ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2023

உங்களால் நான் நன்மை அடைகின்றேன்… என்னால் நீங்கள் நன்மை பெறுகிறீர்கள்…!

அருள் மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் பதிவாக வேண்டும் என்று தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன். அந்தப் பதிவின் துணை கொண்டு உங்களை நான் (ஞானகுரு) பிரார்த்திக்கும் பொழுது உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்தவும் உங்கள் உயிரான ஈசனுக்கு அமுதைக் கொடுப்பதும் அது அபிஷேகிக்கும் நிலையாகவும் அடைகின்றது.

அதை நீங்கள் சுவாசிக்கப்படும் பொழுது உங்கள் உடலுக்குள் சென்று நல்ல உணர்வுகளைச் சேர்ப்பிக்கும் சந்தர்ப்பமாக இப்போது உருவாகின்றது.
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலைக் கோவிலாக மதித்து நான் தியானிக்கின்றேன்.
2.உங்களை எண்ணி நல்லதாக வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது எனக்குள்ளும் அது உமிழ் நீராகி அருள் சக்தியாக மாறுகின்றது
3.அருமருந்தாக மாறுகின்றது. அருள் வழி வாழவும் முடிகின்றது.
4.உங்களால் நானும் நன்மை அடைகின்றேன்… என்னால் உங்களுக்கும் நன்மை ஏற்படுகிறது.

ஆகவே நாம் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுவோம்.

இந்தப் பிரபஞ்சத்தில் எது இருந்தாலும்… இந்த உலகம் முழுமைக்குமே தீவிரவாதம் என்ற நிலைகளில் மனிதனுக்கு மனிதனே கொன்று புசிக்கும் நிலையாக வந்துவிட்டது.

1.கருவில் இருக்கும் பிண்டங்களை அழித்து
2.அதையே உணவாக உட்கொள்ளும் நாகரீகம் உலகமெங்கும் பரவி விட்டது.

தாய்லாந்து அமெரிக்கா சைனா ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் கருச்சிதைவாக்கப்பட்டு கருசிதைவான அந்தக் குழந்தைகளை உணவாக எடுக்கப்படும் பொழுது “முதுமையானவன் இளமையாக முடியும்…” என்று விஞ்ஞான அறிவில் கூறப்பட்டு… தவறான வழிகளில் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்படி நடந்து கொள்வோர் நாளை எங்கே செல்வார்கள்…?

நரமாமிசத்தை உட்கொள்ளும் அகோரிகள் இங்கே இந்தியாவில் இருக்கின்றார்கள் சுடுகாட்டில் வெந்து கொண்டிருக்கும் உடல்களை “அதைத் தள்ளி விட்டு எனக்குக் கொடு… என்பார்கள்.

அவருடைய தசைகளைத் தின்று சொர்க்கத்துக்கு அவனை அனுப்புகிறேன் என்று சொல்லும் அகோரி என்ற சாமியார்களும் உண்டு.

இதைப் போன்ற அசுர உணர்வுகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த உலகைக் காக்க நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து
2.உடலுக்குள் அருள் ஞான சக்திகளைப் பெருக்கி
3.உங்கள் மூச்சும் பேச்சும் உலக இருளை நீக்கிடும் சக்தியாக நீங்கள் அனைவரும் பெற வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் துருவனான்… துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அந்த அருள் சக்தியை நாம் பெற்று எந்நாட்டரையும் பெறச் செய்தால் அவர்கள் அறியாத நிலையில் இருந்து அவர்களும் மாறுபட்டு மனிதன் மனிதன் என்ற நிலைகள் உணர்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்… எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன்.