ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2023

நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று “நீங்கள் எண்ணினால் அது தப்பு…”

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் மன வலிமையை நாம் எப்படிக் கொண்டு வருதல் வேண்டும்…?
1.அருளைப் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற மன வலிமை பெற்றால்
2.சிந்தித்துச் செயல்படும் வலிமையாக இயக்கச் செய்யும்.
3.நம்மைக் காக்கும் உணர்வுகளும் வளரும்.

திரும்பத் திரும்ப இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை நினைவு கொண்டால் சிந்தித்துச் செயல்படும் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்.

உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர “நான் காப்பாற்றுவேன்…” என்று எண்ணத்தை நீங்கள் எண்ணினால்
1.தனக்குள் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும் தகுதியை
2.நீங்கள் இழந்து விடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடும் விளைவுகள் வருகின்றது. இந்த விளைவில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

உங்களுக்குள் உபதேசித்த உணர்வின்படி அருளை நீங்கள் பெருக்கிக் கொண்டால் தீமை நீக்கும் சக்தி பெறுகின்றீர்கள் அதைப் பெருக்கக் கூடிய ஞானம் உங்களுக்கு வர வேண்டும்.

அந்த ஞானம் உங்களுக்குள் வரவேண்டும் என்றால் இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களுக்குள் அந்த அருள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை அதன் வழியில் சுவாசிக்கச் செய்கின்றோம்.
1.சுவாசிக்கும் பொழுது உங்கள் இரத்தங்களில் புது விதமான உணர்ச்சிகளின் ஓட்டங்கள் இருக்கும்
2.அந்த உணர்வுகள் பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அத்தகைய கருத் தன்மை உங்கள் இரத்தத்தில் உருப்பெறுகின்றது

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் அந்த அருள் ஞானத்தை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.

அத்தகைய அணுக்கள் உடலில் உருவாகிவிட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரும் போது உயிரில் படுகின்றது சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது நல்ல உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றது. நல்ல அணுக்கள் உங்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது அருளைப் பெருக்குகின்றது அருள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது.

1.இந்த உடலுக்குப் பின் அந்த ஞானியின் அருள் வட்டத்திலே செல்கின்றோம்
2.”எந்த ஞானி இருளை நீக்கினானோ” அவன் ஈர்ப்பு வட்டத்திற்கு… துருவ நட்சத்திரத்துடன் நாம் செல்ல முடிகின்றது.

இது தான் நமது கடைசி எல்லை உயிர் ஒளியானது… அந்த உயிரோடு ஒன்றி ஒளியின் தன்மை நாம் பெற வேண்டும்

ஆனால் நான் (ஞானகுரு) சாமியாராக இருக்கின்றேன்… உங்களைக் காப்பாற்றுவேன் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தப்பு. சாமி சொன்ன உணர்வின் தன்மையைப் பெற்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மைக் காக்கும் என்று எண்ணினால் அது தான் சரி.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களில் எல்லா வகையான தீமைகளிலிருந்தும் தப்பிக்கும் உணர்வு பெற்று இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

உயிர் மனித உடலை உருவககிய பின் பல கோடித் தீமைகளையும் வென்று உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
1.குருநாதர் காட்டி அருள் வழியில் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்ததை உங்களுக்குள் பதிவாக்கி நினைவாக்கும்படி செய்கின்றேன்
2.உங்களை காக்க அந்த அருள் ஞானம் கிடைக்கும்.
3.இருளை நீக்கிடும் ஞானிகளாக நீங்கள் உருவாக முடியும்