ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2024

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தி பெறுவேன்…! என்ற “தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்”

சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகின்றீர்கள் மந்திரத்தை நம்புகின்றீர்கள்… ஆனால் உங்களுக்குள் அனைத்தையும் பெறக்கூடிய தகுதி உண்டு….!
1.நீங்கள் ஏன் உங்களை நம்ப மாட்டேன் என்கிறீர்கள்…?
2.நான் (ஞானகுரு) என்னை நம்பியதால் தான் குரு காட்டிய வழியில் அனைத்து சக்திகளையும் பெற முடிந்தது
3.என்னைப் போல் நீங்களும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

விஞ்ஞான உலகத்தால் ஏற்படும் நஞ்சான சூழ்நிலையில் இருந்து மீட்டிக் கொள்ளும் எண்ணங்கள் உங்களுக்குள் வர வேண்டும். தீமைகளிலிருந்து அகற்றிடும் சக்தி உங்களுக்கு வேண்டும்.

அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்… மெய் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்து உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களை அறியாது வந்து இருளை மாய்க்க வேண்டும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் ஆற்றல் பெற வேண்டும். இந்த மனித உடலிலிருந்தே ஒளியின் சரீரமாகும் ஆற்றல் பெற வேண்டும்.
1.அந்த அருள் ஞானிகள் எல்லையை நீங்கள் கைப்பற்றி அதை அடைய வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கிறேன்
2.உங்களை நம்புங்கள்… உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள்

ஆகவே… உங்களை மனிதனாக வளர்த்திட்ட உயர்ந்த குணங்களைத் தெய்வ நிலைகளாக எண்ணுங்கள்.

அனைத்தையும் அறிந்திடும் நிலையாக
1.உங்களுக்குள் அமைந்திருக்கும் “கலைவாணி” என்று சர்வத்தையும் அறிந்திடும் ஞானம் உங்களுக்குள் உண்டு.
2.சர்வத்தையும் உங்களுக்குள் வளர்த்திடும் “இலட்சுமி” உண்டு… சர்வத்தையும் உருவக்கிடும் “பராசக்தி” உண்டு
3.அனைத்தையும் அறிந்திடும் “சர்வ சக்தி” உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஆகவே… உங்களை முழுமையாக நீங்கள் நம்புங்கள்.

இந்த உணர்வினை அறிந்திடச் செய்திடும்… இந்த உபதேசத்தை இப்பொழுது கேட்டிடும் உணர்வும் உங்கள் உயிரின் நிலையே.

ஆகவே அந்த உணர்வின் தன்மையை நீங்கள் பருகும் நிலையாக ஏங்கினால்… உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஈசனுக்கு நீங்கள் செய்யும் காணிக்கையாக இது அமையும்.

மகரிஷிகள் சென்ற எல்லையை அடைய உங்களுக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசன் நிச்சயம் அதற்கு வழிகாட்டுவான்.
1.எண்ணி எடுக்கும் போது அதையே அவன் விளைய வைக்கின்றான்…
2.மகரிஷிகள் வாழும் எல்லையை அடையச் செய்கின்றான்.

அந்த நிலையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும்…! ஆகவே இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் இதன் வழி தியானித்து உயர்ந்த சக்திகளைப் பெறுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை குருநாதர் காட்டிய வழியில் தியானத்தின் மூலம் பெற முடியும்… நிச்சயம் பெறுவேன்…! என்ற தன்னம்பிக்கை கொண்டு செயல்படுங்கள்.

1.நீங்கள் எங்கே சென்றாலும் அருள் ஞானிகளை எண்ணினால் அந்தச் சக்தியை பெற முடியும்
2.எங்கே எந்த இடத்தில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபட முடியும்
3.அத்தகைய சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் (ஞானகுரு).