ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2024

சாதாரண ஆன்மாக்களின் இயக்கமும்… குருநாதர் ஆன்மாவின் இயக்கமும்…!

சந்தர்ப்பத்தில் திடுக்… என்று நாம் பயந்துவிட்டோம் என்றால் பய உணர்வு கொண்டு இறந்த ஆன்மாக்கள் நமக்குள் வந்துவிடும். அடுத்து அதனுடைய எண்ணத்தை (பயத்தை) நமக்குள் தூண்டும்.

பயமான எண்ணங்களுடன் இருந்தோம் என்றால் அந்த ஆத்மா நமக்கு ஒத்துழைக்கும். ஆனால்…
1.நல்லதை நாம் எண்ணிக் கொண்டிருந்தோம் என்றால் அந்த நேரத்தில் பய உணர்வுகளை அந்த ஆன்மா ஊட்டும்
2.நாம் நல்ல காரியங்கள் செய்வதை அப்போது தடைப்படுத்தும்.

காரணம்… அந்த ஆன்மா கடைசி நேரத்தில் எந்த பயத்தால் உடலை விட்டு உயிர் பிரிந்ததோ அதே நிலையில் இருந்து தான் நமக்குள் அது செயல்படும்.

ஆனால் நாம் நல்லதை நினைக்கும் பொழுது அதற்கு எதிர் நிலையாகும் நல்ல உணர்வுகளுடன் நம்முடைய நினைவை செலுத்திச் சுவாசிக்கும் பொழுது நம்மை அறியாமலே பயத்தை ஊட்டிக் கொண்டிருக்கும்

தியானத்தில் நாம் எடுக்கும் சக்தி கொண்டு உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் (உயிரான்மாக்கள்) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.நாம் இந்த உணர்வின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அந்த உயிரான்மா நமக்குள் அடங்கி
2.நல்ல சக்திகளைப் பெறும் பொழுது “நம் எண்ணத்தை ஓங்கிச் செயல்படுத்த” இது உதவும்.

பேய் என்கின்றோம்… அருள் என்கின்றோம்…! பல ஆன்மாக்கள் இப்படி நமக்குள் வந்து இயங்கி விடுகின்றது. அவைகள் நம்முடன் இணைந்து செயல்படுவதற்கு நம் உடலுக்குள் இருக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

உதாரணமாக பஸ்ஸிலே நாம் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அன்புடன் பண்புடன் நாம் இருக்கின்றோம். அந்தச் சமயம் எதிர்பாராதபடி ஒரு மனிதன் பஸ்ஸின் குறுக்கே ஓடுகின்றான்… நாம் பார்த்து விடுகின்றோம்.

1.அடிபட்டு விடுவானே…! என்ற பயத்தை ஓங்கி ஆ… என்று ஏக்கத்தில் நாம் பார்க்கின்றோம். ஆனால் அவன் தப்பி விடுவான்
2.அடிபட்டு விட்டால் என்ன ஆகும்…! என்று அவன் மேல் உள்ள ஏக்கத்தினால் பயத்தின் உச்சகட்டம் அடையும் பொழுது
3.பய உணர்வாலே இதற்கு முன் அடிபட்டு இறந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்து விடும்.

அப்படி வந்துவிட்டால் அது எப்படிப் பயமான எண்ணங்கள் கொண்டு செயல்பட்டதோ… அந்த உடலில் “கடைசி நிமிடம் பட்ட அவஸ்தைகள் அனைத்தும்” நமக்குள் வந்து இயங்கத் தொடங்கும்.

ஆகவே என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என்னுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்று நாம் எண்ணினோம் என்றால் “அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு புண்ணியம் கிடைக்கும்…”

உடலை விட்டு நாம் எப்போது பிரிந்தாலும் நம் உடலில் இருந்த ஆன்மாக்களும் வெளியில் வந்து… நல்ல ஆத்மாவாக… மனித உடலைப் பெறக்கூடிய தகுதி பெறும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றோம்.

1.உடலை விட்டு குருநாதர் பிரிந்து சென்ற பின் அவரின் உயிராத்மா அது எந்தெந்த நிலைகளைச் செயல்படுத்தியது…? என்றும்
2.வெளியிலே செல்லும் பொழுது “மற்ற ஆத்மாக்கள் கவராத வண்ணம்” இவரின் ஆன்மா எந்தெந்த வழிகளில் எல்லாம் செயல்பட்டது…? என்பதையும்
3.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது “அதனுடைய இயக்கச் சக்தியை” எமக்கு உணர்த்திக் காட்டினார்
4.அவருடைய ஆன்மா எவ்வாறு விண்ணுலகம் செல்கின்றது…? அது எந்தெந்த நிலைகள் செயல்பட்டது…? என்பதையும் எனக்கு உணர்த்தினார்.
5.எனக்குள்ளும் (ஞானகுரு) அந்தச் சக்திகள் உணரப்பட்டது… உணர்ந்து கொண்டேன்.

ஆனால்… சாதாரண மனிதர்களின் உயிரான்மா… உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழல முடிகின்றது..

அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் (உடலுடன் உள்ளவர்கள்) ஆத்ம சக்தியின் வலுவைக் கூட்டச் செய்து… எண்ணத்தை ஓங்கச் செய்து… அவர்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க முடியும். அந்த ஆன்மாக்கள் தவமோ தியானமோ செய்யவில்லை என்றாலும் அவர்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க முடியும்.

ஏனென்றால் உடலுடன் உள்ளவர்களிடம்… அவரின் உணர்வுகள் உண்டு.
1.சப்தரிஷி மண்டல ஆற்றலை எடுத்து வளர்த்துக் கொண்ட பின்
2.எண்ணத்தால் உந்தி சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வுகளை எடுத்து வளர்கின்றார்கள்… ஒளியின் சரீரம் பெறுகிறார்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுதெல்லாம் அந்த உயர்ந்த சக்திகளை நாம் எளிதில் பெற முடியும். அதைப் பெறக்கூடிய தகுதியைத் தான் குருநாதர் வழியில் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

மரம் செடி கொடிகளுக்கு உரம் கொடுப்பது போன்று…
1.துவண்ட நிலையில் இருக்கும் உங்கள் நல்ல குணங்களுக்குள்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து
3.அந்தத் தூண்டுதலின் உணர்வு உண்டு செவிப் புலனால் ஈர்க்கச் செய்து
4.மகரிஷிகளின் உணர்வு கொண்டு ஒவ்வொன்றையும் இயங்கச் செய்வதனால்
5.சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுது விண்ணை நோக்கி உங்களால் ஏக முடியும்
6.மேல் நோக்கி நீங்கள் எண்ணும் பொழுது உங்கள் சுவாசத்திற்குள் அது ஈர்க்கப்படும்.

ஆக… அரும் பெரும் சக்திகளைப் பெறும் சந்தர்ப்பத்தை இப்போது ஏற்படுத்துகின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.