ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2018

“அக்காலத்தில் கணவன் மனைவியாக ஒன்றி வாழ்ந்தவர்கள் தான்...” சப்தரிஷி மண்டலமாக இன்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்...!


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் குரு காட்டிய அருள் வழிகளில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அரும் பெரும் சக்திகளையும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் அரும் பெரும் சக்திகளையும் பெறக் கூடிய வழியைக் காட்டுகின்றோம்.

1.அந்த வழியில் இதைக் கடைப்பிடிப்போருக்கு
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் “ஒளிப் பேழைகளாக...!” வருவதைப் பார்க்கலாம்.
3.உயிருடன் ஒன்றி உங்கள் புருவ மத்தியில் அந்த ஈர்ப்பின் தன்மை வரும்.
4.புருவ மத்தியில் மோதும் அந்த “மின்னணுவின் உணர்வுகள்...!” உங்கள் நினைவாற்றலை
5.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றது.

எந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணுகின்றோமோ அதைப் பின்பற்றிச் சென்றோர் அக்காலத்தில் வாழ்ந்த அனைவரும் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றார்கள். பேரின்பப் பெரு வாழ்வாக வளர்ந்து வருகின்றார்கள்

எவ்வாறு…?

மனித வாழ்வில் உயர்ந்த உணர்வின் தன்மையை தன் மனைவிக்குப் பெற வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குப் பெற வேண்டும் என்று இந்த உணர்வு இரண்டையும் ஒன்றாக்கியவர்கள்...
1.கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி
2.கணவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி
3.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி
4.கணவன் மனைவியாகத் தனக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்துக் கொண்டவர்கள் தான் அந்தச் “சப்தரிஷிகள்...!”

அவர்களைப் போன்ற அருள் வாழ்க்கையை நாமும் வாழ்ந்து அவர்கள் அருள் வட்டத்தில் நாமும் இணைந்து வாழ வேண்டும்.

இப்போது எப்படி ஆண் பெண் என்ற அன்பில் எண்ணத்தின் உணர்வு கொண்டு
1.மகிழ்ச்சி பெறும் நிலைகளை உருவாக்கப்பட்டால் காமமாகின்றது.
2.அந்தக் காமத்தின் நிலைகள் கொண்டு இரு மனமும் ஒன்றாகின்றது.
3.அதிலே விளையும் அணுக்களின் தன்மைகள் அமிலங்கள் ஒன்று சேர்க்கின்றது.
4.பின் தன் இனத்தின் விருத்திகளை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் மகரிஷியின் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் தன்மை மோகமாக்கி அதனின் உணர்வைத் தனக்குள் அணுவாக்கிடல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கணவன் மனைவி இருவரும் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற வேண்டும் என்றும் மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற வேண்டும் என்றும் இரு உணர்வும் ஒன்றாக்கிய பின் கருவிலே வளரும் சிசுவிற்கும் அந்த மகரிஷியின் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வினை வளர்த்து விட்டால் கருவிலே வளரும் குழந்தைக்குள்ளும் அருள் ஞானம் வருகின்றது.

இதெல்லாம் அன்றைய மெய் ஞானிகள் காட்டிய அற வழிகள்.

இதன் வழி கொண்டு செயல்படுவோம் என்றால் உடலை விட்டுச்  செல்லும் இரண்டு உயிரான்மாக்களும் ஒன்றாகி எந்தத் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் எண்ணினோமோ அதன் வழி ஈர்க்கப்பட்டு அந்த அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைகின்றோம்.