ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2024

நம் கண்களுக்குண்டான ஆற்றல்

1.அருள் ஞானிகள் உணர்வுகளை… அருள் ஒளி பெறும் சக்திகளை…
2.துருவ நட்சத்திரம்… சப்தரிஷி மண்டலங்கள்… என்று வரிசைப்படுத்தி யாம் உபதேசிக்கும் போது
3.கூர்ந்து கவனித்தால் உங்கள் நினைவாற்றல் “அங்கேயே” அழைத்துச் செல்கின்றது.

ஒளியாக உருப் பெற்ற அந்த உணர்வின் தன்மையை… அகஸ்தியன் துருவனாகி நஞ்சினை முறித்த உணர்வுகளை நினைவாக்கப்படும் பொழுது அந்தச் சக்தியைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.

உதாரணமாக… ஒரு டிவி ஸ்டேஷனை அமைத்தப் பின் எந்தெந்த அலை வரிசைகளில் அதை ஒளிபரப்ப வேண்டும் என்று
1.அதில் இருக்கக்கூடிய மேக்னட் ஒன்றுடன் ஒன்று கலந்து
2.அதனுடைய இணைப்பின் ஆற்றல் வரப்படும் பொழுது ட்ரான்சாக்சன் ஆக மாற்றுகின்றது.

இந்த உணர்வின் ஒளி அலைகளை இது மாற்றிய பின் “டிவி ஒரே பெட்டியாக இருப்பினும்…” எங்கிருந்தோ ஒளிபரப்பாகும் அலைகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி எல்லாப் பக்கமும் பரவச் செய்தாலும்…
1.அதே அலைவரிசையில் இந்தப் பெட்டியைத் திருப்பி வைத்து
2.ஆண்டென்னா என்ற ஒரு சாதனத்தை வைக்கப்படும் பொழுது
3.அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி பெட்டிக்குள் ஈர்க்கும் சக்தி வருகின்றது.

இதைப் போன்று தான் எல்லாவற்றையும் உணர்ந்து நுகர்ந்து இந்த மனித உடலை உருவாக்கிய “கண்” நமது உடலுக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

எந்த உணர்வின் தன்மை ஒளி அலைகளாகத் தாக்கப்படுகின்றதோ… அந்தந்த உணர்வின் தன்மை கண்களில் உந்தப்பட்டு…
1.எது என்று அதை அறியும் ஆற்றலும்
2.நுகர்ந்து உயிருடன் உணர்வின் ஒலிகளைப் பரப்பி
3.அதற்குத்தக்க (அலை வரிசைக்குத்தக்க) குணங்களின் அடிப்படையில் உடலை இயக்கச் செய்கின்றது.

ஆனால் எதனின் உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ இந்த உணர்வின் அலைகள் கூடும் பொழுது மனிதனின் உருக்களும் மாறுகின்றது… நினைவுகளும்… செயல்களும் மாறுகின்றது.

மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் அலைகளாக மாற்றி வரும் பொழுது அதைக் கூர்ந்து நாம் கவனித்தோம் என்றால்… இதன் வழி நமக்குள் பதிவானது அதன் வழியே தனக்குள் கொண்டு வருகின்றது.

ஆண்டென்னாவாக இருப்பதும்…
1.ஒரு காந்தப்புலனறிவு பிற நிலைகள் இயக்குவதை இணை சேர்த்து ட்ரான்சாக்சன் ஆக இயக்கப்பட்டு
2.இந்த உணர்வின் தன்மை இரண்டும் கலக்கப்பட்டு இங்கே பதிவாக்கும் நிலைகள் கொண்டு (அது பதிவானால்தான்) ஈர்க்கும் சக்தி வருகின்றது.
3.இணைத்து நாடாக்களில் பதிவாக்கவில்லை என்றால் அது பதிவாகாது…. அலைகளை ஈர்க்காது (ஆண்டென்னாவைத் திருப்பி வைப்பது)

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகளை மனிதன் கண்டுணர்ந்து விஞ்ஞான அறிவால் இதை மாற்றுகின்றான்.

சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது… ஒரு செடியின் சத்தை நுகர்ந்து கொண்டால் அதனின் மணத்தை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உணர்வின் தசைகளாகும் பொழுது (உடலாக) மின் அணுவின் தன்மையை நாம் எந்தத் தாவர இனத்தை உணவாக உட்கொண்டோமோ இந்த உணர்வின் எதிர் அலைகளைப் பாய்ச்சும் பொழுது… தாவர இனத்தின் உண்மையின் உணர்வுகளைக் கவர்வதையும் பார்க்கலாம்.

இதெல்லாம் மனிதனுக்குண்டான ஆற்றல்…
1.மனிதனான பின் எதனையும் கவர்ந்து… அதனைப் பதிவாக்கி நுகர்ந்து விடலாம்
2.இதனின் தன்மை கொண்டு… நாம் இனி பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.