ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2024

ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலம் “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.

எந்த இலட்சியம் தன் கருத்தோ அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலை பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.

இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்கின்ற பொருள் எல்லாம் என்ன…?
1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.வான இயலை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதை நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும் என்பதே இராமபாணம் திரும்பும் தொடர்.

ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகிமாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா… என்ன…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?
1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.“வாலி வதம்…! என்ற பாங்கில் இராமன் தலை குனிந்தான்…! என்கின்ற பொருள் என்ன…?

ஆச்சா மரத்தை வெட்டுபவன் அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம் ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா...? என்று…!”

அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?

உலகோதயம் என்னும் பிடிப்பில் “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான். ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்கின்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்
1.உற்றுறுந்து கேட்கவும் வேண்டாம்…
2.அதிசயித்து நோக்கவும் வேண்டாம்….
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.எடுக்கும் வீரிய ஜடாக்கினி முல சக்தி நம்முடைய முக்கியமான சேமிப்பாக இருக்க வேண்டும்.