ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 26, 2023

யாம் உங்களுக்குக் கொடுப்பது “சிந்தித்துச் செயல்படும் ஞான சக்தி தான்”

குருநாதர் காடு மேடு மலைகள் எல்லாம் அலையச் செய்து சில உணர்வுகளைச் சந்தர்ப்பவசத்தால் நுகரும் பொழுது
1.உன் உடலுக்குள் மாறுபாடான உணர்வுகள் எப்படி எல்லாம் வருகின்றது…?
2.பயத்தின் எல்லை கடந்த நிலை செல்லும் பொழுது எப்படி இயக்குகின்றது…?
3.உன் உடலிலே பதட்டம் எப்படிக் கூடுகின்றது…?
4.உன் சிந்தனைகள் எப்படிச் சிதறுகின்றது
4.உன் உடலிலே எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றது…?
5.அதனால் உடலுக்குள் இரத்த அழுத்தங்கள் எப்படிக் கூடுகின்றது என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் பெற்ற அனுபவத்தைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு). விளையாட்டுக்காக நான் பேச வரவில்லை.

குரு வழியில் அந்த உயர்ந்த உணர்வுகளைக் கொஞ்சம் நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் உயர்ந்த சிந்தனைகள் உங்களுக்கு வரும். நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்ற நிலைகளை நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு ஒரு நல்ல வழியாக உருவாகும்.

ஏனென்றால்
1.அந்த ஞானத்தை யாம் புகட்டும் போது அதன் வழியில் வாழ்க்கையை நீங்கள் வழி அமைத்தால்
2.தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.
3.அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

எனக்கு குருநாதர் எப்படி இந்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்தாரோ அதே வழியில் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து நீங்கள் இதை பதிவு செய்ய வேண்டும்.

சாமி எதை எதையோ சொல்கின்றார்… என்னால் சகிக்க முடியவில்லை… அறுவைக் கேஸ் என்று கூட நினைப்பவர்கள் பலர் உண்டு.

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம்…! கண்கள் கொண்டு கூர்மையாக சாமி என்ன சொல்கின்றார் என்று உற்றுப் பார்த்தால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகளை யாம் அழைத்துச் செல்லும் பொழுது
2.இந்த கணக்கின் பிரகாரம் உங்கள் உடலில் அந்த உணர்வின் தன்மை வலிமையாகி
3.அதன்படி உங்களை வாழச் செய்து தீமையிலிருந்து விடுபடும் சக்தி உங்களுக்குள் பெருக்க முடியும்

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நமது பூமியின் துருவப் பகுதியின் எல்லையிலே இது அதிகமாகின்றது.
1.துருவத்தின் வழி பூமி அதை இழுக்கிறது… இழுத்து துருவத்தின் பகுதியில் அடர்த்தி அதிகமாகின்றது.
2.இந்த நேரம் பார்த்து அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வைச் சுவாசித்து
3.நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு கணங்களுக்கு அதை அதிபதியாக வேண்டும் – அந்த உயர்ந்த குணங்களை.

நந்தீஸ்வரன்… நாம் சுவாசித்த உணர்வு அதன் இயக்கமாகத் தீமைகளை நீக்கிடும் சக்தியாக நமக்குள் உருவாக்குகின்றது அடிக்கடி இதை எடுத்தால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை தீமையை நீக்கும் அந்தக் கணக்கின்படி “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிற்கு நாம் செல்கின்றோம்...”