ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 27, 2017

உங்கள் மனக் குழப்பத்தை அகற்ற “ஆத்ம சுத்தி” என்ற ஆற்றல் மிக்க ஆயுதத்தைக் கொடுக்கின்றோம் – அது பனிரெண்டு வருடம் காடு மேடெல்லாம் அலைந்து உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதமாகும்

எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து நோய் போய்விடும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.

வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.

1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.

அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… “நீ எப்படி எடுக்க வேண்டும்…” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும், நிவர்த்தி செய்ய முடிந்தது.

அப்படி நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன்.

அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினை பதியச் செய்கின்றேன்.

துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.

நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு…, உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்”.

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய்ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.

1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.
ஒரு நீரின் கீழ் தெளிந்த நீராக இருந்தவுடன் கீழே இருக்கக் கூடிய பொருளை நாம் காணமுடிகின்றது. நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் “அலைபாயும் பொழுது… தெளிவாகத் தெரிவதில்லை”.

நன்மையான நிலைகளை நாம் தெளிவாக்க முடியாத நிலைகளில் இருக்கும் அந்த நேரத்தில் மெய்ஞானியின் உணர்வின் அலைகளை நமக்குள் செலுத்தப்படும் பொழுது
1.பல உணர்வின் அலைகள்
2.அலைந்து கொண்டிருக்கும் நிலையை
3.அது நமக்குள் சமப்படுத்தி நிறுத்தும்.

அந்த அருள் ஒளியின் தன்மை நமக்குள் உயிரான தன்மை கொண்டு “ஒளியாக வீசிக் கொண்டே இருக்கும்… வளர்ச்சியாகும்”.

அவ்வாறு அந்த உணர்ச்சியின் நிலைகள் பெற்று வாழ்க்கையிலே மகிழ்ச்சி என்ற நிலையில் இந்த உடலை விட்டுச் சென்றபின் நம் உயிராத்மா ஒளியாக மாறி மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்ல முடியும்.

“அந்த மகரிஷிகள் வேறல்ல… நாம் வேறல்ல…” என்ற நிலையை ஒவ்வொருவரும் எய்த முடியும்.