ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2024

மண்டல வளர்ச்சி

மண்டல வளர்ச்சி


மண்டல வளர்ச்சி நிலை தோன்றிய நிலையை ஆரம்ப பாட வரிசையில் உணர்த்திட்டால்தான் இன்றளவு உணர்த்திய பாட நிலைக்கு ஜீவன் அளித்த நிலை தோன்றிடும்.
 
1.எறும்பைக் காட்டிலும் சிறிய நுண்ணிய உயிரணு கொண்ட உயிராத்மா
2.அவ்வுயிரணுவுடன் மற்றோர் உயிராத்மாவின் சேர்க்கையில் ஒன்றுடன் ஒன்று ஜீவ சக்தி பின்னிய நிலையில் இரண்டும் ஐக்கியப்பட்டு
3.தன் ஆவி நிலையுடன் பால்வெளி மண்டலத்தின் பல நிலைகள் கொண்ட ஆவியான அமில சக்திகள்
4.இவ்விரண்டு ஆத்மாவுடன் இதன் சேர்க்கையுடன் ஆவியாய் மோதுண்டு
5.இதன் ஈர்ப்பு நிலையுடன் இதன் வட்டத்திலேயே இவ்வாத்ம அமிலமுடன் பல சக்தி நிலைகள் கூடி
6.இவ் ஆவியான அமிலமே உறைந்த நிலையில் திடப்பொருளாய்ச் செயல்படுவதற்கு முன்
7.இவ்வாத்மாவின் ஈர்ப்பில் அமிலமுடன் கலந்து வந்த உயிர்த்துடிப்புக் கொண்ட மற்ற உயிரணுக்களின் இவ் ஈர்ப்பு நிலையில் சிக்கி
8.இதன் வட்டத்திற்குள் வந்த பிறகு இதன் ஆவி அமிலமும் இச் சுழற்சியில் காற்றும் நீரும் படும் நிலையில்
9.திடப்பொருளாய் கெட்டிப்பட்ட உயிர்த்துடிப்புக் கொண்ட திடமாய் ஆகின்றது.
 
இதன் வளர்ச்சியே அமிலத்தின் ஈர்ப்பாய் அதிகப்படுகின்றது. அமிலத்தை ஈர்க்கும் சக்தி இவ்விரண்டு ஆத்மாவின் உயிர் சக்தியுடன் உட்சென்ற உயிரணுக்களின் பெருக்கமும் இச்சிறிய கோளமாய் உருப்பெற்ற இதன் ஈர்ப்பின் வட்டத்தில் இதற்கு உணவாய் இவ்வுயிரணுக்களின் சக்தி தான் இது வளரும் நிலைக்கு உதவுகின்றது.
 
உயிரணு இவ்வட்டத்திற்குள் வந்தவுடன் அதன் சக்தியை உணவாய் ஈர்த்து அதன் சக்தியை உண்டு அதில் வெளிப்பட்ட அழிவு நிலை ஆவியாய் இச்சிறிய மண்டலமாய் வளரப் பெறும் மண்டலம் வெளிப்படுகிறது.
 
இதன் தொடர்ச்சியிலேயே ஆரம்பத்தில் எவ்வுயிரணுவின் சக்தியை உண்டு மலமாக்கி அதன் ஆவியை வெளிப்படுத்திப் பழக்கப்பட்டு வாழ்ந்ததோ அதே நிலையில் இம்மண்டலம் கக்கும் உஷ்ண அலையைப் பொறுத்த அமிலங்களை ஈர்த்து ஈர்த்து அதன் தொடர்ச்சியிலேயே சிறுகச் சிறுக வளர்ச்சி கொள்கிறது.
 
வளர்ச்சியில் தன் சுழலும் வேகத்தினால் பால்வெளி மண்டலத்தில் இச்சேமித்த அமில கோளமுடன் இது சுழலும் வேகத்தில் இதன் ஈர்ப்பில்
1.இதன் அமிலத்தன்மையுடைய இதன் வர்க்க அமிலமும் மோதி மோதி
2.ஆவியாய் அமிலமாய் திடமாக வளர்ந்து கொண்டே கோளமாய் உருக்கொள்கின்றது.
 
இதன் நிலையில் உயிரணுக்களின் சேர்க்கையும் ஏற்பட்ட நிலையில் இவ்வுயிரணுக்களின் நிலையும் மற்ற அமில சக்தியின் நிலையும் இதனுடன் மோதுண்டு வளர்ச்சி பெறும் நிலையில் இக்கோளத்தின் துடிப்பு நிலை துரிதம் கொள்கின்றது…
 
இக்கோளம் உண்டு கழிக்கும் கழிவின் உஷ்ணத்தினால் ஒன்று நூறாய் நூறு ஆயிரமாய் ஆயிரம் கோடியாய் பல கோடி உயிரணுக்கள் இக்கோளம் பந்து நிலைக்கு வருவதற்குள் வளர்ச்சியில் பெருகி விடுகின்றன.
 
ஒன்றிற்கு உணவு ஒன்று அளிக்கும் சக்தியின் கூட்டினால் இக்கோளத்துடன் உயிரணுக்களின் வளர்ச்சியினால் தான்அதனதன் ஆகாரத்தை அது அது எடுத்து உண்டு வெளிப்படுத்தும் சுழலில் இருந்து அதன் உஷ்ண அலையில் அதன் சுவாச நிலைக்கொப்ப அக்கழிவிலிருந்தே பல உயிரணுக்கள் தோன்றி இந்நிலையின் தொடர் வளர்ச்சியினால் இக்காற்றுடன் கலந்த நீரும் இவற்றிற்கு உரமாய் அமைய இதன் தொடர்ச்சியிலேயே இக்கோளம் இன்று நாம் காண்கின்றோமே நட்சத்திர மண்டலமாய் அவற்றிற்கும் மேல் பெரிய கோளமாய் உருப்பெற்ற பின்பே தாவர வளர்ச்சி நிலை இக்கோளங்களில் வளர்கின்றது.
 
இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுணர்ந்த நிலைபோல் தான் ஆரம்ப கதியில் இக்கோளத்திற்கு மேல் பாசி படிந்த நிலைபோல் பச்சையான அமிலத்தில் இக்கோளத்துடன் ஆங்காங்கு படர்ந்து அந்நிலையின் வளர்ச்சித் தொடரில் அதன் சக்தி உருப்பெறும் மண்டலத்திற்கு உணவாய்ச் சென்று அதிலிருந்து வெளிப்படும் கழிவின் நிலையிலிருந்து மாறு கொண்ட காளான் நிலைக்கு வளர்ச்சி பெறுகிறது.
 
அந்நிலையின் தொடரில் அதனின் நிலையும் மாறு கொண்டு உள்ள தாவர நிலை அழுகிய நிலையில் அக்கோளத்துடன் படிந்து அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையினால் மற்ற தாவர இன வர்க்கமான புல் பூண்டு தோன்றி இதன் வளர்ச்சி நிலையிலேயே இதன் ஆவியின் சுவாச நிலைக்கொப்ப மாறு கொண்ட ஒவ்வொரு தாவர வர்க்கங்கள் வளரும் பக்குவ நிலையை அக்கோளம் பெறுகின்றது.
 
இந்நிலைக்கு வருவதற்குள் இக்கோளத்தின் சுழற்சி வேகம் உயிரணுக்களின் பெருக்கத்தினால் சேமிக்கும் அமில சக்தியின் உறையும் நிலையும் கூடிக்கூடி இக்கோளத்தின் வளர்ச்சியை சக்தி கொண்ட மண்டலத் தன்மைக்கு உருப்பெற்று விடுகின்றது.
 
இன்று சந்திரனாய் நாம் காணும் சந்திர மண்டலத்தின் அளவு விகித நிலைப்படி உருக்கொள்கின்றது.
 
1.இந்நிலையில் உருப் பெறவே பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆகின்றன.
2.இந்நிலையின் வளர்ச்சிக்குப் பின் தான் ஜீவராசிகள் தோன்றும் நிலை பெறுகின்றது.
 
ஜீவராசிகள் தோன்றி வாழ்ந்திட தாவர வர்க்கங்களின் சுவாச நிலைக்கு வேண்டிய நீரின் சக்திக்கு மேல் ஜீவராசிகளுக்கு அதிக சக்தி தேவை…
 
இத்தாவர வளர்ச்சியின் நிலையிலுள்ள மண்டலமே பல உரு நிலைகள் மாறி மாறிப் பல ஆயிரம் காலங்கள் சென்ற பிறகுதான் அதன் இன வர்க்கத் தொடர்ச்சியில்
1.ஒவ்வொரு தாவரம் தோன்றி அது வளர்ந்து வாழ்ந்து அழுகிய நிலையில் பூமியில் படிந்து
2.அதன் வெக்கையில் தோன்றிய மற்ற உயிரணுவின் சக்தியினால் மாறு கொண்ட தாவர வர்க்கம் உருப் பெறுகின்றது.
 
ஓர் இன வர்க்க வளர்ச்சியிலிருந்து அது வளர்ந்து அதன் சக்தி மக்கி அதையே உணவாய் இப்பூமி ஈர்த்து அது கக்கும் கழிவிலிருந்து அதன் சுவாச நிலையில் பல காலம் அதே இன வர்க்கத் தொடர்தான் வளர்ச்சி கொண்ட நிலையில் வாழ்ந்த பிறகு
1.இத்தொடருடன் மற்ற உயிர் அணுக்களின் சக்தி அம் மண்டலத்தின் காற்றுடன் மோதுண்ட பிறகு
2.மாறு கொண்ட வளர்ச்சி நிலை பெற்ற தாவரம் மற்ற இடத்தில் தோன்றுகின்றது.
 
இதே தொடரில் தோன்றும் நிலையில்தான் தாவர வர்க்கத்திலிருந்து உயிரினமாய் இக்கோளமுடன் கோளம் சேமிக்கும் அமிலத்தினால் கல்லும் மண்ணும் வளர்ச்சியுற்ற நிலையில் இருந்து
1.கல்லாய் உருப்பெற்ற திடப்பொருளாய் உறைந்த அமிலம் கொண்ட அதன் உஷ்ண நிலை அலையும்
2.தாவரத்தின் உஷ்ண அலையும் மோதுண்ட சக்தி நிலையில்
3.உருப்பெறும் உயிரணுவான ஜீவத்துடிப்புக் கொண்ட ஜீவராசியாய் ஓடுகள் போன்ற நிலை கொண்ட
4.நத்தை ஆமை இந்நிலை கொண்ட ஜீவராசிகள்தான் இப்பூமியில் முதலில் தோன்றிய ஜீவராசிகள்.
 
கல்லில் இருந்தும் மண்ணிலிருந்தும் அதன் உஷ்ண அலையின் வெக்கையில் இஜ்ஜீவராசிகள் தோன்றிச் சில தாவர நிலைகளை உணவாய் உண்டுஇவை கழித்த மலத்தில் இருந்து பல உயிரணுக்கள் ஜீவன் கொண்ட நிலையில் தவளையாய் மற்றும் சில நிலை கொண்ட ஜீவராசிகள் தோன்றின.
 
ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவிலிருந்து பல உயிரணுக்கள் அதன் சுவாச நிலைக்கொப்பப் பல ஆயிரம் ஆண்டுகள் ஒத்த நிலையின் வளர்ச்சியிலேயே வளர்ந்து கொண்டே வருகின்றது.
 
இதன் தொடர்தான் எல்லாமே…!