ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 22, 2023

“மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்… தேவனின் இராஜ்ஜியம் சமீபத்தில்…!”

1.சரீரமில்லா செயல் நிலை உடைய உயிரணுக்கள் (ஆவி ஆத்மாக்கள்) சரீர கதிச் சுழல் காந்த அமில ஈர்ப்பின் குணத்தின் வசம் அகப்பட்டு
2.தனது சுவாச அமில நிலைக்கொப்ப சரீர செயல் சமைப்பு முறை அமில குண சுவாச நிலையில் குணத்துடன் ஒன்றி
3.தனது சரீரமற்ற ஆவித்தன்மையின் வீரிய குண எண்ணத்தை செயல் நடத்திட
4.சரீரமுடைய காந்த அமில குண சுழற்சியில் அகப்பட்டுச் சுவாச கதி அலையில் உட்சென்று தான் செயல் கொண்டிட
5.தனக்கு என்று ஓர் வாய்ப்பு நிலை ஏற்படுத்தும் “நரம்பு மண்டல செயல் நிலைகளில் நகர்ந்து ஓடி…” அதே கதியில் செல்லும் அவைகள்
6.தங்கள் எண்ணத்திற்கொப்ப ஆங்குள்ள உயிரணுக்கள் செயலை விட மிக வீரியமான தம் குண எண்ண நிலை கொண்டு வெற்றி உலா வந்து
7.தன் எண்ணம் கொண்டு சரீர கதியையே மாற்றி அமைத்துத் தமது எண்ணத்தின் வலுவை வலுவாக்கி
8.அதன் செயல் கொண்டு செயலுறும் இயந்திரகதி சரீரமாக்கி
9.தனது இச்சைகளை பூர்த்தி செய்து கொள்கின்ற பாங்கில் துர் ஆவிகள் புகுந்த உடலில் செயல்படும்.

ஆவிகளின் துர்க்கதி வினைச் செயலை நீக்கிட… மார்க்கம் காட்டிய அன்பு நிலை வெளிக்காட்டும் மாமகரிஷியின் தொடர்பு பெற்ற “தேவகுமாரன் இயேசுபிரான் அவர்கள்” துர் ஆவிகளை விரட்டிச் சொஸ்தப்படுத்தியது அறிய வேண்டிய சூட்சுமம்.

“பன்றிகள்” என்று துர்க்குணங்களைச் சுட்டி காட்டிய இயேசுபிரான் அந்தப் பன்றிகள் வாசம் செய்யும் இடம் சைத்தான் என்று மனித சரீரத்தைக் காட்டினார். ஏன்…?

துர்குண எண்ணமாகிய பன்றியின் குணங்கள் கொள்ளும் பொழுது… பன்றி கழிவை உண்டு அந்தக் கழிவின் தீய செயல் குண அமிலங்களைத் தனது சரீரத்திற்கு ஏற்றுக் கொண்டு அப்பன்றியியின் கழிவில் நல்ல நிலைகளை வெளித்தள்ளும் செயல் சரீர செயலிலும் நடைபெறுதல் போலவே (பன்றியின் மலம் துர்வாசனை வீசுவதில்லை)…
1.அதே பன்றி குணம் கொள்ளும் மனிதன் தன் ஈர்ப்பின் செயலுக்குத் துர் ஆவிகள் அவன் உடலில் ஏறி (சைத்தான்)
2.சரீரம் கிடைத்தவுடன் மனித சரீரத்திற்குள் அவை நுழைந்து
3.மனிதர்களை ஆட்டுவிக்கும் செயலாக… தன் இச்சைகளை அங்கே பூர்த்தி செய்து கொள்ளும் செயலுக்கு
4.எந்தச் சரீரத்தில் ஏறியதோ அங்கே பயமுறுத்தும் காரியார்த்தவாத செயல் நிலைப்படுத்தி
5.தங்கள் இஷ்டம்போல் அச்சரீர உயிர் ஆத்மாவையும் அடிமை கொண்டிட அதி ஆவேச செயல் நிலைப்படுத்தும் என்பதை
6.அந்த ஆவிகள் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் செயல் திறத்தால் அறியலாம்.

ஆனால் அந்தத் துர் ஆவிகளை இயேசு பிரான் கடலில் சென்று விழச் செய்து மாள வைத்தார் என்பதன் பொருள் என்ன…?

அத்துர் ஆவி ஆன்மாக்கள் மனிதச் சரீர செயலில் தன் தனது நடைமுறைகளுக்கொப்ப செயல் கொண்டிடும் விதம்… நாத குணங்கள் போக்கி… தான் செய்யுறும் குணநலன்படுத்தி ஆட்டுவிக்கும் செயலில்…
1.உயரிய சக்தி பெற்ற ஆத்ம ஞானிகள் அவைகளை நீக்கச் செய்திட்ட சூட்சுமப் பொருள் என்ன…?
2.அவைகளை விரட்டிட்ட செயல் சூட்சுமத்தை நாம் அறிந்திட வேண்டும்

“துர் ஆவிகள் பன்றிக்குள் நுழைந்து…
கூட்டம் கூட்டமாகக் கடலுக்குள் விழுந்து செத்தொழிந்தன…
நீங்கள் சுகம் அடைந்தீர்கள்
இனி மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்
தேவனின் ராஜ்ஜியம் சமீபத்தில்…!” என்று
ஏசுபிரான் போதனைப்படுத்தி வழிகாட்டிய அந்தச் செயல் முறையால் ஆவி ஆத்மா வசம் அகப்பட்டவன் எப்படிச் சுகம் அடைந்தான்…?

பன்றிக்குள் நுழைந்தன ஆவிகள் என்பது… எப்படி அவைகள் பன்றியின் செயல் நிலையில் ஒன்றி ஒடுங்கின…? என்பதை அத்துர் குணங்களின் வசம் உள்ள ஆவி ஆன்மாக்கள் அக்குணங்களையே ஆட்கொள்தல் என்பதே… “பன்றியின் உள் நுழைதல் என்று சூட்சுமம் காட்டி…” அவைகளைக் கடலுக்குள் தள்ளியதாகக் கூறும் விதம்… அத்துர் குணங்களாகிய பன்றிகள் மாய்க்கப்பட்டுக் கடலுக்குள் தானே விழுந்து விட்டன…! என்ற தத்துவ ஞான போதனையை யார் ஏற்றுக் கொண்டார்கள்…?

தங்கள் மனம் போல் வியாக்கியானப்படுத்தும் இந்த உலகம் அந்த உண்மையை அறிந்து கொண்டதா…? அதன் செயல் நிகழ்வு எப்படி நடைபெறுகின்றது…?

இச்சரீர கதியில் என்பது துர்குணம் வாழும் ஆவி ஆத்மாக்களை ஞானக்கடலிலே விழச் செய்தான் தேவகுமாரன்.. ஞானக்கடல் எங்கிருந்து வந்தது…?
1.தன் சக்தியின் சக்தியை அவர்களுக்கு (ஆவிகளுக்கு) ஊட்டுவித்து
2.தன்னையே அவர்களிடம் ஒப்புவித்து… தானே அவர்களானான் என்பதே
3.அன்பால் வசப்படுத்தும் மனதினன் அவ் அன்பு நிலை எம் மக்கள் செயலில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ
4.அதே நடைமுறைச் செயலில் நல்வினை ஆக்கும் செயலுக்குப் போதனைப்படுத்திய ஞானவான்
5.தன் மன நிலையுடன் அவர்களின் மன நிலையை ஒன்றச் செய்து
6.தன் வசமாக்கி… தெளிவுபடுத்தி… மனங்களின் அன்பை அருந்த “ஞான நிலை போதனை கொடுத்து…”
7.குரு காட்டிய வழி (உயிரான்மா அறிந்த சொல்) என்ற மந்திரச் சொல்லைப் பயன்படுத்தும் பொழுது
8.அவனுள் ஏற்படும் மாற்ற நிலையானது மனம் அன்பின் வசப்படும் தன்மையும்
9.அதனுள் சுரக்கும் ஞானக்கடல் நிலை என்பது ஞானத்தின் பரிமாணத்தைக் கூறும் சூட்சும செயல்படுத்தி
10.அந்தச் செயல் முறையின் நடைமுறையைக் காட்டினான் தேவகுமாரன் அன்று.

ஆகவே… ஞானத்தின் வசம் ஒப்புவிக்கப்படும் மனமானது… “அன்பின் வசம் உற்று…” நல்வினைப் பயன் ஏற்பட நற்குண வழிகாணும் செயல் நிலை வந்தது. (அன்பால் தான் ஆன்மாக்களை நல்வழிப்படுத்த முடியும்… நம் வசத்திற்குக் கொண்டு வர முடியும்)

எந்தெந்த நற்குண செயல் போதனைப்படுத்தப்படுகின்றதோ… அவைகளைத் தனக்குகந்த போதனையாக ஏற்று… அந்தப் போதனைகள் வழி மனம் செலுத்தப்பட முயற்சி என்ற நம்பிக்கை வேண்டும்.

அந்த முயற்சி தானே உருவாகும் செயலுக்கு முன்பு யார் போதனைப்படுத்துகின்றார்களோ “அவர்களின் காந்த வீரிய எண்ணச் சுழற்சி செயலில்…” மனம் நாட்டம் கொண்டிடல் வேண்டும்.

எண்ண வலுவின் செயல் கொண்டிடும் நிலையானது எந்த நிலையானாலும் அது பக்தியோ ஞானமோ அல்லது வேறு உபாய காரியச் செயல் முறையோ “அந்தத் துர் ஆவிகள் விலகும்…” என்பது அவைகள் குணங்களுடன் (துர்க்குணங்கள்) ஒன்றி வாழும் பொழுது… அக்குணங்களையே களைவிக்கும் மந்திர ஜெபம் என்ற சூட்சமப் பொருளானது… நாம் எடுக்கும் தியானத்தின் வழியில் தான்.

தியானத்தின் மூலம்… நற்குண வீரிய சொல் ஏற்கும் மன ஜெப நிலை வசம் உயரும் முறையாக அது மாறி தன் நற்குணத்தில் சுகம் பெறும் என்பது
1.அந்த ஆவி ஆத்மாக்களின் வீரிய குணம் நற்குண அதி வீரிய ஜெப குணம் ஞானத்தால் அடக்கப்பட்டு
2.அந்தத் துர்குணங்கள் மாய்க்கப்படுவதையே ஞானமாம் கடலில் பன்றிகள் விழும் பொழுது
3.அதனுள் வாசம் செய்த துர் ஆவிகளும் செத்தொழிந்தன (அதன் வீரியத்தை அடக்குதல்) என்கின்ற சூட்சுமம்.

மனநிலையை ஞானத்தால் உயர்த்திக் கொண்டால்… நற்குணத்தின் வீரியத்தால் சுகம் பெறலாம்…! என்பது தேவகுமாரன் காட்டிய அன்பின் தத்துவம்