ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2024

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தை நாமும் பெற வேண்டும்

அகஸ்தியனின் தாய் தந்தையர் கொடூர மிருகங்களிடமிருந்தும் விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ள இயற்கையில் விளைந்த விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளை அரைத்துத் தங்கள் உடலிலே பூசிக்கொண்டார்கள்.

பூசிய பின்… உடலின் வெப்பத்தால் வெளி வரக்கூடிய அந்த மணங்களை மற்ற மிருகங்கள் நுகரப்படும் போது அவைகளுக்கு எதிர்நிலையாகி… அதனின் வலுவை இழந்து விடுகின்றது… மிருகங்கள் விலகி ஓடி விடுகின்றது.

புலியானாலும் யானையானாலும் தேளானாலும் பாம்பானாலும் அஞ்சி ஓடி விடுகின்றது. அவைகள் எல்லாம் விஷத்தின் இயக்கம் கொண்டது தான். ஆனாலும்
1.விஷத்தை முறிக்கும் பச்சிலைகளை உடலில் முலாமாகப் பூசியபின்
2.அந்த மணத்தை அந்த விஷம் கொண்ட உயிரினங்கள் நுகரப்படும் பொழுது இவர்கள் அருகிலே வருவதில்லை.

அகஸ்தியன் என்று சொல்லும் அவர்கள் தாய் தந்தையர்கள் அத்தகைய பாதுகாப்பு கொண்டு தான் வாழ்ந்தார்கள். அதே சமயத்தில் கணவன் மனைவி இணைந்து கர்ப்பமான பின் இந்த மணத்தைக் கருவில் இருக்கும் குழந்தையும் நுகர்கின்றது.

நஞ்சை வென்றிடும் சக்தியாக அந்தக் குழந்தை உருவாகிறது. பத்து மாதமும் அந்த உணர்வுகளை நுகர்ந்து குழந்தை பிறக்கிறது. அப்படி உருவானவன் தான் அகஸ்தியன்.

ஏனென்றால் இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தை நீங்கள் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கி…
1.நினைவு கொண்டு அதை நுகரப்படும் பொழுது
2.உயிர் உங்களுக்குள் நஞ்சை வென்றிடும் அணுவாக மாற்றுகின்றது.

அன்று அகஸ்தியன் பெற்ற சக்தியும்… அவனின்று வெளிப்பட்ட சக்திகளும் இன்றும் நம் பூமியில் உண்டு. அகஸ்தியன் கண்டுணர்ந்த…
1.விண்ணில் தோன்றிய உணர்வுகள் அது எவ்வாறு…? என்பதை இணைத்து
2.ஆதி முதல் இந்த உணர்வுகள் மாற்றம் அடைந்ததை இணைக்கப்படும் பொழுது
3.அண்ட சராசரத்திலே விளைந்த உணர்வுகளையும் உங்களால் நுகர முடியும்
4.அகஸ்தியன் நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக அமைந்த நிலையும் உங்களுக்குள் கலக்க நேரும்.

அத்தகைய அணுக்களாக உங்களுக்குள் விளைந்து விட்டால்… அது தன்னுடைய இரைக்காக உணர்ச்சிகளை உந்தப்படும் போது… அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தையும் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள். தீமைகளை அகற்றும் சக்தியும் நீங்கள் பெற முடிகின்றது.

அகஸ்தியன் தனக்குள் நஞ்சினை முறித்திடும் உணர்வுகளை தாய் கருவிலேயே பெற்றதனால்… சிறுகச் சிறுக வளர்ந்து எத்தகைய விஷத்தையும் அடக்கும் தன்மையும் அந்த விஷத்தை முறித்திடும் ஆற்றலும் அவனுக்குள் விளைகின்றது.

ஆனால் சாதாரண மக்களாக இருப்போர்… நோயுடன் வேதனைப்படுவோரை ஒரு கருவுற்ற தாய் நுகர்ந்து விட்டால் அந்தச் சிசுவிற்குள்ளும் அது இணைந்து விடுகிறது.

அதாவது… இன்னொரு மனித உடலில் விளைந்த ஆஸ்துமாவோ கேன்சரோ கடுமையான நோய்வாய்ப் பட்டதை… ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தால்
1.அந்தக் கஷ்டங்களை தாய் அறிய முடியும்… தாய் உடலுக்குள் அணுக்களாக விளைகின்றது
2.கருவிலிருக்கும் குழந்தைக்கோ இந்த உணர்வுகள் பட்டு விஷ அணுக்களாக உருவாகும் தன்மை வருகின்றது.

பிறந்த பின்… ஆரம்பத்தில் குழந்தைப் பருவமாக இருக்கும் பொழுது தெரியவில்லை என்றாலும்
1.எந்தப் பருவத்தில் எந்த மனித உடலில் அந்த உணர்வுகள் வந்ததோ
2.அந்தப் பருவம் வரும் பொழுது… அந்த உடலில் உருவான அதே நோய் இங்கேயும் வரும் பார்க்கலாம்.

இதெல்லாம் தாய் கருவிலே விளையும் உணர்வுகள்.

இதற்குத் தப்பியவர்கள் நல்ல உடலாக நாம் இன்று பெற்றிருக்கின்றோம். ஆனாலும் கஷ்டங்களையும் துன்பங்களையும் சாப வினைகளையும் தாய் கேட்டு அறிந்திருந்தால்… கருவிலே அது பதிவாகி இருந்தால்… நம்முடைய திறமைகள் எத்தனை இருந்தாலும் குடும்பத்தில் அந்தச் சாப அலைகள் தொல்லைகளாக வரும்.

எனென்றால் உயிர் நுகர்ந்த பின் அந்த உணர்வின் இயக்கமாக மாற்றி விடுகின்றது. இப்போது (பிறந்ததிலிருந்து) அல்ல… தாய் கருவிலேயே இந்த வித்துக்கள் ஊன்றப்படுகின்றது. அதனுடைய காலப் பருவம் வரும் பொழுது அதனுடைய விளைவுகளை விளைய வைத்துவிடும்

ஒரு தென்னை மரம் வளர்ச்சியானாலும் அதனுடைய காலப்பரும் வரும் பொழுது தான் காய்க்கின்றது. செடியோ தாவரமோ எதுவாக இருந்தாலும் அதனுடைய காலப்பருவம் வரும் பொழுது தான் அதனுடைய விளைச்சல்கள் வருகின்றது.

நெல் போன்ற தானியங்களை எடுத்துக் கொண்டாலும் அதே போன்று தான் நான்கு மாதம் அல்லது ஆறு மாதம் அது விளைந்து வருகின்றது.

மூன்று மாதத்தில் விளையக்கூடிய நெல் வகைகளையும் கண்டுபிடித்து உருவாக்கியிருக்கிறார்கள் இணை சேர்த்த நிலைகள் கொண்டு துரித காலத்தில் விளைவதும் உண்டு.

அது போன்று தான்
1.கர்ப்பமுற்ற தாய் உற்றுப் பார்த்த உணர்வுகள் பிறக்கும் குழந்தையை மாற்றி விடுகின்றது
2.இது தான் “பூர்வ புண்ணியம்” என்று சொல்வது.

தீமை செய்வோரையோ திருடுவோரையோ அல்லது குற்றங்கள் செய்வோரையோ கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து… இப்படிச் செய்கின்றார்களே…! என்று கூர்ந்து அதை நுகர்ந்தால் கருவிலேயும் இந்த உணர்வின் சக்தி இணைந்து விடுகிறது.

குழந்தையாகப் பிறந்த பின் அவன் வளர வளர தவறு செய்பவனாகவே அவன் மாறுகின்றான். என்னதான் அவனைத் திருத்த முயற்சி செய்தாலும் முடியாது.

சாமிக்குத் தீபாராதனை காட்டியோ… சாமியாருக்கு பணம் கொடுத்தோ… ஜோசியக்காரனிடம் சென்றாலும் அதை எல்லாம் மாற்ற முடியாது.

ஏனென்றால் இயற்கையின் நிலைகள்…
1.நமது உயிர் நாம் நுகர்ந்த உணர்வை ஓ… என்று இயக்கி
2.ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆனால் அதே தாய் மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று ஏங்கி… இந்த உணர்வைப் பல முறை பாய்ச்சினால் தான் அவனைத் திருத்த முடியும்.