ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 12, 2024

“சத்ரு மித்ரு… பாசிடிவ் நெகடிவ்” – உயிருக்குள் நடக்கும் (உணர்வின்) இயக்கங்கள்

ஒருவர் மீது நாம் பாசமாக இருக்கின்றோம். ஆனால் அவருடன் வேறு ஒருவர் சண்டையிடுகின்றார்... அதனால் இவர் சோர்வடைகின்றார். நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

பாசத்தால் சோர்வான எண்ணமும்… சண்டையிட்டவர் மீது வெறுப்பும் நாம் அடைகின்றோம். நல்ல குணங்களுடன் நாம் இருந்தாலும்
1.அந்த நேரத்தில் இந்த இரண்டையும் கலந்து சேர்த்துச் சுவாசிக்க நேர்கின்றது.
2.அவ்வாறு சுவாசித்தவுடனே போர்…! சுவாசித்தது உயிரிலே பட்டவுடனே இங்கே எரிச்சல்
3.இந்தத் துடிப்பின் உணர்வலைகள்… உந்தி நம்மை இயக்குகிறது.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் நாம் ஆணைகள் இட்டவுடனே அது எலெக்ட்ரானிக்காக மாறி… நம கொடுத்த அழுத்தத்தின் (COMMAND) தன்மை கொண்டு அது எந்த உணர்வின் செயலோ அதற்குத் தக்கவாறு அந்தக் கம்ப்யூட்டர் இயங்குகிறது.

அதே போல் நாம் சுவாசித்த உணர்வுகள் (வெறுப்பும் சோர்வும்) உயிரிலே பட்டவுடனே அந்த உணர்வுக்கொப்ப உயிருக்குள் கடினமான எண்ணங்கள் தோன்றுகிறது.
1.அந்த உணர்வு நம் உடல் முழுவதற்கும் பரவிக் கிடக்கும் செல்களில் இயக்கியவுடனே
2.அதற்குத் தக்கவாறு நம் உடலின் இயக்கங்கள் ஆகின்றது.

உதாரணமாக தறியிலே துணியை நெய்யப்படும் பொழுது ஒரு நெறிக்கட்டையை வைத்து எம்பிராய்டரி பூ வேலைகளைச் செய்வார்கள். அந்த இயந்திரத்தில் ஒன்றை (PEDAL) மிதித்தால் போதும்.

அதனின் காலகட்டப் பிரகாரம்… ஒவ்வொரு நிமிடத்திற்குத் தக்கவாறு அந்தப் பின்களை (PIN) மாற்றி மாற்றி அழுத்திப் போடும் பொழுது அந்தத் துணியில் அழகான பூ வேலையாகச் செயல்படுத்தும்.

அதைப் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு உணர்வின் செயலாக
2.ஒவ்வொரு குணத்திற்குத் தக்கவாறு நம்முடைய அங்கங்களை இயக்குவதும்
3.பேசிய உணர்வலைகள் கொண்டு திருப்பிப் பேசுவதும்
4.கண்ணிலே எதிர்நிலையான அலைகள் பாய்வதும் அதைக் கொண்டு ஒரு பொருளைப் பார்ப்பதும் போன்ற இயக்கத்தின் நிலைகள் அமைகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. இருந்தாலும்… கண் கொண்டு தவறு செய்வோரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்தாலோ… அவர் செய்யும் தவறின் உணர்வுகள் நம் உயிரிலே பட்டு… உணர்ச்சிகள் பொங்கி எழுகின்றது.

இந்த உணர்வலைகள் சீறிப்பாய்ந்து உடல் முழுவதும் படரப் படும்பொழுது போர்… நெகடிவ் பாசிடிவ்…! அதாவது நம்முடைய உயிருக்குள் வெப்பமாகும் பொழுது… அதே சமயத்தில் கதிரியக்கச் சக்தி அந்த இரண்டின் நிலைகள் மோதும் போது போர்.

அந்தப் போரின் நிலைகள் கொண்டு… எதிர் சக்தியான வியாழன் கோளின் சத்தும் அதனுடைய கதிரியக்கங்கள் இரண்டும் சேர்க்கப்படும் பொழுது
1.சுழற்சியாகிக் (திருகிக்) கொண்டிருக்கும் இந்த உணர்வின் தன்மையை
2.எதிர்நிலையான நிலையில் தாக்குதலாகும் பொழுது அது சீர்பட்டு நேர் துடிப்பாகின்றது,
3.இப்படி… போர் முறைகளில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டுள்ளது.
4.சத்ரு மித்ரு என்ற இயக்கச் சக்தி இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

உதாரணமாக… ரோட்டிலே நாம் செல்கிறோம் என்றால் அந்த நேரம் ஒரு பஸ் வேகமாக வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த உணர்வின் வேகத் துடிப்பு நமக்குள் ஈர்க்கப்பட்டு… அது நல்ல உணர்வுகளுடன் மோதும் போது தான்… “நமக்கு ஆபத்து…” என்று அறிந்து கொள்கின்றோம்.

ஆக… வேகமாக இயக்கப்படும் பொழுது
1.பஸ்ஸின் வேகத்திற்குத் தக்கவாறு இந்த உணர்வின் இயக்கம்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் உணர்வாக நம்மை உந்தித் தள்ளுகின்றது.

ஓவ்வொரு உணர்வும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது. ஆகவே அருள் ஞானிகள் உணர்வை அடிக்கடி நாம் எண்ணி எடுத்தால் அந்த உணர்வுகள் நம்மை இயக்கும்… நம்மை அருள் வழியில் அது அழைத்துச் செல்லும்.