
தியானத்தில் நம் நினைவுகள் திசை மாறினால் என்ன செய்ய வேண்டும்…?
நாம் தியானம் எடுக்கும்
பொழுது சில நேரங்களில் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலும் கூட அந்த எண்ணங்கள் திசை மாறிப் போகும். இது எதனால்
ஏற்படுகின்றது…?
நம் உடலில் இதற்கு முந்தி நாம் நுகர்ந்து சேர்த்துக் கொண்ட
உணர்வுகள் அது தீய அணுக்களாக மாறும் பொழுது
“அதற்கு அந்த உணவு தேவை…”
நாம் துருவ நட்சத்திரத்தை
எண்ணி அதை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தால்
1.தனக்காக வேண்டி அந்த
எல்லா அணுக்களும் சேர்த்து அதனதன் உணர்வை நுகரப்படும் பொழுது
2.நாம் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடியாதபடி அது தடுக்கும்.
3.வெறுப்போ வேதனையோ சலிப்போ சங்கடமோ பிறர் மேல் ஆத்திரமோ அந்த உணர்வுகள் தான் அதனுடைய உணர்ச்சிகளைத்
தூண்டும்.
4.அதன் வழி நம் உடலில் உள்ள அந்தத் தீய
அணுக்கள் உணவை எடுத்து வளரும்.
அதைத் தடுப்பதற்கு “உடனடியாக கண்களைத்
திறந்து…” துருவ நட்சத்திரத்தின் பால்
கண்ணின் நினைவைச் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருளும்
பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று மீண்டும் அதை எண்ணி எங்கள் உடலுக்குள் இருக்கும் ரத்த நாளங்களில் அந்தச் சக்தி
கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு சிறிது நேரம்
ஆன பின் கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின்
சக்தி உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.
1.உடலில் இருக்கக்கூடிய
அணுக்கள் அதன் வழி உணவை எடுக்காதபடி
2.கண்ணின் நினைவை உயிரில் செலுத்தி அங்கே புருவ மத்தியிலே அடைத்து… விண்ணிலே நினைவைச்
செலுத்தி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து ரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
காரணம்… எத்தனையோ விதமான தீய அணுக்கள் உடலுக்குள் இருப்பதால் அதனுடைய உணவுக்கு “அதனுடைய
வலுவை அது காட்டத்தான் செய்யும்…”
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின்
உணர்வை நமக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களில்
கலக்கச் செய்யும் பொழுது அது வலிமை பெறுகின்றது.
உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற
வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது “அதை இழுக்கும் சக்தி கிடைக்கின்றது…”
உதாரணமாக ஒரு தவறு
செய்பவரைக் கண்ணிலே நினைத்தபின் எப்படி அந்த உணர்வின் நிழல் படம் தெரிகின்றதோ அந்த நேரத்திலே நம்முடைய உணர்ச்சிகள் பல விதமாக
வெறுப்பாகத் தோன்றுகின்றது. கண் வழி நுகர்ந்து தான் ஏற்கனவே அது அணுவின் தன்மையாக அடைந்தது.
அதே கண் வழியாக உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க
வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்தும்
பொழுது அந்த உணர்வுகளை எடுத்து
2.ஏற்கனவே உருப்பெற்ற அணுக்கள் இரத்தத்தின்
வழி நுகர்வதை மாற்றி
3.துருவ நட்சத்திரத்திச் சக்தியை ஈர்க்கும்
சக்தி பெற்று நல்ல அணுக்களாக அதை மாற்றும்
சந்தர்ப்பம் வருகின்றது.
தியானம் இருந்தேன்… என் நினைவுகள் எங்கேயோ இழுத்துக் கொண்டு
போகிறது…! என்று அப்படிச் சொல்லி விட்டு விடாதீர்கள்.
யாம் சொன்ன முறைப்படி
அதை மாற்றி மாற்றி… உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ
நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.
1.இரத்தங்களிலே அதைப் பெருக்கி பழகுங்கள்.
2.இப்படி… இந்த வலிமையைத் தான் நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.