ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2023

குருநாதர் எனக்குக் கொடுத்ததை… நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா…!

ஒருவருக்கொருவர் பற்று கொண்டவர்கள் நாம் என்ன செய்கின்றோம்…?

ஆசை வைக்கின்றோம்… ஆனால் சமயத்தில் “என்னை அவமதித்து விட்டான்…” என்று ஆத்திரப்படுகின்றோம்
1.ஆத்திர ஆவேச உணர்வு கொண்டு அவன் செய்யும் தவறான உணர்வை நமக்குள் சேர்த்து விடுகின்றோம்.
2.நம்முடைய வளர்ச்சியை நாமே தடைப்படுத்தி விடுகின்றோம்

இப்படித்தான் இயற்கை நிலையிலிருந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளை எப்பொழுது மாற்றுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக… ஒவ்வொன்றிலிருந்தும் தான் தப்பிக் கொள்ளும் உணர்வுகள் பெற்று வளர்ச்சியாகி வந்ததுதான் இந்த மனிதச் சரீரம்.

பலவற்றில் இருந்து தப்பிக்கும் ஞானத்தின் தன்மை வளர்த்துக் கொண்ட இந்த மனித உடலில் இவ்வளவும் தெரிந்து கொண்ட பின் உடலைக் காக்க நாம் எதைச் செய்ய வேண்டும்…?

உடலைக் காக்கும் ஆசை தேவை ஆனால்
1.உடலைக் காப்பதற்கு முன் அதீத ஆசை கொண்டு செயல்பட்டால்
2.உடலைக் காக்கும் தன்மையை இழக்கப்பட்டு வேதனை என்று உணர்வைத்தான் வளர்க்க முடிகின்றது.

இதையெல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அனுபவரீதியிலே தான் இதையெல்லாம் தெரியும்படி செய்தார்.

சில இடங்களுக்கு அழைத்துச் செல்வார்…
1.இது நல்லதா கெட்டதா என்று கேட்பார்
2.நல்லது என்று சொன்னால் அது எப்படிடா… சொல்…? என்பார்
3.இல்லை இது கெட்டது… இப்படித்தான்…! என்று சொன்னால் அது எப்படிக் கெட்டது…? என்று அதற்கும் கேள்வி கேட்பார்.

ஏனென்றால் நீ நுகர்ந்த உணர்வுகள் உனக்குள் எப்படியெல்லாம் இயக்குகின்றது…? “என்னுடைய அதிர்வான சொல்கள்” வரும் பொழுது பதட்ட நிலைகள் உனக்குள் ஆகி உன்னைச் சிந்திக்கச் செய்கிறதா…?

இல்லை.

ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி தப்பிக்கலாம்…! என்ற எண்ணம் தான் உனக்கு வருகின்றது. இப்படியெல்லாம் விளக்க உண்மைகளைக் கொடுத்து அறிவின் இயக்கமாக இயக்கச் செய்து என்னை (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெளிவாக்கினார் குருநாதர்.

அதை நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமா இல்லையா…!

முதலிலே நான் சொல்லிக் கொண்டு வந்தேன்
1.பல வருட காலமாக ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்
2.இப்பொழுது மனிதனுடைய இயக்கங்களை முழுமையாக தெரிந்து கொள்ளும்படி செய்கின்றோம்.

முதலிலே பதப்படுத்தி பக்குவப்படுத்தி… உங்களிடம் அதை வலுப்படுத்தி… அதற்குப் பின் விளக்க உரைகளைக் கொடுத்தால் நீங்கள் கேட்பீர்கள்.
1.உங்களுக்கு அந்த உயர்ந்த சிந்தனைகள் வரும்
2.உங்களைக் காத்திடும் உணர்வுகளும் வரும்

ஆனால் புதிதாக இதைக் கேட்பவர்களுக்கு “சாமி எதையோ சொல்கின்றார்…” என்ற தலையைச் சொறிவார்கள்.

முன்னாடி கேட்டுப் பழகியவர்களுக்கு ஞானத்தை வளர்க்கும். புதிதாக வந்தவர்கள்… சாமி என்னமோ சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே தெரியாது என்று சொல்வார்கள். சாமி சொல்கின்றார்… நான் கேட்டுக் கொண்டிருந்தேன்… எனக்கு அர்த்தமே ஆகவில்லை…! என்பார்கள்.

ஆனால் பழைய ஆள்கள் உபதேசக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் சேர்த்துச் சேர்த்துத் தெளிவான மனதாக
2.எப்படி மனதைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்று செயல்படுத்திக் கொள்வார்கள்.

சந்தர்ப்பங்களில் இருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அந்த உபாயங்களும் வரும்.

இப்போது ஒன்றைச் சொல்கின்றேன் என்றால் அடுத்து அதைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது உங்கள் சாமி நேற்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கின்றார். சாமி என்ன சொல்கின்றார்…? என்று கேட்பார்கள் ஒரு சிலர்.

ஆனால் பற்றுள்ளவர்கள் என்ன சொல்கின்றார் என்று கூர்ந்து கவனித்துக் கேட்பார்கள்.
1.இன்றைக்கு ஒன்று சொன்னாலும் அந்தச் சொன்ன உணர்வுகள்
2.எதிலே எது எப்படி இயக்குகின்றது என்று விளக்கவுரையைக் கொடுக்கப்படும் பொழுது
3.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதங்கள் எத்தனையோ வரும்.

செடி கொடிகளின் வித்துகள் சந்தர்ப்பத்தில் மோதும் போது ஒரு ஜாதி இனத்தைப் போன்று மற்றொன்று உருவாகி இருக்கும் ஆனால் அதனுடைய மணமும் குணங்களும் வேறாக இருக்கும்… செயலாக்கங்களும் வேறு.

புல்லைப் போன்றே மற்ற கோரைப் புல்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பார்த்தால் அதைப் போன்றே இருக்கும். ஆனால் சுவை இருக்காது.

இதைப் போன்று இயற்கையின் நியதிகள் எது எதனுடன் சேர்க்கின்றதோ அதற்கொப்ப இயக்குகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.