ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2019

உடலான அரங்கத்திற்குள் உயிர் நாதங்களை எழுப்பி (அரங்கநாதன்) உணர்ச்சிகளாக நம்மை எப்படி ஆண்டவனாக ஆள்கிறது..? (ஆண்டாள்)


நன்றாக இருக்கும் வீட்டில் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு ஒருவர் சண்டை வந்து விடுகிறது. பாவி… மாமியார் இப்படிச் செய்கிறதே…! என்று மருமகள் எண்ணுவார்கள்.

கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்தாலும் கூட “இந்த மாமியார் இப்படி எல்லாம் செய்கிறதே…!” என்று மருமகள் அதிகமாக வெறுப்பு அடைகின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

குடும்பப் பற்று எல்லாம் இருந்தாலும் “என் மாமியார் கணவருடன் சேர்ந்து வாழவிடமாட்டேன் என்கிறது…!” என்று இப்படியே எண்ணுவார்கள்.

ஏனென்றால் ஒரு சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் மாமியார் மருமகள் ஒருவருக்கொருவர் “கொஞ்சம் பிடிக்கவில்லை” என்றால் அந்த வெறுப்பைச் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வேதனைப்படும் உணர்ச்சிகளையே தூண்டுவார்கள். வேதனைப்படும் உணர்ச்சிகளைத் தூண்டத் தூண்ட மருமகளைப் பார்க்கும் போது எல்லாம் மாமியாருக்கு வெறுப்பு வரும்.

அப்பொழுது மருமகளைப் பற்றி நான்கு பேர் மத்தியில் அடிக்கடி சொன்னால் “என் மாமியார் என்னைக் கேவலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்…!” என்ற இந்த உணர்வைச் சேர்த்து “என்ன வாழ்க்கை…?” என்று வெறுத்துக் கொள்வார்கள்.

ஆனால் தன் மாமியாரை நினைத்து இப்படிப்பட்ட உணர்வின் தன்மையை வளர்த்த பிற்பாடு என்ன செய்யும்...? வேதனையை எடுத்து எடுத்துக் கை கால் எல்லாம் குடைச்சலாகி அதனால் வேலை செய்ய முடியாமல் போய்விடும்.

அடிக்கடி அதை எண்ணும் பொழுது உடலில் முடியாமல் ஆகிவிடும். அப்போது மாமியார் என்ன சொல்லும்...? மருமகள் வேலை செய்கிறாளா பார்... ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றாள்...! என்ற இந்தப் பேச்சு வரும்.

“ஏமாற்றுகிறாள்…!” என்று சொன்னதும் மருமகளால் இதைத் தாங்க முடியாது. இந்த வெறுப்பால் என்ன வாழ்க்கை…? என்று தற்கொலை செய்து கொள்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

வேதனைப்பட்டு நோயின் தன்மை ஆகி மாமியார் மீதுள்ள வெறுப்பால் தற்கொலை செய்து கொண்டால் அந்த ஆன்மா வேறு எங்கேயும் போகாது. மாமியார் உடலுக்குள் தான் போகும்.

அந்த உடலுக்குள் போனவுடனே என்ன செய்யும்...? கடைசி நிமிடத்தில் எந்த வேதனைப்பட்ட உணர்வுடன் வெளியே வந்ததோ மாமியார் உடலில் அந்த ஆவி வந்தவுடனே மற்ற யாருடைய அன்பையும் பெற முடியாதபடி எல்லாரையும் திட்டக்கூடிய நிலையாக வந்து சேரும்.

ஏனென்றால் குருநாதர் இதை எல்லாம் நேரடியாக எம்மைப் (ஞானகுரு) பார்க்க வைத்தார். உடலை விட்டு ஆன்மா எப்படிப் பிரிகிறது...? பிரிந்த பின் எங்கே செல்கிறது..? என்று பார்த்த பின் தான் உங்களிடம் இதைச் சொல்கிறேன்.

ஏனென்றால் ஒருவருக்கு ஒருவர் நாம் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த உணர்வின் உணர்ச்சி நம் உயிரிலே என்ன செய்கிறது...? நுகர்ந்ததை வைத்துத் தான் உயிர் ஆளுகின்றது.

இதைக் காட்டுவதற்குத்தான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அரங்கநாதர் என்றும் ஆண்டாள் என்றும் காட்டுகின்றார்கள்.
1.நம் உயிர் உடல் என்ற அரங்கத்தில் இருக்கிறது.
2.நாம் சுவாசித்த உணர்வின் தன்மை எதுவோ அதற்குத்தக்க நாதங்களாக
3.உணர்ச்சிகளாக இயக்கி நம்மை ஆளுகின்றது என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

திருப்பாவை திருவெண்பாவை... எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். மாதம் மும்மாரி மழை பெய்ய வேண்டும். உலகம் நலமாக இருக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எடுத்து நாம் செயல்படுத்தினால் எப்படி இருக்கும்...?

அந்த உணர்வின் உணர்ச்சிகள் கொண்டு உயிர் நம்மை இயக்கும். அதன் உணர்வின் அலைகள் காற்றிலே படரும். அந்த உணர்வுகளால் மேகங்களைக் கூட்டவும் மாதம் மும்மாரி மழையாகப் பெய்யச் செய்யும். தாவர இனங்கள் விளைந்து செழிப்பாக இருக்கும். மக்களுக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.

இப்படி ஒன்று சேர்க்கும் உணர்வுகளை வைத்துத்தான் நம்மை ஆள்வதும் நாட்டை ஆள்வதும் உலகை ஆள்வதும் என்ற நிலையை இப்படிக் கொண்டு வருகிறார்கள்.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா…?

ஆண்டாளைப் பற்றி நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றோம்..? கொண்டோம். “ரெங்கநாதனுடைய சம்சாரம்” என்று தான் நாம் நினைத்துக் கொண்டோம்.

1.அரங்கநாதனாக உயிர் நமக்குள் இருக்கும் போது
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் அந்த இசையின் நாதங்களாக எழுப்பி
3.அந்த உணர்ச்சிகளாக உயிர் நம்மை எப்படி இயக்குகின்றது என்ற நிலை ஞானிகளால் தெளிவாகக் கூறப்பட்டது
4.ஆனால் அந்த உண்மைப் பொருளை நாம் உணர முடியாது மறைந்து போய்விட்டது.

அரசர் காலங்களில் அவருக்குச் சாதகமாக அதை மாற்றி (அவன்) தான் ஆண்டவன் தூதுவன் என்று தன்னை மறைத்துக் கொண்டு ஆலயங்களில் வழிபட வேண்டிய முறைகள் என்று அதற்கென்ற குருக்களை நியமித்து அவருக்குக் காணிக்கை செலுத்தினால் அவனே உன்னைக் காப்பான் என்ற  நிலையில் அவர்கள் தான் செய்வார்கள் என்று நம்மை மக்குகளாக மாற்றிவிட்டார்கள்.

அரசர்கள் வகுத்த வழியில் மந்திரத்தைச் சொல்லி வணங்கும் நிலை தான் இன்றும் வருகிறது. மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி வாழ்ந்து நமக்குள் அந்த உணர்வுகளை அதிகமாக வளர்த்து இறந்தபின் அவர்கள் நம் ஆன்மாக்களைக்  கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

நம் ஆன்மா அரசன் சொத்தாகின்றது, அரசனுக்குக் குருவாக இருப்பவர்கள் இப்படி மற்ற உயிர்களின் தன்மையை எடுத்துக் கொடுத்து அரசன் நாட்டை ஆட்சி புரிய உறு துணையாக இருப்பார்கள்.

இதன்வழி இவன் பிழைப்பைச் செய்யும் போது இவன் இறந்தாலும் இதே மாதிரித் தான் மாற வேண்டும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.உயிரே கடவுள்.
2.உயிர் வீற்றிருக்கும் இந்த உடல் ஆலயம்.
3.ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயத்தில் 1008 குணங்களும் தெய்வங்களாகக் கொலு வீற்றிருக்கின்றது
4.இதை உணர்ந்து அந்த மெய் ஞானிகள் காட்டிய முறைப்படி அருள் உணர்வுகளைச் சேர்த்து உடலான ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தினால்
5.அதற்குண்டான கூலியாக நாம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற முடியும் என்பதே
6.ஞானிகள் ஆலயங்கள் மூலம் நமக்கு உணர்த்திய பேருண்மை.