1.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து... “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி... பூமியின் வட துருவப் பகுதியின் வழியாக வட கிழக்குப் பகுதியில் விண்ணிலே நினைவைச் செலுத்தும்
பழக்கம் வர வேண்டும்.
2.நம்முடைய அந்த நினைவலைகள் அங்கே அகஸ்தியன் துருவனாகி
துருவ மகரிஷியாக நிலை கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நேரடியாக (உணர்வு
பூர்வமாக) மோத வேண்டும். புருவ மத்தியின் வழியாக உணர்வுகள் சென்று துருவ நட்சத்திரத்துடன்
நேரடியாக மோத வேண்டும்.
3.ஒரு பொருளுடன் பொருள் மோதினால் அதிர்வு (ECHO)
வருவது போல் துருவ நட்சத்திரத்தின் அதிர்வு (ECHO) நமக்குள் ஒலி/ஒளி அலைகளாக வரும்.
புருவ மத்தியில் பார்க்கலாம்… உணரலாம்…! உடல் முழுவதும் ஒளிமயமாகத் தெரியும்.
4.அதைத் தடுத்து நிறுத்தினால் துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகள் தெரியும். அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ள சப்தரிஷி மண்டல உணர்வுகளும் தெரியும்.
5.சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகப்
பெருக அவ்வாறு வரும் (அல்லது வந்து கொண்டிருக்கும்) அந்த உணர்ச்சிகள் கொண்டு அவர்களுடன்
உணர்வு பூர்வமாகப் பேசலாம்.
6.இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து
விடுபடச் செய்யும் ஞானம் கிடைக்கும். அதற்குண்டான ஆற்றலும் சக்தியும் கிடைக்கும். நம்
வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகளிலிருந்து
விடுபட முடியும்.
7.நம் குல தெய்வங்கள் முன்னோர்களின் உயிரான்மாக்களைப்
பிறவியில்லா நிலை அடையச் செய்து சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க முடியும்.
8.விஞ்ஞானத்தின் அழிவிலிருந்தும் விடுபட்டு நாம்
இந்த உடலுக்குப் பின் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.
அது தான் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் இணைப்பு
("LINK…!")