ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2023

சரியான நேரத்தில் நல்லதைச் செயல்படுத்த முடியாதபடி போவதன் காரணம் என்ன…?

அன்றைக்கு எனக்கு வரம் கொடுத்தீர்கள் அல்லவா… அந்த வரத்தை இப்பொழுது கேட்கின்றேன். என்று கைகேயி தசரதனிடம் கேட்கின்றது அந்த வரத்தை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் உலகம் உங்களைத்தான் தூற்றும். சத்தியத்துக்கு விரோதமானவர் என்று உங்களைத் தான் சொல்லும் என்று சத்தியம் பேசுகிறது.

தசரதன் பல வகைகளிலும் யோசிக்கின்றான் என்ன செய்வது என்று…!

வரத்தைக் கொடுத்த பின் இப்படிக் கேட்கின்றாளே…! இராமனுக்குப் பட்டம் சூட்ட முடியாது போகின்றதே…! என்ற வேதனை அதிகரிக்கிறது.
1.ஆனால் அன்று வெற்றி பெற உதவியாக இருந்தது.. அப்போது மிகவும் சந்தோஷப்பட்டான்.
2.தன் உடலிலே இருந்து அது என்ன செய்கின்றது…?
3.தன் மகனுக்கே (பரதனுக்கு) பட்டம் சூட்ட வேண்டும் என்று அதன்படி அங்கே வேதனையைத் தான் உருவாக்குகின்றது.

தசரதன் பல வகைகளிலும் சிந்திக்கின்றான். அவனால் ஒன்றும் பேச முடியவில்லை… மௌனியாகின்றான்.

இதைப் போன்று தான் உங்கள் உடலில் வெறுப்பும் வேதனையும் அதிகமாகி விட்டால்
1.உங்களால் ஏதாவது பேச முடிகின்றதா…? நல்லதை ஏதாவது செயல்படுத்த முடிகின்றதா…?
2.வேதனை உணர்வுகள் எடுக்கப்படும் பொழுது நல்லதைச் செயல்படுத்த முடிகின்றதா..?
3.வேதனை என்ற உணர்வு வந்து விட்டாலே நல்ல பட்டாடைகளை… புதுத் துணிகளைக் கொடுத்து அணியச் சொன்னால் முடியுமா…?
4.அதை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா…? இல்லை.

உடலுக்குள் வேதனை அதிகமான பின் நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை. பல உணர்வுகள் நமக்குள் வந்து புலஸ்தியர்… புலனறிவைக் கொண்டு வரப்படும் பொழுது சந்தோசம் என்ற நிலையை உருவாக்க முடியவில்லை.

தன்னால் செயல்படுத்த முடியவில்லையே…! என்ற அந்த வேதனை உணர்வு தான் முன்னணியில் வருகின்றது.
1.அங்கே வேதனைப்படுத்தினான் முதலிலே
2.அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்தான்… ஏனென்றால் அதை இச்சைப் பட்டான்
3.மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்று பல கொலைகளைச் செய்தான்… அதை ரசித்தான்
4.அந்த உணர்வின் தன்மை பிரம்மகுருவாக ஆகி அதன் உணர்வே இங்கே செயல்படுத்துகின்றது.
5.தன் உடலுக்குள் இருந்து நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை…!

அவன் எண்ணியதை அங்கே செயல்படுத்த முடிகின்றதா…? அதற்கு மாறாகக் கைகேயி என்ன செய்கின்றாள்…?

இராமனைக் கூப்பிட்டு… “உன் தந்தை சொல்கின்றார்… நீ காட்டிற்குச் செல்… துறவறம் பூண்டு செல்…” என்று சொல்கிறது.

அதன்படி “தந்தை சொல்லிவிட்டார்” என்று தாய் என்ற நிலையில் தட்டாது அவன் சென்று விடுகின்றான்.

அவன் காட்டிற்குச் சென்ற பின் கைகேயி தன் மகன் பரதனைக் கூப்பிட்டு அனுப்புகின்றாள். அவனை வரும்படி செய்தபின் அங்கிருந்து வருகின்றான்.

நகருக்குள் வந்தபின் நாடே சூனியமாக இருக்கின்றது. ஒருவரும் பேசவில்லை… ஊமையாக மௌனமாக இருக்கின்றார்கள் சோர்வாக இருக்கின்றார்கள்…? ஏன்…? என்று வினாக்களை எழுப்புகின்றான்.

ஒருவரும் வாய் திறக்கவில்லை ஏனென்றால் நடந்த நிகழ்ச்சிகளைச் சொன்னால்… யார் செய்தது…? என்று சொல்லும் போது அதனால் பெரும் வெறுப்பாக வளர்ந்து விடும்…! என்று குற்றத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை.

எல்லோரும் அதனால் மௌனமாக இருக்கின்றார்கள்.

இராமனின் தாயாரிடம் கேட்டால் அதுவும் மௌனமாக இருக்கின்றது. மற்ற உறவினர்களைக் கேட்டாலும் அவர்களும் மௌனமாக இருந்து விட்டார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. மக்களிடத்திலோ சேனாதிபதிகளிடமோ யாரிடம் கேட்டாலும் எல்லாருமே மௌனமாக இருக்கின்றார்கள்.

கடைசியில் தன் தாயிடமே கேட்கலாம் என்று வருகின்றான்.

அப்பொழுதுதான் தாய் சொல்கின்றது. அன்று போர் செய்யப்படும் பொழுது எனக்கு வாக்குகளைக் கொடுத்தார். அந்த வாக்கின்படி தான் கேட்டேன் அவர் கொடுத்தார் கொடுத்த பின் வேதனையால் அவர் மடிந்து விட்டார்.

நான் தவறு செய்யவில்லை..!

இராமனுக்குப் பட்டாபிஷேகம் சூட்ட முடியவில்லை என்று ஏக்கத்திலே இறந்து விட்டார். உனக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்ற நிலை வந்து விட்டது ஆகவே நீ இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்…! என்று தாய் சொல்கின்றது.

அப்போதுதான் பரதன் சொல்லுகின்றான் உன் தாயார் வீட்டிலும் இது தான் நடந்தது…!

யாரிடத்தில் அந்த வேதனை (முதலில்) உருவாகின்றதோ அது தாயாகின்றது. அதன் உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? என்று உணர்வின் எண்ணங்கள் எதன் வலுவோ அதன் வழி எப்படி இயக்குகின்றது…? என்பதை இராமாயணத்தில் தெளிவாக காட்டுகின்றது.

1.உன் தாயார் வீட்டில் இதே தான் நடந்தது.
2.அதனின் மகளாக இருந்து நீ இங்கே வந்ததனால் எங்கள் சாம்ராஜ்யத்தையும் நீ சூனியம் ஆகிவிட்டாய்
3.அன்றே உன்னைக் கொன்றிருந்தால் இந்த நிகழ்ச்சிகள் இங்கே நடந்திருக்காது.

அதாவது எந்தத் தீமை என்ற நிலையை இச்சைப்படுகின்றோமோ அன்றே நாம் அதை அழித்திருத்தல் வேண்டும் என்று இங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய தகுதி பெற்ற நாம்
1.அந்த உண்மையின் உணர்வை எடுக்காதபடி உடலுக்குள் தீமை புகுந்து விட்டால்
2.அது விஷம் என்ற நிலையில் அதனுடைய கடுமைகள் எப்படிச் செயல்படுகின்றது…? என்ற
3.உணர்வின் இயக்கத்தின் வலிமையை இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது