ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2018

நம் வாயிலே சுரக்கும் உமிழ் நீரின் சத்துக்கொப்பத்தான் உடலின் ஆரோக்கிய நிலை அமைகின்றது


நோயால் வாடிக் கொண்டு வேதனைப்படுவோரை நாம் பார்த்தால் அதே உணர்வுகளை அவர் எந்தெந்த வகையில் எடுத்தாரோ சிறிது நேரம் நம்மிட,ம் அவர் பேசினார் என்றால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் வித்தியாசமாக மாறும்.
1.ஒன்று கசப்பு கலந்ததாக இருக்கும். (கவனித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்)
2.அல்லது பித்தத்தைப் போல அவர் நோய்க்குத் தக்கவாறு உமிழ் நீர் மாறும்.
3.சிறிது நேரம் உறவாடிக் கொண்டிருந்தாலே இந்த நிலை ஆகும்.

இந்த உடலுக்குள் - துவாரகாயுகத்தில்
1.நாம் அந்த உணர்வுகளைச் சுவாசித்த பின் இது உமிழ் நீராக மாறி
2.நம் உடலில் நோயாக வரத் தொடங்குகின்றது.

நாம் ஒரு உணர்வின் தன்மையை உற்றுப் பார்த்து நுகரப்படும் பொழுது தான் வலிமை தெரிகின்றது. அந்த வலிமையான உணர்வுகளைச் சுவாசித்த பின் அதனின் சத்தாக உமிழ் நீர் சுரக்கின்றது.

ஏனென்றால் சுவாசத்தில் மோதும் உணர்வின் தன்மை உமிழ் நீருடன் சேர்த்து நம் ஆகாரத்துடன் சேர்க்கப்படுகின்றது. அது இரத்தமாக மாறி நம் உடலுக்குள் பல விதமான வித்தியாசங்களை உண்டாக்குகின்றது.

யாம் (ஞானகுரு) உபதேசிப்பதை இப்பொழுது கேட்டுக் கொண்டு வருகின்றீர்கள். முதலில் உங்கள் உமிழ் நீர் வேறு சுவையாக இருந்திருக்கும்.

அதே சமயத்தில் இப்பொழுது தொடர்ந்து சொல்லும் பொழுது அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கேட்டவுடன் வித்தியாசமான உணர்ச்சிகள் உங்கள் உமிழ் நீர்களில் சேரும்.

உங்களுக்குத் தெரிகிறதா...? பல ருசிகள் தெரியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டல உணர்வுகளையும் நீங்கள் சுவாசிக்க நேர்ந்தால் உங்கள் உமிழ் நீர் அது மழை நீர் போன்றோ அல்லது கனியின் சுவைகள் போன்றோ உங்களுக்குள் சுரக்கும்.
1.சப்தரிஷி மண்டல உணர்வின் ஆற்றல்
2.ஒரு துளி உமிழ் நீராக நமக்குள் சேர்ந்தால்
3.ஒரு வருடத்திற்கு நமக்குத் தேவையான உயர்ந்த சத்தாக அமையும்.

அருள் உணர்வுகள் நமக்குள் உமிழ் நீராக இவ்வாறு சேரும் பொழுது நம் உடல் ஆரோக்கியம் அடைகின்றது. தீமைகள் அகற்றும் மன வலிமை கிடைக்கின்றது.

அருள் ஒளியின் உணர்வுகள் நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் விளையத் தொடங்கும். ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்…!