ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2018

காந்திஜிக்கு ஞானமும் மக்களைக் காக்கும் மன பலமும் கிடைத்தது எப்படி...?


உலகம் முழுவதற்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் தன்மை கொண்டு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் காந்திஜி தன் பிழைப்பிற்காகத் தென்னாப்பிரிக்காவிற்குச் செல்கின்றார்.

தான் கற்ற சட்டக் கல்வியை வைத்து அந்த நாட்டிலே தான் உயர்வு பெறலாம் என்ற எண்ணத்தில்தான் செல்கின்றார். ஆனால் அங்கே செல்லப்படும் போது
1.இந்திய மக்கள் வாடுவதையும் கருப்பு இன மக்கள் துடிப்பதையும்
2.ஆங்கிலேயருடைய அதிகாரத்தின் நிலைகள் எவ்வாறெல்லாம் செயல்படுகின்றது…? என்பதையும் கண்டுணர்கின்றார்.

ஆங்கிலயேரின் செயல்பாடுகளை வக்கீலாக வாதாடி அந்த உண்மைகளைச் சொல்லப்படும் போது அவர் மேல் முட்டையை வீசுகின்றார்கள். அவரை அசிங்கப்படுத்துகின்றார்கள்.

அப்போது தான் அவர் சிந்திக்கின்றார்...!

அங்கே இருக்கும் மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கின்றது...? என்ற நிலையில் அவர்கள் படும் துன்பங்களையும் துயரமான உணர்வுகளையும் சந்திக்கப்படும் பொழுது ஈவும் இரக்கமும் அவருக்குள் வருகின்றது.

இவர் தன்னுடைய சிறிய வயதில் செய்த தவறுகளை எல்லாம் அப்பொழுது உணர்கின்றார்.  அப்படி உணரப்படும் போது தான் “சேவை...!” என்ற உணர்வுகள் அங்கே அவருக்குள் வருகின்றது.

ஏனென்றால் அன்று வேடுவனாக இருந்த வான்மீகி தான் இரு பட்சிகள் ஆனந்தமாக இருக்கப்படும் பொழுது ஒரு பட்சியைத் தன் அம்பால் வீழ்த்துகின்றான். அது துடிதுடித்துக் கீழே விழுந்து இறக்கின்றது.

கூட வந்த மற்றொரு பட்சியோ தன் பாச உணர்வுகள் கொண்டு ஏங்கிப் பார்க்கின்றது. அந்த பட்சியிடமிருந்து வெளி வரும் பாசமான உணவலைகள் அலைகளாகப் படரப்படும் போது அதையும் இவன் குறி வைத்துத் தாக்க எண்ணுகின்றான்.

இருந்தாலும் அந்தப் பட்சி... தன்னுடைய எல்லை கடந்த பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது  
1.அந்தப் பட்சி எண்ணிய உணர்வுகள் வேடுவனுக்குள் ஊடுருவி
2.இவன் உடலுக்குள் இருக்கும் பாச உணர்வுகளைத் தூண்டச் செய்து
3.தன் மனைவி குழந்தைகள் மீது வரும் “தன் இனத்தின்...!” பாச உணர்வுகளை உந்தச் செய்கின்றது.

அதன் பின் தான் வேடுவனான வான்மீகி பட்சியைக் கொல்வதை விடுத்து வானை நோக்கி ஏகுகின்றான். அப்படி வானிலே ஏகும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவன் சுவாசத்தில் சிக்கப்பட்டுத் தன் தவறை உணர்ந்து திருந்துகின்றான்.

பட்சியிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகள் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாகப் பரப்பும் பொழுது அதை நுகர்ந்து சுவாசிக்கும் பொழுது
1.அது எப்படித் தனக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறது...? என்றும்
2.அந்த எண்ணத்தின் தோற்றமும் இயக்கங்களும் எப்படிச் செயல்படுகின்றது என்பதையும்
3.இராமனாக உருவகப்படுத்தி இராமாயணமாக எழுதுகின்றான்.

அந்த வான்மீகியைப் போன்றுதான் தன் இளமைப் பருவத்தில் சிற்றின்பமும் மற்றவருடைய நிலைகள் தவறான நிலைகளையும் செய்து வந்தர்தான் காந்திஜியும்.

ஆனாலும் தென்னாப்பிரிக்காவில் மக்கள் துயர் படும் உணர்வினைக் கண்டார். அவர்களைப் பழித்துப் பேசுவதைக் காணப்படும் போது இதிலிருந்து எப்படி மீள்வது…? என்ற நிலையில் நன்மையைப் பற்றிச் சிந்திக்கின்றார்.

ஆங்கிலேயர்கள் காந்திஜியைப் பழித்துப் பேசுகின்றார்கள். இருந்தாலும் இந்த உணர்வின் தன்மை மாற்றமடையப்படும் போது “ஏழ்மையில் வாடும் மக்களை மீட்ட வேண்டும்...!” என்ற உணர்வு கொண்டு தான் கல்வி கற்ற உணர்வின் அறிவைப் பயன்படுத்தத் தொடங்குகின்றார்.

காந்திஜி வான்மீகியின் இராமாயணக் காவியத்தைப் படித்த அந்த உணர்வின் தொடர்கள் அவருக்குள் இயக்கமாகின்றது.
1.அன்று வேடுவனான வான்மீகிக்குள் எப்படித் திருத்தமானதோ
2.அதே போல இவருக்குள்ளும் இந்த நினைவுகள் திருத்தமாகி
3.உலக மக்களைக் காக்க வேண்டும்...! என்ற எண்ணம் வலுவாகின்றது.

தீமை செய்வோர் உணர்வுகள் தனக்குள் வரப்படும் போது அந்தத் தீமையின் உணர்வுகள் வளர்ச்சியாகி “நம்மையும் எப்படித் தீமை செய்ய வைக்கின்றது...?” என்று உணர்கின்றார்.

1.தீமையிலிருந்து மீள வேண்டும் என்றும் தன் இனத்தைக் காக்க வேண்டும் என்று
2.அன்று அந்தப் பட்சி எடுத்துக் கொண்ட “தன் இனத்தைக் காக்கும் உணர்வுகள்”
3.வான்மீகிக்குத் தீமையிலிருந்து விடுபடும் உணர்வை அந்தப் பட்சி  ஊட்டியது போன்று
4.தீமை என்ற உணர்வுடன் வருவோரிடமிருந்து மக்களை ஏன் மீட்கக் கூடாது…? என்ற உணர்வினைக் காந்திஜி எடுத்துக் கொள்கிறார்.

இராம காவியத்தைப் படைத்த வான்மீகியின் நிலைகள் கொண்டு இந்த எண்ணங்கள் எப்படி…? என்ற நிலையைத் தெரிந்தோ தெரியாமலேயோ அதனின் உண்மை நிலையை தெளிவாக உணர்ந்து அதன் வழியில் கடைப்பிடித்துத்தான்
1.நாம் பெற வேண்டியது எதை...?
2.நாம் சாந்தமாகச் செயல்பட வேண்டியது எவ்வாறு...? என்ற
3.அந்த அருள் உணர்வினைத் தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தக் காந்தி மகான்
4.எத்தனையோ துயர்களிலிருந்து எல்லா மக்களையும் மீட்டிக் கொடுத்தார்.
5.இந்தியாவிலும் மக்களை மீட்ட வேண்டும் என்ற நிலையில் நம்மையும் மீட்டிக் கொடுத்தார்.

காந்திஜியை நாம் எண்ணி அவர் பெற்ற சாந்தமும் ஞானமும் விவேகமும் பெறவேண்டும் என்று எடுத்தால் நம்மை அறியாது இயக்கும் கடுமையான பகைமைகளிலிருந்து விடுபட முடியும்.

அதே போல மற்றவர்களைக் காக்கும் சக்தியும் ஆற்றலும் அந்த மன வலிமையையும் நாம் நிச்சயம் பெற முடியும்...!