ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 9, 2023

ஈஸ்வரபட்ட(ருடன்)ரின் நேரடித் தொடர்பு

மான் இனம் தனது குட்டிக்கு ஊட்டுகின்ற பாலானது அது ஊட்டுகின்ற செயலை… மாற்று குணம் பொருந்திய எதிரி விலங்கினங்களைக் கண்டுவிட்டால்… ஈர்ப்பின் அலை செயல் புரிந்திடும் விதமாக…
1.அந்த அலையானது மானின் சுவாசத்திலே பட்டவுடன்
2.பால் ஊட்டுகின்ற சுரப்பை சட்டென நிறுத்தித்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றுவிடும்.

அதே போன்றது தான் நீங்கள் தியானத்தில் எடுக்கும் சக்தியும்… அதை உங்களுக்குக் கொடுக்கும் நிலையும்.

அதாவது… மகரிஷிகளின் பேரருள் பேரொளி சக்தி உங்களுக்குள் பாயப் பெற்றிடும் நிலையில்… அந்த மகான்களின் சப்த அலைகள் நுண் ஒலி காந்த அலைகளாகப் பரவ விட்டுச் சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் ஓட்ட கதியில்
1.ஈஸ்வரராய் அளிக்கப்படும் (உயிர் வழி சுவாசம்) சுரக்கும் அமுதமாகிய அருளாசி கொண்டு உரைக்கப் பெறும் அருள் உபதேசங்கள்
2.எண்ணத்தின் கூர்மை மாற்று அலையின் சிந்தனையில் சிறிது மோதியவுடன் (சந்தர்ப்பத்தில் தீமைகள் மோதும் போது)
3.காட்சியின் ஒளிப்பதிவு நிலைகள்… ஒலி அலைகளாக மாறு கொண்டிடும் நிகழ்விற்கே “சற்று தடங்கலும் காட்டி…”
4.இப்படியும் நிகழ்ந்தனவா…? என்ற அதிசயப் பொருளாக வினா தொடுத்தால் (ஞானத்தின் வழியில் அறியும் எண்ணம் கொண்டால்)
5.காட்சிப் புலனறிவு பதிவு பெற்ற ஒலி அலைகளை நேரிடையாக உணர்ந்து கொண்டிடும்
6.ஞான திருஷ்டி எனும் விழிப்பார்வை கொண்டு காலத்தின் நிகழ்வுவை எம்மால் உணர்த்தப்படும். (ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு).

எமது (ஈஸ்வரபட்டர்) சர்வ ஆக்ஞையில் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஞானச் செல்வங்களுக்காகக் (உங்களுக்காக) காரண காரிய செயல்முறைகள் இதிலே காட்டப்பட்டுள்ளது.