ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 1, 2018

“சகலத்தையும் அறியும் நுண்ணிய அறிவு...!" - TIME MACHINE - UNIVERSAL CLOCK


ஒருவருக்கொருவர் துணையில்லாது யாரும் வாழ முடியாது. “இது இயற்கையின் நியதி…!”

ஒன்றுக்கொன்று துணை இல்லாத உயிரினங்களும் அது சுத்தமாகவே அழிந்து விடுகின்றது. அந்த உடல்கள் மடிய மடிய அந்த இனத்தின் ரூபங்களே மடிந்து மறைந்து விடுகின்றது.

நம் பூமியில் கடந்த காலத்தில் மனிதர்கள் உருவாவதற்கு முன் வலிமை கொண்ட மிருகங்கள் தான் உருவாகி இருந்தது. இருந்தாலும் அதனுடைய இனங்கள் வலிமை அதிகமான பின் அதற்குள்ளேயே ஒன்றுக்கொன்று புசிக்கும் போர் முறைகள் வந்துவிட்டது.

அத்தகைய உணர்வுகள் விளைந்து அவைகள் இறந்து இறந்த உணர்வின் அலைகள் பரவியபின்
1.அதை நுகர்ந்த அதனுடைய இனங்கள்
2.பற்றுடன் வளர்ந்த அந்த உயிரினங்கள் முழுவதுமே அழிந்து விட்டது.

இதைப் போல பல இனப் பெருக்கங்களும் தடைப்பட்டு கடந்த காலங்களில் இருந்த ரூபங்கள் எப்படி மறைந்தது என்று குருநாதர் காட்டினார்.

இமயமலைப் பகுதிகளில் செல்லப்படும் போது சில பகுதிகளிலும் அதே மாதிரி சூட்சும நிலைகளில் சில பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று அதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.

1.அன்று வாழ்ந்த மிருகங்களின் ரூபங்கள் எப்படி இருந்தது..?
2.அவைகளின் உணர்வலைகள் எங்கே பதிந்துள்ளது..?
3.அவைகள் எப்படி எதனால் அழிந்தது..?
4.அழிந்த உணர்வின் அலைகள் எப்படி உள்ளது…?
5.அத்தகைய இனப்பெருக்கத்தில் உருவான பல மிருகங்களே இன்று இல்லை என்று குருநாதர் காண்பித்தார்.

ஆனால் இதையெல்லாம் நீ வெளியிலே சொன்னாய் என்றால் போற்றுதலுக்குண்டான நிலைகள் வரும். அதனுடைய ரூபத்தை எல்லாம் வரைந்து கொடுத்தால் உனக்கு நிறையப் பணமும் வரும்.

அதனுடைய செயலாக்க குணங்களை எடுத்த்துத்தான் இன்றைய விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூடரில் வைத்துப் பிரிக்கின்றார்கள்.

அதைப் பிரித்துக் கொண்ட பின் உணர்வின் எண்ண அலைகளின் இதன் தொடர் கொண்டு காற்றிலே இருப்பதையும் பிரிப்பான் என்று இதைச் சொன்னார் குருநாதர்.

அபொழுது உனக்குள் விளைந்த உணர்வின் தன்மையைக் கம்ப்யூடருடன் இணைக்கப்படும் போது இந்த உணர்வின் அலைகளின் தொடரை வைத்து அந்த ரூபத்தையும் அறிவான்,
1.அதனின் நிலைகளில் ரூபத்தைக் காணும் நிலைகள் வரும்.
2.ஆனால் அது ஜீவனுள்ளதாக வராது…!

இவன் நுகர்ந்த உணர்வுகள் மீண்டும் அந்த நினைவின் ஆற்றல் கொண்டு அந்தக் கடந்த கால நிலை எதுவோ விஞ்ஞான அறிவு கொண்டு கண்டுணர்ந்து அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டால் என்ன ஆகும்..?

அவன் எடுக்கும் நினைவின் ஆற்றல் மனிதனின் ரூபத்தை விட்டு அந்த விகாரமான உணர்வின் தன்மை அடையப்பட்டு இந்த உடலின் தன்மை வெளிவந்த பின்
1.இன்றைய சூழ்நிலைக்கும் இல்லாது
2.கடந்த கால சூழ்நிலைக்கும் இல்லாத உணர்வின் தன்மை கொண்டு
3.அந்த உயிர் இதற்கு இணையான ரூபத்தை மாற்றிக் கொடூர மிருகமாகத்தான் மாறும்.
4.இதைத்தான் விஞ்ஞான அறிவால் செய்ய முடியும்…!

அக்கால ரூபங்களைப் பார்க்கும் போது உடலின் இச்சைக்காக இதைச் செய்தாலும் அதனுடைய பின் விளைவின் தன்மை இப்படித்தான் இருக்கும் என்று இதையும் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஏனென்றால் இன்று விஞ்ஞான அறிவில் உள்ளோர்கள் ஒரு மனிதனை எடுத்து ஒரு பொருளையும் எடுத்து அதன் நுண்ணிய அலைகளின் தன்மை கொண்டு
1.அதில் அமிலத்தின் தன்மைகளைக் கலக்கின்றனர்.
2.அப்பொழுது மேலெழுந்தவாறு அது ஆவிகளாக மாறி அதனுடைய வலிமை பெற்றதும்
3.அதாவது படிப்படியாக (STAGE BY STAGE) அமிலத்தைக் கூட்ட கூட்ட
4.அது கரைந்து கரைந்து போவதை வைத்து
5.அதனுடைய வலிமை இன்னென்ன காலங்களில் இது இவ்வளவு வலிமை பெற்றது
6.அந்தக் கால கட்டத்தை - இத்தனை காலத்திற்கு முன் உருபெற்றது இந்தப் பாறை என்று
7.இப்படித்தான் இன்று விஞ்ஞான அறிவால் அறிகின்றார்கள்.

இதைப் போலத்தான் மெய் ஞானியான குருநாதர்
1.இந்த விண்ணுலக ஆற்றலின் உணர்வுகள் அந்தந்தக் காலங்களில் விளைந்ததை நீ நுகர்ந்து பார் என்றார்……!
2.அதனின் ஒலி/ஒளி அலைகள் எப்படி வருகின்றதென்று அதனை நீ அறிந்து கொள்…..!
3.இதற்காக நீ காலத்தை சிதறடிக்காதே….!
4.நீ அறிந்து கொள்ளவே உனக்கு இதைக் கொடுக்கின்றேன்…!

ஆனால் இந்த அறிவின் தெளிவை மற்றவர்களிடம் சொன்னால் விஞ்ஞான அறிவிற்கே அடிமையாகி மனிதனின் உடலின் இச்சைக்கே இது உருவாகி அழியும் பருவத்தினைத்தான் நீ பெறுவாய்…!

 உயிருடன் ஒன்றிய நிலை கொண்டு ஒளியின் சரீரமான அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீ இணைய முடியாது…! என்று தெளிவாகக் காட்டினார்.

ஆகவே அழியக்கூடிய அந்த விஞ்ஞான அறிவின் வழிக்கு நாம் செல்ல வேண்டியதில்லை.

அந்த மெய் ஞான உணர்வுடன் வளர்ந்து கொண்டிருக்கும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுடன் குருநாதர் காட்டிய வழியில் உங்களை ஒன்றச் செய்து கொண்டுள்ளோம்.

அந்த மெய் உணர்வினை உங்களிலே விளையச் செய்து இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றச் செய்ய வேண்டும்.
1.என் ஒருவனால் முடியாது.
2.நீங்கள் அனைவரும் இந்த உணர்வின் தன்மையை எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

யாம் உபதேசித்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
1.மகரிஷிகளின் ஆற்றல் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள்  பார்ப்பவரெல்லாம் பெற வேண்டும். எங்களைப் பார்ப்பவற்கெல்லாம் கிடைக்க வேண்டும்
4.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் படர வேண்டும் என்ற
5.இந்த உணர்வினை எடுத்து உங்கள் மூச்சலைகளைப் பரப்ப வேண்டும்.

இது சிறுகச் சிறுக வளர்ந்து ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விளைந்து உணர்வின் அலைகள் பெருக்கி இதனின் வலிமை கொண்டு் இந்த காற்று மண்டலத்தில் உள்ள விஞ்ஞான அறிவால் வரும் நச்சுத் தன்மைகள் நிச்சயம் மாறும்.

நன்மைகள் பல செய்யத் துணிவோம்….!