ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 9, 2023

எத்தகைய குறைபாடுகளையும் நீக்கும் பயிற்சி தியானம்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானம் இருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்களது இரத்த நாளங்களில் கலந்து அவர்களது உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று அவர்களது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த சாப வினைகளால் விளைந்த தீய வினைகளால் விளைந்த பாவ வினைகளால் விளைந்த பூர்வ ஜென்ம வினைகளால் விளைந்த கேன்சர் டிபி இரத்தக் கொதிப்பு சர்க்கரைச் சேர்த்து ஆஸ்த்மா இருதய நோய் மூலநோய் சரவாங்கி நோய் வாத நோய் போன்ற சர்வ நோய்களையும் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

தியானத்தில் இருப்பவர்கள் எல்லோரது உடல்களிலும் சர்வ தோஷங்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அவரவர்கள் உடலில்… இடுப்பு வலியோ கை கால் வலியோ தலை வலியோ வயிற்று வலியோ கிட்னி கோளாறோ இருதயத்தில் கோளாறோ மூல நோயோ இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள அந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இப்பொழுது ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உடலில் சர்வ நோய்களையும் நீக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது. எல்லோரும் இந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

நோய் நீக்கும் அரும்பெரும் சக்தி இப்போது நீங்கள் பெறுகின்றீர்கள்
1.உங்கள் உடலில் கரண்ட் பாய்வது போல் இருக்கும்
2.சர்க்கரைச் சத்தோ வாத நோயோ ஆஸ்த்மாவோ மூலநோயோ இருதய நோயோ இருந்தால்
3.அங்கெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தி மின்சாரம் போல் பாய்ந்து அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.
4.உங்கள் உடலில் எந்த வலியாக இருந்தாலும் குறையும்… வேதனைகள் அகலும்.

கேன்சர் டிபி போன்ற கடுமையான நோய்களும் குறைய தொடங்கும் அது உங்கள் உடலில் இருந்து கலைந்து கீழே இறங்குவதை நீங்கள் உணரலாம்.

எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் அதிலே மகரிஷிகளின் உணர்வுகள் படர்ந்து உடல் நலம் பெறும் உணர்ச்சிகள் இப்பொழுது தோன்றும்.

நீங்கள் சுவாசிக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கப்பட்டு உடலில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகள் கலைந்து சென்று அது விலகும்.

1.உடலில் நோய்கள் குறைந்து அருள் உணர்வுகள் பெருகும் சக்தி பெறுகின்றது
2.அகஸ்தியன் அறிந்த… தீமைகளை அகற்றிடும் அருள் உணர்வு உங்கள் உடல்களில் இப்போது படரும்.

சர்வ பிணிகளும் நீங்கும்… இருதயம் சீராக இயங்கும்… எந்த நோயாக இருப்பினும் அது மாறும். உடலில் இருக்கக்கூடிய சிக்கல்கள் மாறும். உடலில் நல்ல ஜீரண சக்தியும் கிடைக்கும்.

புத்திர பாக்கியம் பெற தியானிக்க வேண்டிய முறை:-
புத்திர பாக்கியம் வேண்டுவோர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.தன் உடலிலே புத்திர பாக்கியம் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
2.கணவருக்கு அது கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
3.மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் ஏங்கித் தியானியுங்கள்.

உங்களுக்குள் புத்திர பாக்கியம் பெறும் அருள் உணர்ச்சிகள் உங்கள் உடலில் உருவாவதைக் காணலாம்.

உங்கள் இரத்த நாளங்களில் புதுவிதமான உணர்ச்சிகள் தோன்றி
1.கருப்பைகளிலே கரு உருவாகும் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதும்
2.விந்துகளிலும் அந்த அருள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
3.குழந்தைகள் உருவாகும் உணர்வின் அணுக்கள் உருப்பெறுவதை உங்கள் உடல்களில் உணரலாம்.