ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2023

குரு காட்டிய நெறிப்படி தியானிக்க வேண்டும்

யாம் ஞானகுரு) சொன்ன முறைப்படி யார் இந்தத் தியான வழியினைச் சீராகக் கடைப்பிடித்து வழி நடக்கின்றார்களோ “அவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்…”

ஆனால் தீமை என்ற அடிப்ப்படையில் ஆசை நிலையில் அதைக் கொண்டு வந்தால் பாலிலே பாதாமைப் போட்டு பல சத்துக்களைப் போட்டு விஷத்தைப் போட்ட மாதிரி ஆகிவிடும்.

அதாவது செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆசையுடன் தியானத்திற்கு வந்தார்கள் என்றால்… நிச்சயம் அவர்களுக்குக் கெடுதலாகும் அவர்கள் வார்த்தையைக் கேட்டு வழி நடப்பவர்களுக்கும் கெடுதலாகும்.

ஏனென்றால் அவர்கள் ஆசையைக் கூட்டப்படும் பொழுது அதை ஆசை அடுத்தவர்களுக்கும் வந்து சேர்ந்து விடுகின்றது கடந்த காலங்களில் இப்படித்தான் யாம் கொடுத்த பல உயர்ந்த சக்திகளை எல்லாம் கெடுத்து விட்டார்கள்.

அதையெல்லாம் எவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்தேன்… ஆனால்
1.நல்லதை எண்ணி ஏங்கி வருபவர்களுக்கு அது எப்படியும் தனித் தனித் தன்மைகளில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று
2.இப்பொழுது விளக்கமாகச் சொல்லி வருகின்றேன்… அருள் உணர்வுகளைக் கிடைக்கும்படி செய்து கொண்டிருக்கின்றேன்..

என்னை நீங்கள் தேடுவதற்குப் பதில் எங்கிருந்தாலும் அங்கே அமர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் பெற வேண்டும்.
1.எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும்
2.சர்வ தோஷங்களையும் நீக்கக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.மறுபடி மறுபடி இந்த உணர்வைக் கூட்டிக் கொண்டே வாருங்கள்.

உட்கார்ந்து தியானியுங்கள்.. இதையே எண்ணி ஒரு பழக்கமாகக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களைப் போக்க முடியும்.

நீங்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
2.உங்களை எண்ணி சதா நான் தவம் இருக்கின்றேன்.

நண்பன் என்று அவன் அமெரிக்காவில் இருந்தாலும் எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்றால் எப்படிப் புரையோடி அவனை இயக்குகின்றதோ… அதே சமயத்தில்… நன்மை செய்தான் என்று எண்ணினால் எப்படி விக்கலாகிறதோ அதைப் போன்று உங்களை எண்ணி நான் தவம் இருக்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

ஏக்கமாக இருக்கும் பொழுது உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது… ஆகவே ஏங்கித் தியானிக்க வேண்டும்.

ஆனால் “ஆசையை வேறு பக்கம் வைத்து” அவன் இப்படிச் செய்கின்றான்… இவன் ஏன்னைக் கேவலமாகப் பேசுகின்றான்… இவன் என்னைத் தவறாகச் சொல்கின்றான்… என்ற இந்த உணர்வு வரும் போது கலக்கமாகிறது.
1.என்னா சாமி…? எல்லாம் செய்தேன் ஒன்றும் நடக்கவில்லையே…! என்பார்கள்.
2.ஏனென்றால் இந்த ஆசையோடு கலக்கப்படும் பொழுது இந்தக் கலக்கம் தான் வரும்.

ஆகவே… தியானத்தைச் சீராகக் கடைபிடித்து வாருங்கள்… பேரருளைப் பெறக்கூடிய தகுதி பெறுவீர்கள்.

நீங்கள் எல்லோருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி இந்தக் காற்று மண்டலத்திலே சூழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நச்சுத்தன்மைகளை விரட்டக் கூடியவர்களாக நீங்கள் வளர்ச்சி பெற வேண்டும்.

எல்லாருக்கும் அதைக் கிடைக்கக் கூடிய சக்தியாக நீங்கள் பெற்று… விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து மீட்க வேண்டும்.