ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 24, 2024

வழக்கத்தில் நாம் செய்வது ஒன்று… ஆனால் அதையே “நல்லதை உருவாக்கும் பழக்கமாக மாற்ற வேண்டும்”

புற உலகில் என்னென்ன வழி (மார்க்கம்) இருக்கிறதோ அது அத்தனையும் இன்று நம்புகின்றோம்… நம்மை நாம் நம்புகிறோமா…?

ஆக… ஒவ்வொரு மனிதனுக்கும்
1.அவனுக்குள் இருக்கும் சக்தி இன்னது தான் என்று யாம் (ஞானகுரு) தெளிவாகச் சொல்லி
2.உங்கள் எண்ணத்திற்கு வலுவையும் கொடுத்து… எண்ணத்தால் ஞானிகள் சக்தியைப் பெறச் செய்து
3.உங்கள் எண்ணத்தாலே உங்களை அறியாது வரும் தீமைகளை அகற்றிட உங்களுக்கு அந்த சக்தியையும் கொடுக்கின்றோம்.
4.ஆனால் இதை நீங்கள் வளர்ப்பதற்கு உங்களுக்கு மனம் வரவில்லையே…!
5.யாரோ செய்வார் எவரோ செய்வார் என்ற எண்ணத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனக்கென்று தனித்து நான் வரவில்லை குரு சொன்ன வழியில் நான் கண்டேன்… அருள் ஞானத்தினை அவர் காட்டிய வழியில் பெற்றேன்…! அதனின் உணர்வின் துணை கொண்டு
1.நீங்கள் அனைவரும் பெற முடியும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்
2.இந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தச் சக்தி உங்களுக்குள் செயல்படும்.

ஒரு திட்டுகின்றார்… நீ கெட்டுப் போ…! என்று நம்மைச் சொல்லிவிட்டால் என்னைக் கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்… கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்…. அவன் உருப்படுவானா…? உருப்படுவானா…! என்று பதிலுக்கு நாம் சொல்வோம்.

அப்படிச் சொல்லும் போது அவன் சொன்ன உணர்வுகள் எல்லாமே உங்களுக்குள் புகுந்து… அவர் சொன்ன அந்தக் கெட்டுப் போகும் உணர்வை உங்களுக்குள் அதிகமாக வளர்த்து நல்ல குணங்களைப் பூராம் சீர் கெடச் செய்து கெட்டுப் போகும் உணர்வே உடலில் விளைகின்றது.

திட்டியவர்களைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எண்ணி அவர்கள் சொன்னதை நமக்குள் உருவாக்கிக் கொள்கின்ற மாதிரி…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளைப் போக்குவேன்
3.மெய் உணர்வை எனக்குள் வளர்ப்பேன்
4.என் பார்வையால் எல்லோரையும் நலம் பெறச் செய்வேன்
5.என் பார்வையால் என் குடும்பத்தினரை நலம் பெறச் செய்வேன்
6.என் பார்வையால் என் தொழிலை வளரச் செய்வேன்
7.என் வாடிக்கையாளர்கள் நலம் பெறச் செய்வேன் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.

இது தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது. அந்தக் கீதையைச் சொன்னது யார்…? கண்ணன். அந்தக் கண்ணன் யார்…? நம் கண்கள்…!

ஆகவே… “நல்லது செய்ய வேண்டும்…” என்று நாம் திரும்பத் திரும்ப எண்ணினால்
1.அதைப் பார்வையாக ஏற்று நமக்குள் சாரதியாக (கண்கள்) நின்று நல்வழியைக் காட்டுகின்றான்.
2.அந்தப் பாதையில் எந்த இடையூறு இருந்தாலும் விலக்கிச் செல்கின்றான்.
4.நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்கின்றான்
5.தீமையிலிருந்து அகற்றி நம்மைக் காக்கவும் செய்கின்றது

இதை நாம் செய்து பழகிக் கொள்ளலாம் அல்லவா…!