ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 20, 2024

எல்லோருக்கும் நான் உதவி செய்தேன் என்று சொன்னாலும்… அதிலே பலன் அடைகிறோமா…?

உதாரணமாக நாம் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்ற காரணத்தால் கோபத்தால் கொதிப்பும்… வேதனை என்ற உணர்வும் எடுத்துக் கொண்டால் அதை நாம் சுவாசிக்கப்படும் பொழுது “உயிரிலே பட்டு” அது கொதித்தெழும் உணர்வாக உடல் முழுவதும் படரச் செய்கின்றது.

ஆனால் உடலை இயக்கப்படும் பொழுது
1.கொதித்தெழும் உணர்வுகளையே அதிகமாக சுவாசிக்கச் செய்து இந்த உணர்வின் சத்தினை உமிழ் நீராக வடித்து விடுகின்றது.
2.ஆகாரத்துடன் இது கலந்து கை கால் குடைச்சல் சோர்வு போன்ற நிலைகள் வந்து விடுகின்றது

கோபம் என்பது கார உணர்ச்சிகள்… வேதனை என்பது விஷத்தின் தன்மை கொண்டது. இது இரண்டறக் கலந்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது நமது உடல் அதை இரத்தமாக மாற்றுகிறது.

உதாரணமாக ஒரு இன்ஜினில் ஒரு பக்கம் பெட்ரோலை ஊற்றினால் அதிலிருக்கும் பிஸ்டன் அந்தப் பெட்ரோலை உறிஞ்சி ஆற்றலாக மாற்றி… அந்த இயந்திரத்தினைச் சுழலச் செய்து இயக்கச் செய்கின்றது.

இதே போன்றுதான் நாம் உணவாக எடுத்துக் கொள்வது வயிற்றுக்குள் சென்ற பின் கொதிகலனாகி ஆவியாக மாற்றி அதில் வருவதை இரத்தமாக மாற்றுகின்றது.

இஞ்சினில் உள்ள பிஸ்டன் பெட்ரோலை எப்படி இழுக்கின்றதோ அதே போன்று நாம் இருதய வால்வுகள் இரத்தத்தை இழுத்து… பின் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்கு அனுப்புகின்றது.

ஆனால்
1.இரத்தத்தை இந்தப் பிஸ்டன் அதாவது இருதய வால்வு இழுக்கப்படும் போது…
2.அந்த வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் இரத்தத்தின் வழியாகச் சென்று தாக்கப்படும் பொழுது
3.அந்த வால்வுகள் வீக்கம் அடைய ஆரம்பித்து விடுகின்றது.
4.அவ்வாறு வீக்கம் அடைந்து விட்டால் இருதயம் இயக்கப்படும் பொழுது எரிச்சலும் வலியும் ஏற்படுகின்றது
5.அதாவது அப்போது நெஞ்சு வலி ஏற்படுகின்றது என்று சொல்லலாம்.

உடல் முழுவதும் பரவும் பொழுது உடலிலும் எரிச்சல் ஒரு விதமான கொதிப்பு… மனதிலும் கொதிப்பு… அடுத்து நாம் செம்மையாக எந்த வேலையும் செய்ய முடியாத நிலை உருவாகி விடுகிறது.

நல்லதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாசத்தால் எடுத்துக் கொண்டாலும் உடலுக்குள் இத்தனை வேதனைகளை உருவாக்கிவிடுகிறது. எ
1.எவ்வளவு அழகான உடலாக இருப்பினும் அதை நலியச் செய்துவிடுகிறது. நம் எண்ணங்களையும் நலிவடையச் செய்து விடுகின்றது.
2.அடுத்து நம் சொல்லைக் கேட்பவர்களையும் நம் மீது வெறுப்படைய வைத்து விடுகின்றது.

இப்படித்தான் பாசத்தால் பண்பால் பரிவால் நம்மை அறியாமலேயே சில தீமைகள் உள் புகுந்து விடுகின்றது.

குடும்பத்திற்குள் சிறிது குறை காணும் போது வேதனைப்படுகின்றோம். வெளியிலே பழகுபவர்களிடம் பண்பாக நடந்து கொண்டாலும் நாம் எதிர்பார்த்த நிலைக்கு வரவில்லை என்றால் அங்கேயும் வேதனைப்படுகின்றோம்.

காரணம்… அவர்களுக்கு நாம் உயர்ந்த நிலைகள் கொண்டு உதவி செய்திருப்பினும்… சந்தர்ப்ப பேதத்தால் அவர்கள் நினைவில் அது வராதபடி சிறு குறைகள் செய்து விட்டால்
1.தக்க சமயத்தில் நாம் அவர்களுக்குச் செய்த உதவியை மறந்துவிட்டு
2.எனக்கு இப்படித் தீங்கு செய்கின்றார்களே…! என்று வேதனைப்படுகின்றோம்.

ஆக… நன்மைகள் பல செய்திருப்பினும் நம்மை அறியாமலே தீமைகள் நுழைந்து நம் நல்ல குணங்களை நல்ல உடலை நல்ல மனதைச் செயலற்றதாக ஆக்கி நோயாக மாற்றி விடுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து எத்தனையோ தீமையிலிருந்து விடுபட்டு மீண்டு வந்த நிலையில் இன்று சகலத்தையும் அறியக்கூடிய சக்தி பெற்றிருக்கின்றோம்.

ஆனாலும்… பாசத்தால் பண்பால் பரிவால் நல்லதைச் செய்யும் போது நம்மை அறியாது வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளும் ஊடுருவி நமக்குள் வந்து விடுகின்றது.

பௌர்ணமிக்குப் பின் நிலா சிறுகச் சிறுக தேய்ந்து மறைவது போல் நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கி விடுகிறது.

அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?