ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 22, 2025

“எம்முடைய உபதேசங்களை எல்லோரையும் கேட்கச் செய்து” உண்மைகளை உணரக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்குங்கள்

“எம்முடைய உபதேசங்களை எல்லோரையும் கேட்கச் செய்து” உண்மைகளை உணரக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்குங்கள்


நீங்கள் எல்லோரும் அருள் வழியில் தயாரானால்தான் மிகவும் நல்லது. ஒரு விதையைப் போட்டால் உயர்ந்த நிலைக்கு அதை விளைய வைத்து வளர்த்துக் காட்ட வேண்டும்.
 
ஒருவர் வேதனை நோய் என்று சொன்னால் அதைக் கேட்பவர்களுக்கு எல்லாம் அந்த நோய் வரும். அருள் ஒளியைப் பெற்று இருளை நீக்கக் கூடிய சக்தி பெற்று உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நோய்களைப் போக்க வேண்டும்.
1.சாமியாக நீங்கள் இருக்க வேண்டும்…! சாமிக்கு மட்டும் அந்தச் சக்தி அல்ல.
2.அந்த உயர்ந்த நிலைகளில் நீங்கள் செயல்பட வேண்டும்.
 
 அதை நீங்கள் சீராகச் செயல்படுத்த வேண்டும் என்றால் யாம் வெளிப்படுத்திய உபதேச கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுப் படிக்க வேண்டும். உங்களுக்குள்ளும் பாடமாகும் மற்றவர்களுக்குள்ளும் பதிவாகும்.
 
தனித்துச் செல்லும் பொழுது தவறு என்று வந்தால்பார்…! சாமி சொன்னதை இவர் தவறாகச் சொல்கின்றார் என்று ஆரம்ப நிலைகளில் வரும்.
1.ஆனால் எல்லோரும் உபதேசங்களைக் கேட்டுப் படிக்கப்படும் பொழுது எல்லோருமே அந்த உண்மைகளை உணரக்கூடிய சக்தி வரும்…”
2.அப்படிப்பட்ட நிலையை உருவாக்க வேண்டும்.
 
காரணம்… போர் என்ற நிலையில் அணுகுண்டுகளையோ மற்ற கெமிக்கல் குண்டுகளையோ உயிரியல் குண்டுகளையோ பயன்படுத்தினால் அதை எல்லாம் நாம் ரிமோட் செய்யக்கூடிய (தடுக்கும்) சக்தியாக வரவேண்டும்…”
 
ரோட்டிலே நாம் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம் ஒருவன் தவறான எண்ணத்துடன் செல்கின்றான் என்றால் அவனுடைய நடை மாறும். அவன் மீது அறியாமலே நமக்கு ஒரு வெறுப்பு வரும்.
 
ஒருவன் சைக்கிளை ஓட்டிச் செல்கின்றான் கண்ணிலே உற்றுப் பார்த்த உடனே உயிரிலே மோதச் செய்கின்றது. அவன் மீது வெறுப்பு வருகின்றது. நாம் சும்மா ரோட்டில் நடந்தாலும்
1.இந்தக் கண் இப்படி அளந்து பார்க்கிறதுகாண்பிக்கின்றது.
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வுகள் பதிவாக்கி
3.அந்த உணர்வுகளைக் கவர்ந்து உயிரிலே மோதும் பொழுது தான் உணர முடிகின்றது.
 
ஜோசியம் பார்ப்பவர்கள் எல்லாம் அதே பழக்கத்தில் இருப்பார்கள். வந்தவுடன் தெரிந்து கொள்வார்கள். நீங்கள் கஷ்டத்துடன் வந்திருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் அவர்கள் அதைச் சொல்லுகின்றார்கள்.
 
ஆனால் அதே பழக்கத்தில் எடுக்கப்படும் பொழுது மற்றவர்களுடைய கஷ்டத்தை நுகர்ந்தவர்கள் கடைசியில் அவர்களுக்குள் பல விதமான நோய்கள் வரும். எல்லோருக்கும் ஜோசியம் செல்வார்கள்.. கடைசியில் அவர்களுக்கு நோய்கள் தான் வரும்.
 
உங்களுக்கு நான் கொடுத்த பவரை” (சக்திகளை) வைத்துப் பார்க்கப்படும் போது கஷ்டங்கள் தெரிய வரும். அல்லது மற்றவர்கள் தவறு செய்தால் தெரியும் தவறான ஆள் என்றும் உணர்த்தும்.
 
அதைத் தெரிந்து கொண்ட பின் அவன் மோசமான ஆள் ஏமாற்றுவான் என்று சொல்லிப் பழகினால் என்ன ஆகும்…?
1.இந்த உணர்வு தான் நம்மை இயக்கும்அவன் உணர்வு தான் நம்மை இயக்குகின்றது
2.நம் நல்ல உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை அதை மாற்ற வேண்டும் அல்லவா.
 
இந்த மாதிரித் தவறான உணர்வு வந்தால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் செல்லாதபடி தடுக்க வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் வலுவாக்க வேண்டும். வலுவான பின் நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அந்தத் தீமைகள் அகன்று செல்கின்றது.
 
ஆகவே… உயர்ந்த சக்தியைக் கூட்டப்படும் பொழுது தீமைகளை நீக்குகின்றது. உள்ளே சென்று இயக்காதபடி தடைப்படுத்துகின்றோம். வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
 
குழந்தை படிக்கவில்லை சேட்டை செய்கிறான் என்று நினைத்தாலே அது உடனே வேலை செய்யும். ஆகவே இது போன்ற சமயங்களில் எல்லாம் ஆத்ம சுத்தியை உடனே கடைப்பிடித்தாக வேண்டும்.
 
ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
 
இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
 
மனிதர்களுடன் நாம் பேசுகின்றோம். ஒருவருக்கொருவர் கோபமாகப் பேசிப் பதிவு செய்யப்படும் பொழுது நமக்குள்ளும் அது வந்து விடுகிறது. சந்தர்ப்பத்திலே நாம் சோர்வடையப்படும் போது இவனால் தான் னக்கு எத்தனை கஷ்டம் வந்தது இவனெல்லாம் உருப்படுவானா…! என்று சும்மா இருக்கும் பொழுது எண்ணங்கள் தோன்றும்.
 
இப்படிப்பட்ட எண்ணங்கள் வரும்பொழுது மற்ற வேலைகளை நாம் சரியாகச் செய்ய முடியாது தவறுகள் வந்துவிடும்…! பெண்கள் சமையலிலே காரத்தை அதிகமாகப் போட்டு விடுவார்கள். குழம்பைச் சரியாக வைக்க மாட்டார்கள். காய்கறிகளை வித்தியாசமாகச் சமைப்பார்கள்.
 
எது இயக்குகின்றது…? நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஏனென்றால் இது எல்லாம் நான் கண்ட உண்மைகள்.
 
அதே சமயத்தில் உங்களைக் கண்ட மாத்திரத்திலே உங்களுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையும் நான் சொல்லலாம்.
1.ஆனால் அதைச் சொல்வதை விடுத்து
2.உங்களுக்கெல்லாம் நல்லதாக ஆக வேண்டும் என்று தான் நான் மாற்ற வேண்டும்.
 
இதைப் போல நீங்களும் ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வந்தால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து அவர்களுக்கு நல்ல மனதும் நல்ல எண்ணங்களும் நல்லது செய்யக்கூடிய எண்ணங்களும் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
1.அவரைப் பற்றி இவ்வாறு நாம் எண்ணினால் நாம் அந்த நல்லதைப் பெறுகின்றோம்.
2.அவருடைய தீமையின் உணர்வைக் குறைத்து இதை வளர்த்து அருளுணர்வைப் பெற்றால்
3.உயிர் நம் இரத்தங்களிலே படரச் செய்கின்றது இரத்தத்தில் கலந்த அருள் உணர்வுகள் தீமைகளைத் தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதனுடைய இயக்கத்தைக் குறைக்கின்றது நல்ல அணுக்கள் பெருகுகின்றது.
5.நல்ல உணர்வும் நல்ல உடலும் நல்ல வளர்ச்சியும் நமக்குள் வருகின்றது.
 
உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன் உங்களால் தானே முடியும்.  ஆனால் சாமி ஒன்றும் செய்யவில்லை என்ற எண்ணத்தில் பலர் இருக்கின்றார்கள்.
 
தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியால் பிறருடைய தவறைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அந்தத் தீமைகள் நம் உடலுக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…” இந்த உண்மைகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றேன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
 
இயற்கையின் உண்மைகளை எல்லோரும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இதை உணர்த்தி அந்தத் தன்னம்பிக்கையைக் கொண்டு வருகின்றேன்.
 
1.அந்த அருள் ஒளியை என்றுமே நம் உயிருடன் சேர்த்துச் சொந்தமாக்கி நாம் பழகுதல் வேண்டும்.
2.நான் யாரை நினைக்கின்றேன்…? உங்களைத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
3.உங்களுக்கு ஃபுல் பவர் (FULL POWER) சதா கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
 
உங்கள் உயிரை ஈசனாக மதிக்கின்றேன் அவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் புனிதத் தன்மைகள் ஏற்பட வேண்டும் ஈசன் வீற்றிருக்கக் கூடிய உடலான சிவம் உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் அதனால் உயர்ந்த நிலை ஏற்பட வேண்டும்.
 
உங்களிடமிருந்து வெளிப்படும் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடிய நிலை வர வேண்டும். என்னுடைய தியானமே இது தான்…” நீங்களும் அதே போன்று செய்து பாருங்கள்.
 
அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறைந்து கொண்டே வரும். ஆகவே… எங்கே குறைகளைக் கண்டாலும் அந்தக் குறை நமக்குள் இயக்காதபடி அருள் ஒளியைக் கூட்டி அன்பையும் பண்பையும் பேணிக் காக்கும் அருள் ஞானம் அவருக்குள் பெருக வேண்டும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி விட்டீர்கள் என்றால் அது ஒவ்வொரு நொடியிலும் நம்மைக் காக்கும் அவர்களையும் காக்கும்.
 
துருவ நட்சத்திரத்தை எண்ணினால் விஷ்ணு தனுசாக மாறுகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் இரத்தத்திலே கலக்கப்படும் பொழுது சிவ தனுசை அடக்குகின்றது.
 
பிறிதொருவர் தீமைகள் சிவ தனுசுஅதைப் போய் இது அடக்குகிறது. ஏனென்றால்
1.அதைக் காட்டிலும் வலுவானது விஷ்ணு தனுசு…”
2.இது செய்யப்பட்டது இனி நாம் செய்ய வேண்டியது.
 
அருள் மணங்களை நாம் எப்படி எடுக்க வேண்டும்…? என்று இராமாயணத்தில் இப்படித் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
 
ஒவ்வொரு குடும்பத்திலும் சிவ சக்தி என்ற நிலையில் செயல்பட வேண்டும் சக்தி தான் சிவமாகின்றது பெண்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்தச் சக்தி என்ற நிலையை உருவாக்கித் தன் கணவனுடன் சேர்க்கப்படும் போது சிவமாகின்றது.
 
சக்தி என்ற உணர்வுகள் கணவன் தனக்குள் நுகர்ந்து
1.மனைவியின் ஆற்றல் எனக்குக் கிடைக்க வேண்டும்
2.என் மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
3.இருவருமே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுத்து இதை வளர்த்துப் பாருங்கள்.
4.இரு உணர்வும் ஒன்றாகின்றது அதனுடைய நல்ல பலன்களை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 
விஞ்ஞான அறிவில் வளர்ந்து கொண்டே தான் செல்கின்றார்கள். எத்தனையோ விதமான நிலைகளைப் பரவ விட்டுள்ளார்கள். அதிலே தப்பும் வழி இல்லை.
 
ஆகவே நாம் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும். இரவு படுக்கப் போகும் போது முதலில் தாய் தந்தையை நினையுங்கள். அவர்தான் நம்மை மனிதனாக உருப்பெறச் செய்தார்கள்.
 
அந்த அரும் பெரும் சக்தியின் துணை கொண்டு அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்திகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த எண்ணத்தோடு படுங்கள்.
1.இரண்டு நிமிடம் மூன்று நிமிடம் சொல்லுங்கள்.
2.உங்கள் உடலுக்குள் இந்த அருளைப் பாய்ச்சுங்கள் திரும்பத் திரும்ப எண்ணுங்கள்.
 
எங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வர வேண்டும் கல்வியில் ஞானம் வர வேண்டும். நாங்கள் வேலை செய்யும் இடங்களில் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். பகைமைகள் அகல வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
 
என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் எல்லோருக்கும் உயர்ந்த எண்ணம் வர வேண்டும் என்று இரவில் இப்படி எண்ணி வளர்த்துப் பழகுங்கள் இதை வளர்க்க வளர்க்க அந்தப் பகைமைகள் நிச்சயம் மாறும்.
 
இப்படி நம் வாழ்க்கையையே தியானமாக்கிப் பழக வேண்டும்…!