ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2023

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் அணுக்களுக்குள் இணைக்கும் முறை

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

ஏனென்றால் புருவ மத்தியில் இப்படி எண்ணி விட்டால்… இதற்கு முன்னாடி நம்மை அறியாது சேர்ந்த தீய வினைகளுக்கு ஆகாரம் போகாதபடி தடுக்கின்றோம்.

அருள் ஞானத்தின் உணர்வுகளை உயிர் வழி நமக்குள் பரப்புகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரிலே மோதும் போது ஒளிக்கற்றைகள் தோன்றும்.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப் போன்று
3.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரப்படும் பொழுது… அது நமக்குள்
4.அறியாமை என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையை உருவாக்கும்.

உங்கள் நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி… உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

எப்படி ஊசி மூலம் மருந்தை எடுத்து உடலுக்குள் செலுத்திய உடனே இரத்தங்கள் முழுவதும் அந்த மருந்து பரவுகின்றதோ அதேபோன்று
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று
2.உங்கள் கண்ணின் நினைவு கொண்டு உள்ளே செலுத்துங்கள்.

எங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறும்படியாகக் கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.

உறுப்புகளை எவ்வளவு தூரம் என்ன முடியுமோ உறுப்புகளில் அந்த சக்தி படர வேண்டும் என்று ஏங்கி நினைவைச் செலுத்துங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளில் இப்பொழுது புது விதமான உணர்ச்சிகள் தோன்றும்… அதை உணரலாம்.
1.தீமையான அணுக்கள் இருந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தி அதிலே படும் பொழுது அது பலவீனமடையும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

உடல் உறுப்புகளில் எத்தகைய தீய அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது அது வலு இழக்கின்றது.

கண்ணின் நினைவை அவ்வாறு செலுத்தப்படும் பொழுது…
1.அந்த ஜீவ அணுவின் காந்தமும் உங்களுடைய உணர்வின் நினைவும் செலுத்தப்படும் பொழுது
2.எளிதில் உங்கள் உடல் உறுப்புகளுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்ய முடியும்.

ஒரு நல்ல மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் உருவாகும்.