ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 16, 2017

நுகர்ந்த உணர்வால் மின்மினிப் பூச்சியின் உடலில் ஒளிக்கற்றைகள் வெளிப்படுவது போல் “மின் பொறிகளை (மின்னல்களை) நுகர்ந்து” துருவ நட்சத்திரமானார் அகஸ்தியர்

வானுலக ஆற்றலையும் புவியின் செயலாக்கங்களையும் முதன் முதலாகக் கண்டுணர்ந்தவர் அகஸ்தியர்.

ஏனெனில் அவர் தம் தாய் தந்தை உடலில் விளைந்த சத்து அவருக்குள் இயங்கித் தாவர இனங்களின் வளர்ச்சியையும் தாவர இனங்களில் செயல் மாற்றங்களையும் அதனால் ஏற்படும் அணுக்களின் தன்மையும் தெளிவாக அவரால் அறிய முடிந்தது.

கற்று அல்ல. 

உணர்வின் இயக்கம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அது அறிவின் தன்மையாக அகஸ்தியரிடத்தில் விளைந்தது.

அனைத்தையும் அறிந்துணர்ந்த அகஸ்தியர் துருவத்தை எல்லையாக வைத்து
1.துருவத்தை உற்று நோக்கி
2.அதனின்று வருவதைத் தமக்குள் உருவாக்கி
3.ஒளியின் கற்றைகளாக மாற்றியமைத்தார்.

மின் மினிப் பூச்சி தான் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனுடைய அடிப்பகுதியில் ஒளிக்கற்றைகள் வெளிப்படும். அதைப் போன்று
1.அகஸ்தியர்  துருவப் பகுதியில் வரும் சத்தினையும்
2.மின் பொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும்பொழுது உருவாகும் மின் கற்றைகளையும் நுகர்ந்து
3.அந்தப் பொறியின் உணர்வுகளை தமக்குள் விளையச் செய்தார்
4.நுகர்ந்த உணர்வுகள் அவருடைய உடலில் உள்ள அணுக்களில் கலந்து ஒளிக்கற்றைகளாக மாறியது.

இதன் தொடர் கொண்டு அவரிடத்தில் இதனின் பெருக்கம் ஆகும்போதுதான் உடல் பெறும் உணர்வை ஒளியாக மாற்றி அமைத்தார் அகஸ்தியர்.

இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

விஞ்ஞானிகள் பலவற்றைக் கண்டுணர்ந்தாலும் அகஸ்தியர் கண்டறிந்த எல்லை வரை செல்லவில்லை.

விஞ்ஞானம் உடலின் இச்சைக்குத் தான் வழியமைக்கின்றதே தவிர ஆன்மாவிற்கு வழி அறியவில்லை.

விஞ்ஞானிகள் வானுலக ஆற்றலில் சிலவற்றைக் கண்டறிகின்றனர்.

வானியலில் விஞ்ஞான அறிவுகொண்டு செயல்பட்டாலும் அகஸ்தியரின் அருளுணர்வுகள் சிறிதளவு கிடைத்தால்தான் அந்த விண்ணுலக ஆற்றலுக்குச் செல்கின்றனர்.

ஆனாலும் அகஸ்தியர் கண்ட உண்மையின் உணர்வை தமக்குள் ஒளியாக உருவாக்கிய நிலையை “விஞ்ஞானிகள் இன்னும் எட்டவில்லை”.