ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2024

“போகும் பாதை எது…?” என்று அறியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபடுங்கள்

நமது வாழ்க்கையில் எத்தகைய வேதனை வந்தாலும் அதைத் துடைக்க… துடைத்திட்ட அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத் தான் அன்றைய ஞானிகள் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

1.என்னை அறியாது வந்த பிழைகளை நீக்கிட அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று
2.எந்த உயிர் மனிதனாகச் சிருஷ்டித்ததோ அந்த உயிரிடமே “ஈஸ்வரா…” என்று வேண்டி
3.எந்த மனிதன் இவ்வாறு ஏங்குகின்றானோம் தன்னை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.

நாம் எண்ணியது அனைத்தையும் உயிர் தான் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்துவதற்குத் தான் இராமயாணம் மகாபாரதம் கந்தபுராணம் போன்ற காவியங்களை ஞானிகள் தீட்டிச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி செய்தனர்.

அதாவது
1.சூட்சுமத்தில் நமக்கு முன் இருக்கும் காற்றலைகளில் படர்ந்துள்ள நிலையையும்
2.நாம் எண்ணிய உணர்வுக்குள் சூட்சுமமாக மறைந்த நிலையினையும்
3.நம் உயிருக்குள் பட்டு ஓ… என்று ஜீவனாகி அந்த உணர்வின் சத்து ம்… என்று நாம் சரீரமாகும் நிலையையும் காவியத்தின் மூலம் காட்டினார்கள்.

எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்கி அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு… நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலையும் ஆனால் வேதனை என்று விஷமான உணர்வை ஒரு துளி எடுத்தாலும் உடல் சோர்வடைந்து நல்ல குணங்கள் எவ்வாறு மறைந்து விடுகின்றது…? என்பதையும் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

அத்தகையை தீமைகளை அடக்க வேண்டும் என்றால் ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் அதைச் செயல்படுத்த முடியும். நம்முடைய ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்றும் காட்டியுள்ளார்கள்.

முருகு என்பது மாற்றி அமைக்கும் சக்தி… முருகன் என்பது அழகுபடுத்தும் நிலை…! என்று
2.இப்படி நமது ஆறாவது அறிவு கொண்டு நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிட முடியும் என்றும் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

பித்தரைப் போன்று நமது குருநாதர் சாக்கடையிலும் அருவருப்பான இடங்களிலும் அமர்ந்து தான் எனக்கு (ஞானகுரு) இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்தினார்.

அந்தச் சாக்கடையை அவர் சாக்கடை என்று எண்ணவில்லை உலகையே சாக்கடையாகக் கருதினார்…
1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற நிலையில்
2.அருள் ஞானிகளின் உணர்வைச் சத்தாக நுகர்ந்து கொண்டிருந்தார்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை உலகிற்கு எவ்வாறு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக என்னையும் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார்.

“எனக்குக் கல்வி அறிவே இல்லை என்றாலும்” அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழிப்படி… காட்டிய நெறிப்படி… ஆற்றல் மிக்க சக்திகளை நான் கவர்ந்தேன். எனக்குள் அதை வளர்த்துத் தீமைகள் வராதபடி காத்துக் கொண்டேன்.

உங்கள் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உபதேசிக்கின்றேன். ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழியைப் பின்பற்றுங்கள்.

இந்த மனித உடலிலேயே முழுமை பெறுவோம் என்று இந்த வாழ்க்கைப் பயணத்தை இவ்வாறு தொடருங்கள்.

கடலிலே செல்லும் பொழுது ஒரு எல்லையைக் குறிக்கோளாக வைத்துத் தான் செல்கின்றோம். ஒரு தீவுக்குச் செல்ல வேண்டுமென்றால் படகைச் செலுத்துகின்றோம்.
1.இடைவெளியில் வரும் அலைகளைப் பிளந்து விட்டு
2.”அந்தத் தீவை அடைய வேண்டும்” என்ற எண்ண வலு கொண்டு தான் அங்கே செல்கின்றோம்.

மீன் பிடிக்கச் சென்றாலும் மீன் இருக்கும் இடமாகத் தேடிச் செல்கின்றோம். கடலில் வரும் அலைகளைப் பிளந்து அந்த இடத்தை அடைந்து மீன்களைப் பிடிக்கின்றோம்.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் பல அலைகள் மோதிக் கொண்டே இருக்கின்றன
1.பழி தீர்க்கும் அலைகள் மோதுகின்றன
2.இடையூறு செய்யும் எண்ண அலைகள் மோதுகின்றன
3.தீமை செய்யும் உணர்வுகள் மோதுகின்றது
4.தொழில்களில் எத்தனையோ சங்கட அலைகள் மோதுகின்றன
5.குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பகைமையாகி வெறுப்பான அலைகள் மோதுகின்றன.

இதைப் போன்ற பல அலைகள் மோதி “நாம் போகும் பாதை எது…?” என்று அறியாது இன்று தவித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு குடும்பத்திலும் இதே நிலை தான்.

ஆகவே மகரிஷிகள் காட்டிய வழியினை நாம் பின்பற்றி… அவர்கள் வாழும் எல்லையை அடைய வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் துடுப்பாக வைத்து வாழ்க்கையில் வரும் அலைகளைப் பிளந்து
2.மன உறுதி கொண்டு இதைச் செயல்படுத்துங்கள்.