ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 7, 2018

“27 நட்சத்திரங்களின் ஆற்றல்களை” அகஸ்தியன் வியாசகர் கண்டதையும்… பிருகு கண்டதையும்… இன்றைய விஞ்ஞானிகள் கண்டதையும் அறிந்து கொள்ளுங்கள்…!


சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வியாசகர் அவன் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் போது புயலில் சிக்கி அவன் சென்ற படகு கவிழ்ந்து கடலில் விழுந்து தத்தளிக்கின்றான்.

கடலில் தத்தளிக்கப்படும் போது எந்த மீனை இவன் கொன்று புசித்தானோ அந்த மீன் இனமே (டால்ஃபின் மீன் என்று சொல்வார்கள்) இவனைக் காக்கின்றது.

முதன் முதலில் உயிரினங்கள் கடலில் தான் தோன்றியது. கடல் வாழ் உயிரினங்களின் வளர்ச்சியில் தான் தரை வாழ் நிலைகள் வருகிறது. தரை வாழ் நிலைகளாக வந்த பின் தான் மனிதன் தோன்றுகின்றான்.

தரை வாழ் நிலைகளில் வளர்ச்சி பெற்றவன் மனிதன். அது போல் கடல் வாழ் நிலைகளில் வளர்ச்சி பெற்றது சுறா மீன் (டால்ஃபின்). மீன் இனங்களில் மனிதனைப் போன்று அறிவு பெற்ற மீன் அது.

ஆகவே தரை வாழ் நிலைகளில் வந்த இந்த மனிதன் (வியாசகன்) சந்தர்ப்பத்தால் கடலில் வீழ்ந்து தத்தளிக்கும் போது இந்த மீன் அவனைக் காத்துக் கரை சேர்க்கின்றது. ஏனெனில் உணர்வின் அறிவு கொண்டு அது செயல்படுகிறது.

1.மனிதன் ஆசை அலை கொண்டு வருகின்றான்
2.மீன் மற்றொன்றை உணவாக உட்கொண்டாலும் உணர்வின் அறிவு கொண்டு
3.தன் இனத்தைச் சேர்ந்தவன் (கடல் வாழ் நிலைகளிலிருந்து சென்றவன்) என்ற நிலையில் அவனைக் காக்கின்றது.

அப்போது தான் வியாசகன் சிந்திக்கின்றான். எந்த மீனைக் கொன்று விற்றுப் புசித்து வந்தோமோ அந்த மீனே தன்னைக் காத்தது என்ற நிலையில் வானை நோக்கி ஏங்குகின்றான்.

அப்போது வானை நோக்கி ஏங்கப்படும் போது ஆதியில் அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகளை நுகர்ந்தறிகிறான்.

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து பாற் கடலையே கடைந்தான்.

கடைந்தவற்றில் (வந்ததை) விழுங்கியவர் எவரோ அப்படி விழுங்கிய உணர்வுகொப்ப உடல்கள் பெற்றது ஆடு மாடு பாம்பு என்பதை அகஸ்தியர் உணர்ந்த உண்மையை உயிரினங்கள் எப்படித் தோன்றியது என்பதை வெளிப்படுத்திக் காட்டினார் வியாசகர்.

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் எழுத்து அறிவு இல்லாத அக்காலங்களில் அகஸ்தியன் கண்டான். அதன் பின் எழுத்து அறிவு வந்த காலங்களில் வியாசகன் மீன் இனம் அவனைக் காத்த பின் அகஸ்தியன் கண்ட உணர்வை வெளிப்படுத்துகின்றான்.

வேதங்கள் என்ற நிலைகளில் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஒன்றாகி ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைந்து புதுப் புதுப் பொருளாக எப்படி உருவானது என்று கண்டவன் அகஸ்தியன்.

அதனின் உணர்வின் தன்மையை அடுத்து நுகர்ந்தவன் வியாசகன். அவன் கவர்ந்த உணர்வுகளை எழுத்து வடிவிற்கு கொண்டு வர வேண்டும். வியாசகனுக்கு எழுதப் படிக்க தெரியாது.

அன்று அவன் சொன்னதைத்தான் அத்திரி.. பிருகு.. புஜண்டகர் என்று இப்படி ஏழு பேர் எழுத்து வடிவத்திற்குக் கொண்டு வருகின்றனர்.

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக் கற்றைகள் (தூசுகள்) ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின் கதிர்களாக மின்னல் பாய்கின்றது.
1.மின்னல் தாக்கப்படும் போது கடல்களில் பட்டால் அது மணலாக மாறுகின்றது.
2.தாவர இனங்களில் பட்டால் கருகி விடுகிறது.
3.ஊடுருவி பூமியின் நடு மையம் சென்றால் கொதிகலனாகின்றது.
4.பின் அதன் அருகில் இருப்பதையெல்லாம் கலவைகளாக உருக்கிய பின் கொதிக்கின்றது. நில நடுக்கமாகின்றது. கீழே போய் விடுகிறது.
5.இவை எல்லாம் அகஸ்தியன் கண்டது – அதை நுகர்ந்த வியாசகனும் இதை வெளிப்படுத்துகின்றான்.

மின் கதிர்களை (மின்னலை) மற்ற தாவர இனங்களை வைத்து எப்படி அடக்கினான் என்ற நிலையை அகஸ்தியன் கண்ட உணர்வை வியாசகனும் அறிந்து மின்னல் தாக்கும் போது பச்சிலைகளை வைத்து அதை ஒடுக்கினான்.

நட்சத்திரங்களின் இயக்கங்களைப் பற்றி வியாசகன் சொன்னதை (அகஸ்தியன் கண்ட உணர்வினை) “பிருகு…” எடுத்து எதனையும் அடக்கிடும் நிலையாக
1.தன்னுடைய எண்ணங்களைப் பாய்ச்சப்படும் போது
2.அதை லேசர் இயக்கமாக மாறி
3.மற்ற நாடுகளை எல்லாம் அடக்கி அதனை ஆட்சி புரியும் நிலைக்கு வந்தான் பிருகு.

பிருகு அத்திரி இவர்கள் எல்லாம் அரசர்கள். அந்தச் சக்தி கொண்டு தான் அன்று மற்றவர்களை அடக்கி ஆண்டார்கள்.

இன்றைய விஞ்ஞானிகளை எடுத்துக் கொண்டாலும் கடலில் பாய்ந்த மின்னல்கள். மணலாக மாறியதை யுரேனியமாகப் பிரித்தெடுத்து அணு குண்டைச் செய்கின்றார்கள். பல அணு விசைகளையும் இன்று விஞ்ஞானிகள் ஆற்றல் மிக்கதாக உருவாக்குகின்றார்கள்.

ELECTRIC ELECTRONIC என்ற நிலைகளில் இயந்திரங்களை இயக்கச் செய்தாலும் லேசர் (LASER) இயக்கமாக இன்று விஞ்ஞானிகள் கண்டறிந்து அகண்ட நிலைகளில் இருப்பதையும் நுண்ணிய நிலைகளில் இருப்பதையும் அறிகின்றார்கள்.

நட்சத்திரங்களின் இயக்க நிலைகளை அறிந்து அதன் விஷப் பொறிகளை அடக்கியவன் அகஸ்தியன்.

தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு பல கோடித் தாவர இனங்களின் சத்தை நுகர்ந்து அந்த மின் அணுக்களின் தன்மையை (மின்னலை) ஒடுங்கச் செய்தார்.

அந்த மின் கதிர்களின் இயக்கங்களை அகஸ்தியன் கண்ட உணர்வுகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டினார்.
1.இது நமக்கு ஒன்றுமே அர்த்தமே ஆகவில்லை…!
2.”ஒன்றும் தெரியவில்லை…!” என்று சொல்லி நீங்கள் விட்டுவிடாதீர்கள்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களிடம் பதிவு செய்கிறேன்.

உங்களை ஒருவர் திட்டுகிறார் என்றால் அந்தத் திட்டியவர்களை ஆழமாகப் பதிவு செய்கின்றீர்கள்…! அடுத்தாற்போல் “அவர் என்ன என்ன செய்தார்… சொன்னார்…?” என்று உங்களால் அப்படியே திரும்பச் சொல்ல முடிகிறது.

அதே போல் தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக உணர்வின் தன்மை உங்களுக்குள் வளர்ச்சி அடையப்படும் போது தீமையை அகற்றும் சக்தியைப் பெறுகிறீர்கள்.
1.அதை எப்படியும் நீங்கள் பெற வேண்டும்
2.அகஸ்தியன் நுகர்ந்த மின்னலின் ஒளிக்கற்றைகளை நுகர வேண்டும்
3.ஒளியின் சரீரம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்காகத் தான் இதைச் சொல்வது.