ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2018

நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் “சூறாவளியைக் கூட வராமல் தடுக்க முடியும்...!”


விஞ்ஞானிகள் யுரேனியத்தைத் தனியாகப் பிரித்து அதனுடன் பல பொருளைச் சேர்த்து அதை அணு குண்டாக உருவாக்குகின்றனர் அதை உருவாக்கும் பொழுது அதில் வெளிவரும் கசிவுகளைச் சூரியன் எடுத்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது.

அதே போல நியூட்ரான் என்ற அந்த விஷத் தன்மைகள் தாக்கியபின் மற்ற எல்லாம் அகண்டு ஓடுகின்றது.
1.ஓடும் பாதையில் மற்ற அணுக்களை இயக்கவும்
2.மற்றவைகள் ஒன்றோடு ஒன்று மோதவும்
3.அப்பொழுது இணைந்து கொண்ட உணர்வுகள் கொண்டு அணுக்களின் மாற்றமும் இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படுகின்றது.

ஆனால் நமது பூமியில் நமது நாட்டைக் காக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் அணு குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள். அங்கங்கே அந்தக் கசிவின் தன்மைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

இந்த விஷத்தின் தன்மை கவர்ந்து சூரியனால் கவரப்பட்டுப் பரவி வரும் நேரத்தில்
1.இந்த நியூட்ரான் என்ற உணர்வும் இந்தக் கதிர் இயக்கப் பொறியும்
2.இரண்டும் சந்திக்கும் நேரம் வரும் போது தான் இது நகர்ந்து ஓடுவதும்
3.அடுத்து நியூட்ரான் என்ற நிலை மோதும் போது சூறாவளி (TORNADO) போன்று உருவாகி
4.பெரும் பெரும் கட்டிடங்களில் மோதி அதைச் சுக்கு நூறாக்கித் தூக்கி எறிந்து கொண்டு போய் கொண்டு இருக்கின்றது.

இன்றைக்கு எங்கெங்கே அணுக் கதிரியக்கங்களை அதிகமாக உருவாக்கி வைத்திருக்கின்றார்களோ (அணுகுண்டு.. அணு மின் நிலையம்.., லேசர் கதிரியக்கங்கள்) அமெரிக்கா சீனா போன்ற நாடுகளில் அது எங்கெங்கு உற்பத்தியாகி எதனைப் பரீட்சித்துப் பார்த்தார்களோ அந்த நாடுகளில் பூராமே இந்தச் சூறாவளி உருவாகின்றது.

நம் நாட்டிலும் அணு மின் நிலையங்கள் இன்று அதிகமாகிவிட்டது. நம் நாட்டிலும் அதே போல சூறாவளி வரத் தொடங்கிவிட்டது.

மனிதனைக் காக்க என்ற எண்ணத்தில் விஞ்ஞானிகள் செய்தாலும் இந்த இயற்கையுடன் கலந்து வீரியத்தை இவர்களால் தடுக்க முடியாத நிலைகள் ஆகிவிட்டது.
1.அதாவது செயற்கைக் கோள் மூலமாக விண்ணில் இருந்து அறிந்து கொள்கின்றனர்.
2.இயற்கையின் இயக்கங்களைக் காணுகின்றான்.
3.மோதும் சந்தர்ப்பம் வருகின்றது... சூறாவளி வரப்போகிறது... நகரத்தை அழித்துவிடும்...! என்று
4.இதையும் உணர்கின்றார்கள் விஞ்ஞானிகள் - அவர்கள் செய்த விபத்துகளில் இருந்து தான் இது வருகின்றது.

அப்போது சூறாவளி உருவாகும் போது நகரத்தை விட்டு ஓடுகின்றார்கள். “ஓடிப் போங்கள்...!” என்று அறிவிப்பும் செய்கின்றார்கள். சுமார் இருபது இலட்சம் பேர் அந்த நகரமே காலி செய்கின்றனர் அமெரிக்காவில் பார்க்கின்றோம். டி.வி.யில் பார்க்கலாம்.

சனிக் கோளின் உணர்வுகள் நீர் இருக்கிற பக்கம் அதிகமாகப் பரவிச் சென்றால் அந்த நீர்களைக் கவர்ந்து பெரும் புயலாக மாற்றுகின்றது. நீர்களைக் கண நீராக மாற்றி அந்த உணர்வுகள் அழுத்தமாகப் போய்ப் பரவப்படும் போது பெரும் மழையாக மாறுகின்றது.

இதைப் போன்ற சம்பவங்கள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் அனு தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்குக் காட்டிய வழிப்படி நாம் செய்யும் தியானத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி நமக்குள் விளைய வைத்து பூமியில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மைகள் நீங்க வேண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நாம் பரவச் செய்ய வேண்டும்.

அப்போது இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் இது சிறுகச் சிறுகக் கூடி ஒரு அடர்த்தியின் தன்மையாக வரும்.

விஞ்ஞான அறிவால் வரும் இதைப்போல எதிர்ப்போ சூறாவளி போன்ற காற்றுகளோ அது நம் பக்கம் வராதபடி அந்தச் சுழிக் காற்றை மாற்றி விடலாம்.
1.சூறாவளி வரப்போகும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணி எடுத்து
2.நீங்கள் இருக்கும் இடத்தில் பரவச் செய்து பாருங்கள்.
3.அது திசை மாறிப் போகும்.

தியானம் இருந்தவர்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.