ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 11, 2023

நீங்களும் என்னைப் போன்றே ஞானத்தின் வழியில் வளர்ந்து வர முடியும்

வான் வீதியில் ஜீவணுக்கள் உருவாகின்றது... “வைரஸ் உருவாகின்றது” என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர் இங்கிருந்து செயற்கைக்கோள்களை விண்ணிலே அனுப்பி அங்கே பார்க்கப்படும் பொழுது இதையெல்லாம் காணுகின்றார்கள்.

சுமார் நாற்பது வருடத்திற்கு முன்பு நான் (ஞானகுரு) ஏற்கனவே இதை எல்லாம் வெளிப்படுத்தி உள்ளேன்.

சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகளும்... இரண்டு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கங்களும் அந்த அலைகள் உள்ளே வந்தால்... வியாழன் கோளின் கதிரியக்கமும் அதனுடன் சேர்ந்தால் இந்த உணர்வின் தன்மை சேர்ந்து உயிர்த் துடிப்பாகி உயிரணுவாக உருவாகும் என்று ஏற்கனவே குரு வழியில் விளக்கம் கொடுத்துள்ளேன்.
1.துடிப்பாகும் பொழுது இயக்கமாகிறது...
2.அதனுடைய இயக்கத்தை “ஈசன்” என்று ஞானிகள் பெயரை வைத்துள்ளார்கள்.

ஆனால் வைரஸ் என்ற நிலையானால் எதன் உணர்வைக் கவர்ந்ததோ அதை வளர்க்கும் அந்த அணுவாகின்றது.

உயிரணு தோன்றுவது அங்கே பால்வெளி மண்டலத்தில். பூமி இழுத்துக் கொண்டால் மற்ற சத்தினைக் கவர்ந்து கொள்ளும் பொழுது வைரஸ்.

அதே சமயத்தில் பூமிக்குள் வந்தால் இதன் உணர்வை எடுத்து... அடுத்து இதைக் காட்டிலும் வலுவான தாவரங்களை எடுத்து உடலாக மாற்றிக் கொள்கிறது. கவர்ந்து கொண்ட தாவரத்தின் உணர்வுக்குத் தக்க புழுவாகவோ பூச்சியாவோ உருப் பெறுகின்றது

மனித உடலுக்குள் வந்தால் இந்த உணர்வை உட்கொள்ளும் விஷத்தன்மையாக மாறுகிறது. விஷத்தின் தன்மை எடுக்கப்படும் பொழுது (புதிய வைரஸ்கள்) எந்தெந்த நிலை ஆகின்றது...? என்பதை முன்பே நான் சொல்லி உள்ளேன்.

ஆனால் “ஆராய்ச்சியில் இன்று கண்டுபிடித்தார்கள்” என்று சொல்கின்றார்கள்.

ஏனென்றால் குருநாதர் காடுகளிலும் மேடுகளிலும் மலைகளிலும் பல இடங்களுக்கு என்னை அனுப்பி இந்தக் காற்று மண்டலத்தில் என்னென்ன இருக்கின்றது…? என்ன உருவாகின்றது…? என்று தெளிவாகக் காட்டினார்.

1.நான் கண்ட உண்மைகள் அதிகம்…
2.ஒரே தடவையில் அனைத்தையும் சொல்ல முடியாது
3.சிறுகச் சிறுக அதைச் சொல்லி வருகின்றேன்.
4.சிறுகச் சொன்னால்... சாமி சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை என்று விட்டுவிடாதீர்கள்.

ஒரு நாடாவிலே டேப் மூலம் பதிவாக்கி விட்டால் திருப்பி அதை இயக்கப்படும் பொழுது... எது பதிவோ அதை அப்படியே பேசுகின்றது.

அதே போன்றுதான் யாம் சொல்லக்கூடியதைக் கூர்ந்து கவனித்து நீங்கள் பதிவாக்கி விட்டால் சந்தர்ப்பம் உங்களுக்கு மீண்டும் அது (எம்முடைய பேச்சு) நினைவுக்கு வரும்.

ஒரு தீயவனைப் பார்த்தால் அவனுடைய உணர்வு வராதபடி தடுக்க வேண்டும் என்றால்... ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி... அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற புருவ மத்தியில் எண்ணிவிட்டால் அந்தத் தீய உணர்வு நமக்குள் புகாது தடுக்கப்படுகிறது.

அவ்வாறு தடுத்து நிறுத்தி விட்டு... அடுத்து நல்லதை எண்ணி நமக்குள் கலக்க வேண்டும். அதைச் செய்யப் பழக்கப்படுத்துவதற்குத் தான் இந்த உபதேசம்.

ஆக மொத்தம் நீங்கள் எல்லோருமே என்னை நம்புகின்றீர்கள்… இல்லையா…!
1.ஏன்..? நானும் மனிதன்தான்... நீங்களும் மனிதன் தான்…!
2.குரு வழியில் நான் எந்த உணர்வைப் பெற்றேனோ அதே உணர்வை நீங்களும் பெற்று ஏன் இதை வளர்த்துக் கொள்ளக் கூடாது…?

“சாமி செய்து தருவார்...” என்று மட்டும் எண்ணுகின்றீர்கள் ஆனால் “சாமி சொன்ன வழியினை...” நாம் பின்பற்றினோம் என்றால் நிச்சயம் அந்த நன்மை பெற முடியும் என்ற அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்.

என்னுடைய பார்வை என்னுடைய பேச்சு பிறருக்கு எப்படி நல்லதாகின்றதோ “அதே உணர்வை ஒத்து” நீங்களும் உங்கள் பார்வையால் உங்கள் பேச்சால் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதாக்கலாம் அல்லவா… தீமைகளைப் போக்கலாம் அல்லவா…!

பிறர்படும் கஷ்டங்களைப் பாசத்துடன் கேட்கின்றோம் அந்த உணர்வு வந்தபின் உடலுக்குள் வேதனையைத் தான் கொடுக்கின்றது நோயையும் உண்டாக்குகின்றது. இதைப் போன்ற தீமை உங்களுக்குள் வரக்கூடாது

1.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எத்தனை வகையான வேதனைகள் வரலாம்.
2.அதை எல்லாம் தவிர்த்துக் கொள்வதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால்
3.அந்த உணர்வின் தன்மை இங்கே நிறுத்தப்படுகின்றது.

இந்தப் பயிற்சியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.