ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 2, 2024

முதல் பாதம் இரண்டாம் பாதம்

முதல் பாதம் இரண்டாம் பாதம்


ஆதியில் இருந்து இன்றளவும் நமக்குக் கதைகளாகவும் பாடல்களாகவும் போதனை நிலைகளாகவும் இத்தெய்வீக நிலைகளை நமக்கு உணர்த்தியவர்கள் எல்லாம், சூட்சுமப்படுத்தி மறைக்கப்பட்டு அதிலுள்ள ஜீவநிலையை மக்களுக்குப் புரியும் நிலையில் கதைகள் ரூபத்திற்காக அன்று வெளியிட்ட முனிவர்களின் ரிஷிகளின் நிலையையே காலப்போக்கில் பல வடிவங்களைச் சேர்த்து இன்றைய நிலைக்கு நம்பா நிலைப்படுத்தி விட்டார்கள்…
 
அவரவர்கள் வாழும் நிலைப்படுத்தி அவரவர்களின் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதமுண்டு.
 
முதல் பாதம் இரண்டாம் பாதம் இப்படி வரிசைப்படுத்தி எல்லாவற்றிற்கும் மேல்பாதம் சென்ற பிறகுதான் அவ் ஆண்டவனுடன் ஐக்கியப்பட்டிடலாம் என்ற நிலையில் உணர்த்தி வருகின்றனர்.
 
இப்பாத நிலைபெறும் நிலையென்ன…?
 
ஒவ்வொரு பாதத்தில் இருந்தும் முதல் படி, இரண்டாம் படி, மூன்றாம் படி இப்படிப் பள்ளியில் படித்திடும் நிலைக்கொப்ப கடைசிப் படியில் பட்டம் வாங்குவதைப் போலல்ல அவ்வாண்டவனிடம் ஐக்கியப்படும் நிலை.
 
எங்கும் நிறைந்துள்ள நம்முள்ளும் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனின் சக்தியை நமக்கு அளித்த இவ்வேழு பிறவியில் நாம் வாழ்ந்த நிலை கொண்டுதான் நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு நமக்குகந்த அபிலாஷைப்படி இவ் ஏழு பிறப்புகளை நம் எண்ண நிலையில் நாம் மேம்படுத்திடாவிட்டால் நம் ஆத்மாவிற்கு இம்மனித உடலை ஏற்கும் சக்தியிழந்து விடுகிறோம்.
 
இவ்வேழு பிறப்பிலும் நம் எண்ண நிலைக்கொப்ப நாம் சேமித்துச் செயல்படுத்திட்ட பல தீய சக்திகளின் அமில சக்தியின் நிலை, இவ் ஏழாம் பிறப்பில் அதன் துரித சக்தியினால் இவ் ஏழு பிறப்பில் சேமித்த நற்சக்திகளையும் இத்துரிதம் கொண்ட தீய சக்தியின் நிலையுடன் கலந்து, இவ் ஏழாம் பிறப்பில் நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு,
1.நம் எண்ண சக்தியை தீய சக்திக்கு அடிபணிந்திட்ட நிலையில் நாம் ஆவி உலகில் பல காலம் சஞ்சரிப்பதினால்
2.அந்நிலையில், அந்நிலையின் குண நிலைக்கொப்ப மிருகங்கள் உடலில் ஏறியும் அங்ககீனமுற்ற குண நிலையிலும் பிறப்பிற்கு வருகின்றோம்.
 
நாமாய்ச் சேமித்து வழி சென்றிடும் நிலைதான் இந்நிலை. முதல் பாதம் இரண்டாம் பாதம் என்பது எல்லாம் ஒவ்வோர் உடலை ஏற்று அவ் உடல்களில் நாம் ஏற்படுத்திடும் சக்தி நிலைக்கொப்பத்தான் பிறவி நிலை பெறுகின்றோம்.
 
சூட்சும நிலைக்குச் சென்ற நிலையில் இந்த ஞான சக்தியின் தொடர்பு நிலை கொண்டு
1/இவ்வுலக நிலையில் பற்றற்ற நிலைப்படுத்தி
2.பக்தி நிலையின் சித்து நிலை பெற்ற பிறகுதான் சூட்சம நிலைக்கே சென்றிட முடியும்.
 
இவ்வாத்மாவுடன் கூடிய இவ்வுடலில் வாழும் காலத்திலேயே நம் எண்ணத்தில் தீய அணுக்களின் சக்தி நிலையை நாம் அடக்கிப் பழகிடல் வேண்டும்.
 
கோபத்தையும் குரோதத்தையும் சஞ்சலத்தையும் சலிப்பையும் நம் எண்ணத்தில் வளர விட்டு ஜெபம் கொண்டால் அப்பக்தியில் எப்பலனும் நம் ஆத்மாவிற்குக் கூடுவதில்லை.
 
நம் ஆத்மாவுடன் அன்பு கொண்ட நல்லுணர்வையே வளரவிட்டால் அன்றி ஞான சக்தியின் தொடர் அறிவதும் கடினமே.
1.முதலில் நம்மையே நாம் உணர்ந்து நற்சக்திகளின் வழித்தொடர் பெற்று
2.ஞான வழியின் தொடரினால் அத்தொடர் நிலை கொண்டோரின் தொடர் சக்தியையும் பெற்று
3.இவ்வழியிலேயே இவ்வழித் தொடரினை அறிந்து சப்தரிஷியின் நிலை பெற்று
4.ஒளியின் ஒளியாய்க் கலந்து செயல்படும் நிலைதான் அவ் ஆண்டவன் நிலை பெறுவது.
 
இந்நிலையை உணர்ந்திடத்தான் முதல் பாதம் இரண்டாம் பாதம் என்றெல்லாம் வழிப்படுத்தி உணர்த்தி உள்ளனர்.
1.ஆண்டவனேதான் நாம்; அவனே தான் மற்ற எல்லாமுமே.
2.யாரும் நமக்கு அப்பதவி நிலையை அளிப்பதல்ல.
3.நாமேதான் நம் பதவியை அடைந்திடல் வேண்டும்.
 
ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களினால்தன் அறிவு நிலையை வளர்ச்சியில் செயல்படுத்திட முடிந்திடாது. ஆசை நிலை நல்லுணர்வுக்குத் தோன்றினாலும் பிறப்பெடுத்து இவ்வுடல் கொண்ட ஆத்ம வழியில் தான் எச்சக்தியின் தொடரையும் நாம் அறிந்திடல் முடிந்திடும்.