் சக்தியைப் பெற்றனர்.
 
ஒளியான பின் இரு உயிரும் ஒன்றி அங்கே துருவ நட்சத்திரமாக நிலையாக இருக்கின்றனர். நம் பூமிக்கு வருவதை எல்லாம் ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.
1.இது எல்லாம் வேத நூல்களில் நாதங்கள் என்ற நிலைகளில் எழுதியுள்ளார்கள்.
2.ஆனால் சிற்றரசர்களுக்குள் போர்கள் வரும் பொழுது காலத்தால் மறைந்து விட்டதுகண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.
 
ஆனால் இந்தக் காற்றில் இருக்கின்றது.
 
அதைப் பெறச் செய்வதற்குத்தான் நமது குருநாதர் அனுபவரீதியாக 20 வருடம் காடு மேடு நகரம் எல்லாம் எம்மை அலையச் செய்து
1.நீ நுகர்ந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.நீ அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று பக்குவப்படுத்தி
3.எனக்குள் துன்பத்தை உண்டாக்கி எது துன்பத்தை உண்டாக்குகின்றது…?
4.எந்த சந்தர்ப்பத்தில் உண்டாகிறது…? அதை நீ எப்படி மாற்ற வேண்டும்…? என்ற உபாயத்தைக் கண்டறிந்து
5.அந்த இருபது வருட அனுபவத்தைத் தான் இப்பொழுது நான் உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு).
 
ஒருவருக்கொருவர் சண்டை போடுகின்றார்கள். அதைக் கேட்டவுடன் அந்தச் சந்தர்ப்பத்தில் அது உங்கள் உடலில் அது விளைகின்றது. ஆனால் இப்பொழுது ங்களுடைய சந்தர்ப்பம்
1.எனக்கு குருநாதர் காட்டியதை எல்லாம் தெரிந்து உங்களிடம் சொல்கின்றேன் நீங்கள் கேட்கின்றீர்கள்இது நல்ல சந்தர்ப்பம்.
2.என்னை நீங்கள் கண்ணால் பார்க்கின்றீர்கள்இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகின்றது
3.நுகர்கின்றீர்கள்… உங்கள் உயிரில் ந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. நான் சொல்லும் உணர்வை எல்லாம் தெரியச் செய்கின்றது.
 
நீங்கள் அதை நுகரப்படும் போது உங்கள் உமிழ் நீர் மாறும். அப்பொழுது உங்கள் சாப்பாட்டுடன் கலந்து சிறு குடலுக்குப் போய்ச் சேரும் இப்படி சிறுகச் சிறுக பெருங்குடலுக்குப் போய்ச் சேரும்.
 
இப்பொழுது நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது வாயில் உள்ள ருசியெல்லாம் வித்தியாசமாக மாறும்.
1.உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது உங்கள் உடலுக்குள் அப்படியே ஜிலுஜிலுவென்று இருக்கும்
2.விஷத்தன்மை இருந்தால் அதெல்லாம் குறைந்து போவதை உங்களால் உணர முடியும்.
 
ஏனென்றால் மணிக்கணக்கில் உட்கார வைத்து எப்படியும் இந்த நல்ல சத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்கின்றேன்.
 
சண்டை போடுவதை வேடிக்கை பார்த்தீர்கள் என்றால் ந்த உணர்வெல்லாம் உமிழ் நீராக மாறி உடலுக்குள் குடல் உபாதைகள் கல்லீரல் மண்ணீரலில் வலி நெஞ்சு வலி என்று இதெல்லாம் வந்துவிடும்.
 
ஆனால் இப்போது இந்த உபதேசங்களைக் கேட்கும் போது இந்த சந்தர்ப்பம் ஞானிகள் உணர்வை நீங்கள் நுகர நேருகின்றது… அந்தச் சத்து உங்கள் சிறுகுடல் பெருங்குடலுக்குப் போய்ச் சேருகின்றது, ஆகாரத்துடன் கலந்து நல்ல இரத்தமாக மாற்றிக் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது.
 
இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் நல்ல உணர்வுகள் பதிவாகின்றது. என்னுள் விளைந்தது உங்கள் உடலில் பதிவாகிறது.
1.ஆனால் காற்றிலேயும் இருக்கிறது
2.எந்தக் கண் வழி பதிவு செய்தீர்களோ உடனே இழுத்து உங்களுக்குள் கவர்ந்து கொள்ள முடியும்.
 
உதாரணமாக சங்கடமாக இருக்கின்றார்கள்… கஷ்ட்த்தைச் சொல்கின்றார்கள் நீங்கள் கேட்கின்றீர்கள். கேட்கும்போது அதே உணர்வுகள் நமக்குள் என்ன செய்கின்றது…? அவர் மேல் பற்று இருந்தால் நமக்குள் ஏதோ தலை சுற்றுவது போல் வரும்நல்ல மனிதருக்கு இப்படி ஆகிவிட்டது…! என்று.
 
இப்பொழுது இந்த மாதிரி நேரத்தில் அவர்கள் உணர்வு நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்…?
 
இப்பொழுது நீங்கள் கேட்டுக் கொண்ட முறைப்படி
1.ஈஸ்வரா…! என்று சொல்லிவிட்டு கண்ணிலே ஏங்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வந்தது இந்தப் பூமியில் இருக்கின்றது.
3.அதை நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் இழுக்கின்றது
4.கண்ணின் நினைவை உயிரோடு கொண்டு விட்டவுடன் இதிலே கொண்டு பாய்ச்சி விடுகிறது.
5.அப்போது அந்த உயிரான காந்தம் என்ன செய்கின்றது…?
6.இங்கே மூக்கு வழியில் செல்வதை நிறுத்தி விடுகின்றதுபுருவ மத்தி வழி கூடி இழுக்கிறது.
7.அப்பொழுது கெட்டதை எல்லாம் நிறுத்திவிடுகின்றது.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் என் உடல் முழுவதற்கும் படர்ந்து என் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று சொல்லிக் கட்டளையிட்டால் இங்கே வந்துவிடுகிறது.
 
அப்பொழுது முன்னாடி உஷாராகிக் கொள்கின்றது, கெட்டதை உள்ளே போக விடாமல் தடுக்கின்றது,
1.உடலுக்குள் வலிமையாகி அழுத்தமான பின்பு ஆன்மாவில் இருப்பதைத் தள்ளி விடுகின்றது
2.தள்ளி விட்டவுடன் பிறகு நமக்கு சங்கடம் என்று எதுவும் வராது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் அங்கே வரும்!
 
ந்த முறைப்படி செய்ய வேண்டும்.
 
திட்டியவர்களை எண்ணும் பொழுது எப்படி உங்கள் வாழ்க்கையில் குறை நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றதோ அதைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் அது உங்களுக்குள் வராமல் இப்படித் தடுத்துப் பழக வேண்டும்.