ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2024

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

 

நீங்கள் எத்தகைய துயர் பட்டுக் கொண்டிருந்தாலும்… அல்லது சாபவினைகளோ பாவ வினைகளோ தீய வினைகளோ உங்களுக்குள் சேர்ந்திருந்தாலும்… அதை எல்லாம் நீக்க
1.யாம் உபதேச வாயிலாக… அருள் வாக்கின் தன்மையாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி உள்ளேன்.

ஆனால் வாக்கினைக் கொடுத்த பின்பும் அதை நீங்கள் விரயம் செய்தால் அது உங்களுடைய அதிர்ஷ்டம் தான்.

நீங்கள் எல்லோரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சதா உங்கள் உயிரை ஈசனாகவும் ஆண்டவனாகவும் குருவாகவும் மதித்து நான் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

நீங்களும் அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் தொடர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

காலையில் எழுந்தபின் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் நோயை மறந்து விடுங்கள்… நோயின் தன்மை அது செயலிழந்து விடும்.

1.எந்த அளவுக்கு யாம் கொடுத்த வாக்கினை நீங்கள் கூட்டிக்கொண்டு வருகின்றீர்களோ
2.அது அனைத்தும் உங்களுக்குள் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விடும்பொழுது அந்த நஞ்சின் தன்மை வலு இழப்பது போன்று நீங்கள் “ஆயிரம் தரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால்” உடலில் உள்ள நோய்கள் தானாகவே போய்விடும் அது செயலிழந்து விடும்.

1.காலையில் படுக்கையில் கண் விழித்த பின் இதைச் செய்யுங்கள்
2.அதற்குப் பின் இடைவெளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள்
3.வெளியிலே வாகனங்களில் சென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்
4.இரவிலே படுக்கையிலே படுக்கும் போதும் அதே மாதிரி எண்ணுங்கள்.

உயர்வான உணர்வுகள் உங்களுக்குள் பெருகத் தொடங்கும்… பின் நினைவின் எண்ணங்கள் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக மாறும்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்களை அறியாது சேர்ந்து தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் நீங்க வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து எங்கள் தொழில்களிலும் படர்ந்து குடும்பத்தில் உள்ளோர் மன பலம் மன நலம் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும்.

எங்களிடம் தொழில் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று… மன பலம் மன நலம் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும் சீராக வேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று இதைப் போல் எண்ணுங்கள்.

இப்படி எண்ணும் போது இங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் மனமும் உயர்ந்த நிலையில் இருக்கும்.
1.உங்கள் எண்ணங்கள் விண்ணை நோக்கிப் பற்றும்.
2.இதற்கு முன் உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் நசியும்.
3.ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
4.இந்த உணர்வின் தன்மை எட்டா தூரத்தில் இருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எட்டும்படி செய்யும்…
5.உங்களுக்குள்ளேயே அந்த இயக்கங்கள் வருவதைப் பார்க்கலாம்.

பின் எந்த சாப வினைகளும் உங்களை அணுகாது. அதே சமயத்தில் உங்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய சாப வினைகளைப் போக்கும் சக்தியும் பெறுவீர்கள்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதே போன்று நோய்களைப் பற்றி எண்ணாது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.