ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2018

உங்களைக் காத்துக் கொள்ள சக்தி வாய்ந்த “பாதுகாப்புக் கவசம் கொடுக்கின்றோம்…!” – REMOTE POWER


ஆண் பெண் இருவருடைய எண்ணங்களினால் ஏற்படுவது தான் குழந்தை. இருவருடைய எண்ணங்களும் ஒன்று சேர்ந்து
1.உயர்ந்த எண்ணங்களை எண்ணி ஒருவருக்கொருவர் அந்த எண்ணத்தைப் பரப்பிக் கொண்டால்
2.உயர்ந்த உணர்வின் சக்தி கொண்டு உயர்ந்த நிலைகளை உங்களுக்குள் வலு கொண்டதாக மாற்றுகின்றீர்கள்.
3.வலு கொண்டதாக ஆக்கிக் கொண்டால் பிறிதொரு எண்ணங்கள் இருவரையுமே பாதிக்காது.

இதை நீங்கள் அவசியம் செய்து பாருங்கள். உங்கள் இரண்டு பேருக்குமே பாதுகாப்புக் கவசமாக அது ஆகிவிடும்.

இன்று இரண்டு நாடுகள் போர் செய்கின்றார்கள். எதிரியை அழிப்பதற்காக இராக்கெட் மூலம் ஏவுகணையை ஒரு நாட்டிலிருந்து விடுகின்றான்.

அந்த இராக்கெட் வெளியிலே கிளம்பி மேலே சென்று
1.சூரிய காந்தப் புலனுக்குள் அது உராய்ந்தவுடனே
2.அதனுடைய வேக அலைகளை எடுத்து எதிரி நாட்டுக்காரன் அதை அறிந்து கொள்கின்றான்
3.உடனே அதைத் தடுப்பதற்குப் பதிலுக்கு இவன் ஒரு ஏவுகணையை அனுப்புகின்றான் – தடுக்கின்றான்.
4.ஒவ்வொன்றிலிருந்து வெளிப்படும் அலைகளை இயந்திரத்தின் மூலமாகத் துல்லிதமாக அறிந்து இன்று விஞ்ஞானத்தால் செயல்படுத்திக் காட்டுகின்றார்கள்.
(பத்திரிக்கைகளில் நிச்சயம் படித்திருப்பீர்கள்…!)

அதைப் போன்று தான் கணவனும் மனைவியும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் தியானத்தின் மூலமாக அந்த அலைகளைப் பரப்பிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஏதோ ஒரு எண்ணத்தைக் குறி வைத்து நீங்கள் வெளியில் போகும் போது உங்களுக்கு ஒரு விபத்து ஏற்படக்கூடிய நிலை இருந்தது என்றால்
1.கணவன் மனைவி சேர்த்துக் கொண்ட இந்தச் சக்தியினாலே
2.உங்கள் எண்ண அலைகள் ஊடுருவிச் சென்று - அங்கே உராய்ந்தவுடனே
3.உங்களுக்கு எதிர்ப்பு சக்தி இருந்ததென்றால்….,
4.உடனே ”டக்…” என்று கம்ப்யூட்டர் மாதிரி உங்களைப் போகவிடாமல் தடுத்துவிடும்.

விமானங்கள் மற்றதுகளை “ராடார்…!” (RADAR) வைத்து விஞ்ஞானிகள் எப்படி அதனின் திசையையும் தூரத்தையும் காணுகின்றனரோ விபத்து ஏற்படாதபடி இயக்குகின்றார்களோ அதே மாதிரி
1.நீங்கள் செல்லும் பாதையில் இடையூறுகள் இருந்தால்
2.உங்களை அந்த அருள் உணர்வுகள் விலகிச் செல்ல வைக்கும்.

அப்போது விபத்துக்களிலிருந்து உங்களைக் காப்பாற்ற அது உதவும்.

அதே மாதிரி கெட்டவர்கள் யாராவது உங்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டு இருந்தாலும் கணவன் மனைவி இரண்டு பேரும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு காரியத்திற்குப் போனீர்கள் என்றால்
1.உங்கள் உணர்வலைகள் அங்கே அவர்களுக்குத் தாக்கப்பட்டு
2.தீமை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் அடிபட்டு
3.அந்த நிமிடத்தில் எண்ணத்தை மாற்றி விட்டு நீங்கள் உங்கள் பாட்டுக்கு  போய்க் கொண்டிருப்பீர்கள்
4.அவர்கள் எண்ணம் மாறிப் போகும்… அவர்கள் திசையைத் திருப்பி விட்டு விடும்…!
5.அல்லது உங்களை “வேறு பக்கம்” அழைத்துச் சென்றுவிடும்.

இதை உங்கள் அனுபவத்தில் நிச்சயம் பார்க்கலாம்….!

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எடுத்துப் பாய்ச்சும் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் திருடும் நோக்கத்துடன் வீடு தேடி வருபவர்களை எல்லாம் உங்கள் வீட்டின் மீது நினைவே வராதபடி செய்து விலக்கித் தள்ளிவிடும்.

“நல்லவர்களுக்கு ஆபத்துகள் மிக அதிகமாக இருக்கின்றது…!

ஏனென்றால் பாசமும் கொஞ்சம் சாந்தமான நிலைகளில் இருப்பவர்களுக்கு யாராவது சுருக்….!: என்று சொன்னால் தாங்க முடிவதில்லை.
1.என்னை… இப்படிப் பேசுகின்றார்களே…! என்னை… இப்படிச் சொல்லிவிட்டார்களே…! என்ற
2.அந்த வேதனையை மீண்டும் மீண்டும் நினைத்து எடுத்துக் கொள்வார்கள்.

அந்த வேதனையையும் வருத்தத்தையும் அடிக்கடி எடுக்கும் போது நமக்கு முன்னாடியே இந்த உணர்வு வந்து விடுகின்றது.

அதே உணர்வுடன் நாம் யாரிடமாவது பேசும் போது அவர்கள் செவிகளில் பட்டதும் அந்த வேதனையான உணர்ச்சிகள் அவர்களுக்குள் தூண்டி நம்முடைய சொல்லே நமக்கு எதிரியாக வந்து விடுகின்றது.

1.நாம் பாசத்தோடு இருந்தோம்.
2.குறையை எடுத்துக் கொண்டோம்.
3.நம் உடலில் இந்த விஷம் பாய்ந்து விடுகின்றது.

இந்த விஷம் பாய்ந்தவுடன் மற்றவர்களுடன் பேசும் போது இந்த உணர்வுகள் பாய்ந்து இதே உணர்வுகளைத் தூண்டியவுடனே அவர்களுக்கு எரிச்சலாகின்றது.

அந்த மாதிரி நேரத்தில் எல்லாம் ஆத்ம சுத்தி செய்து கணவன் மனைவி இரண்டு பேரும் இந்தத் தியானத்தை எடுத்து ஒருவருக்குப் பாய்ச்சிக் கொண்டீர்கள் என்றால் அங்கே எதிரியாகாமல் தடுக்க முடியும்.

அதே மாதிரி கணவன் வீட்டிலிருந்து ஆபீசுக்குச் சென்றாலும் மனைவி இங்கே வீட்டிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அங்கே பகைமை வராது.

வியாபாரத்தில் நஷ்டமாகின்றது என்றல் இதே போன்று எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியால் வியாபாரம் சீராக வேண்டும். வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இரண்டு பேரும் சேர்ந்து எடுத்து அந்த அலைகளை வியாபாரம் செய்யும் இடங்களில் பரப்பிக் கொண்டால் நஷ்டத்தை நிவர்த்தி செய்ய முடியும்.

அதே போன்று கணவனும் மகரிஷிகளின் அருள் சக்தி தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும். மனைவியைப் பார்க்கும் அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.

மனைவி வீட்டிலிருந்தாலும் அல்லது வேலையின் காரணமாக வெளியில் சென்றாலும் கணவன் இப்படி எண்ணி அந்த மகரிஷிகளின் உணர்வைப் பாய்ச்சினால் அது மனைவிக்கு மிகப் பெரிய பாதுகாப்பாக வரும்.

நான் (ஞானகுரு) சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கு இலேசாகத் தெரியும். ஆனால் இந்த முறைப்படி செய்தால்
1.உங்களால் அந்தப் பலனைப் பெற முடியும்.
2.“உங்கள் அனுபவம் பேசும்….!”