ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 13, 2017

வெண்மையான சர்க்கரையைப் (சீனி) பயன்படுத்துவதால் குடல் புண்ணாகி சத்தைப் பிரிக்கும் தன்மையை இழந்து சர்க்கரை நோயாகின்றது – உங்கள் இரத்தங்களைத் தூய்மைப்படுத்தி “DIABETES” நோயை நீக்குங்கள்

கரும்புச் சாற்றுக்குள் பொட்டாசியத்தைப் போட்ட பின் அது கருப்பாக இருப்பது வெளுப்பாகின்றது. அழுக்குகள் அனைத்தும் பிரிந்துவிடுகின்றது. சர்க்கரை வெண்மையாகின்றது.

கரும்புச் சாற்றில் உள்ள அழுக்குகளை அகற்றினாலும் அந்தச் சர்க்கரையில் கலந்துள்ள பொட்டாசியத்தின் வீரியத் தன்மையை இவர்கள் பிரித்தெடுப்பதில்லை.

ஆகையினால் இந்தச் சர்க்கரையை நாம் சாப்பிடுவோம் என்றால் அதிலே கலந்த இந்த நஞ்சு நாம் உணவாக உட்கொள்வோர் அனைவருக்கும் குடல் புண் வருவதும் குடலில் ஜீரணிக்கும் சக்தியும் இழந்துவிடுகின்றது.

சர்க்கரை வெண்மையாக அழகாக இருக்கின்றது என்று நாம் பார்ப்போம். இது விலை பேசுவதற்கு உதவுகின்றது. ஆனால் அந்த சர்க்கரையில் கலந்த பொட்டாசியத்தால் நம் உடலில் நோயாகின்றது.

1.அது அதிகமாகிவிட்டால் நஞ்சுகள் பரவி
2.நம் சிறுநீரகத்தில் இது நஞ்சாக (POISON) மாற்றி நஞ்சினை நீக்கிடும் நிலையைச் செயலற்றதாக ஆக்கிவிடுகின்றது (சிறுநீரகம் பழுதாகின்றது)
3.அதனால் உப்புச் சத்தோ அல்லது சர்க்கரைச் சத்தோ இது வந்துவிடுகின்றது.

இதனின் உணர்வுகள் வெப்பத்தின் தன்மை அதிகரித்துவிட்டால் நம் நுரையீரலுக்குள் ஊடுருவி அதில் உந்திச் செலுத்தும் (PUMPING) நிலைகளும்
1.இழுத்து விரியும் தன்மை குறைந்து
2.அதனால் கல்லீரல் வீக்கமாகிவிடுகின்றது.

தொடர்ந்து இவ்வாறு ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படுவதால் வைத்தியம் வைத்தியம் என்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கின்றது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மீட்டுவதற்காகத்தான் குருநாதர் எமக்கு உணர்த்திய மெய் உணர்வின் ஆற்றல்களை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இன்றைய உலகில் தீமைகள் எவ்வாறு சாடுகின்றது என்பதை குருநாதர் எம்மை அறியச் செய்தார்.

 அவர் உணர்த்தியதைக் கூர்ந்து கவனித்தேன். அதை நீக்கும் ஆற்றலையும் எம்மைப் பெறச் செய்தார்.

குருநாதர் எமக்குள் பதிவு செய்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அவர் காட்டிய விண்ணின் ஆற்றலை என்னால் பெற முடிந்தது. அவர் சொன்ன வழியில் எனக்குள் வந்த தீமைகளை நீக்க முடிந்தது.

தீமைகளை நீக்கும் எண்ணங்களை வளர்த்து உங்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்யும் போது நீங்களும் இதை எண்ணினால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க இது உதவுகின்றது.

நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் நல்லது செய்யும் உங்கள் உணர்வுக்குள் அறியாது புகும் இத்தகைய தீமைகள் அகற்றப்பட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

உங்களை அறியாது வந்த தீமைகளில் சிக்குண்டு மீளாத நிலைகள் கொண்டு விஷத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபடவேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன்.

மகரிஷிகள் தமக்குள் தீமைகளை நீக்கிய நிலைகள் கொண்டு அவர்கள் ஒளியின் சுடராகப் பெற்ற ஆற்றல்மிக்க உணர்வுகள் இங்கே படர்ந்துள்ளது.

அந்த மகரிஷிகளை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்கள் உடலிலே விளைந்த உணர்வுகளை நீங்கள் கவர முடியும்.

கரும்புச் சாற்றுக்குள் பொட்டாசியத்தைப் போட்ட பின் சர்க்கரையைத் தெளிவாக (வெண்மையாக) ஆக்குவது போல் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து “ரிமோட் கன்ட்ரொல்…” போல் தீமைகளை அகற்றி
1.உங்கள் இரத்தங்களைத் தூய்மையாக்கும் ஆற்றல் பெறுவீர்கள்
2.உங்கள் உடலில் உள்ள உறுப்புகளில் உள்ள குறைபாடுகளை நீக்கி
3.சர்க்கரை நோயை அகற்றிடும் ஆற்றல் பெறுவீர்கள். 

நலம் பெறுக…! வளம் பெறுக…! மகரிஷிகளின் அருள் சக்தி பெறுக…!