ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2019

சண்டை போடுபவர்களைப் பார்த்தாலே நமக்குப் பட படப்பு ஏன் வருகிறது...? இதயம் ஏன் படக் படக் படக் என்று துடிக்கிறது...?

இரண்டு பேர் சண்டை போடுபவர்களைப் பார்க்கிறீர்கள். ஆனால் அந்த இரண்டு பேரும் உங்கள் நண்பர்கள் தான் என்று பார்த்தவுடனே “இப்படிச் சண்டை போடுகிறார்களே...! என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் வரும். அப்போது வெறுப்பும் வேதனையும் தோன்றும்.

அப்போது நீங்கள் நுகர்ந்த உணர்வை ஆட்சி புரிவது யார்...?  உங்கள் உயிர் தான். இந்த உணர்வின் தன்மை அதிகமான நிலைகளில் வேதனை வேதனை என்று வெறுப்பும் வேதனையும் தனக்குள் உருவாகும் போது 
1.இது விஷ உணர்வாக மாற்றப்பட்டு நமக்குள் எதிரியான நிலைகள் வருகிறது.
2.அடுத்து இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கப்பட்டு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னிக்குப் பாயும்.
3.அதிகமான உணர்ச்சிகளாகும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலை இல்லாதபடி
4.கிட்னி அப்படியே திறந்து விட்டு விடும். அசுத்தம் உள்ளுக்குள் போகிறது.
5.அப்போது  இதயம் படக்... படக்... படக்...! என்று அடிக்கும்.

சண்டை போடுபவர்களைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மைகள் தனக்குள் வந்த பின் எதிர்பாராது
1.எனக்குப் படக்... படக்... என்று அடிக்கிறது.
2.எனக்கு அப்படியே பட... பட... என்று வருகிறது.
3.வெட... வெட,,, என்று உடல் ஆடிவிட்டது...! என்றெல்லாம் சொல்வார்கள்.
4.இவையெல்லாம் நமக்குள் உள் புகுந்து போகும் நிலை தான்.

நண்பன் சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். இந்த உணர்வு இதயத்தின் பக்கம் வரும் போதெல்லாம் அந்தப் பட படப்பு வரும். ஆனால் என்ன என்றே தெரியவில்லை...! என்பார்கள்.

அதே மாதிரி நாம் சந்தோஷமாக இருப்போம். நமக்குச் சம்பந்தமில்லாதபடி இரண்டு பேர் சண்டை போடுவார்கள். வெறுப்பும் வேதனையும் கொண்ட நிலைகளில் பேசுவார்கள்.

அதை நாம் பார்க்க நேர்ந்ததும் நம்மை அறியாமலேயே நம் உணர்வின் இயக்கம் மாறும். நமக்குள் பய உணர்வை ஏற்படுத்தும். எனக்குப் பயமாக உள்ளதே...! ஏன் என்று தெரியவில்லையே...! இதயம் பலவீனமாக இருக்கிறது என்பார்கள். இது உலக இயல்போடு வரும்.

உதாரணமாக ஒரு பேட்டரியை இயக்குவதற்கு அதற்குள் சில விஷப் பொருள்களைச் சேர்க்கிறார்கள். அந்த பேட்டரியில் இருக்கக்கூடிய அந்த விஷங்களைக் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற உணர்வின் தன்மையை இயக்கக்கூடிய நிலையில் கரண்டை உற்பத்தி செய்கின்றார்கள்.

மின்சாரத்தை அந்தப் பேட்டரிக்குள் (SOLAR CELLS AND BATTERY) முதலில் சேமித்து வைக்கின்றார்கள். எப்படி...? சூரியன் ஒளிக்கற்றையால் எடுக்கிறது. அதிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றையை இதில் இயக்கப்படும் போது இதிலே சேமிப்பு என்ற நிலைகள் வருகிறது.

ஒவ்வொரு அறையிலும் வைத்திருக்கக்கூடிய நிலைகளில் வடிகட்டி அதிலே அழுத்தத்தை அதிகமாகக் கூட்டி ஒரு இயக்கச் சக்தியின் நிலைகளுக்குக் கொண்டு வருகிறார்கள்.

அதிலே உள்ள  செல்களில் நெகட்டிவ் பாசிடிவ் என்ற நிலைகளை வைத்து இயந்திரங்களையே ஓட்டச் செய்கிறார்கள். ஆனால் எதிலிருந்து உற்பத்தி ஆகிறது...?
1.இதிலிருக்கக்கூடிய ஆசிட்  மற்றவைகளுக்கு எதிரியாகும் போது
2.பொறி கிளம்புகிறது... கரண்ட் உற்பத்தியாகிறது...!

இதைப் போல தான் முதலில் சொன்ன மாதிரி நம்முடைய சகஜ வாழ்க்கையில் எதிர் நிலையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நம் உடலிலே எடுக்கப்படும் போது அது உடலிலே வீரிய உணர்வுகளாக மோதப்படும் போது உணர்ச்சியின் வேகங்களைக் கூட்டுகிறது.

அதாவது பேட்டரியில் பாசிடிவ் நெகடிவ் என்ற் மோதலாகும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் அந்த ஆற்றல் மின்சாரமாக (இயக்கச் சக்தியாக) தோன்றுவது போலத் தான் நமக்குள்ளும் தோன்றுகிறது.

ஆகவே நம் உடலில் அத்தகைய எதிர்ப்பு நிலைகளை உருவாக்கும் சக்தி வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?

இதை அடக்க வேண்டும் என்று சொன்னால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். துருவ நட்சத்திரத்தைப் பற்றிப் பல முறை உபதேச வாயிலாக உங்களிடம் பதிவு செய்திருக்கின்றோம்.

“ஈஸ்வரா...! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது இது முக்கண் ஆகிறது. இதன் வழி இழுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் புறக்கண்ணால் நாம் கவருவது நம் ஆன்மாவாக மாறுகிறது. சுவாசித்தவுடன் உயிரிலே படுகின்றது. சுவாசித்ததை உயிர் அகக்கண்ணாக இருந்து உணர்த்துகிறது.
1.அந்த உணர்ச்சியின் தன்மை தான் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகொப்பத் தான் எண்ணங்கள் வருகிறது.
3.அந்த உணர்ச்சிகொப்பத் தான் நம்முடைய செயலும் வருகிறது.

ஆகவே மற்றவர்கள் செய்யும் தீமையின் உணர்ச்சிகள் நம் உடலில் சேரும் பொழுது
1.உடனே அந்த உணர்வின் வேகத்தைக் கூட்டாது
2.”ஈஸ்வரா...!” என்று நாம் கண்ணின் நினைவை உயிருடன் (புருவ மத்தியில்) இணைத்து முதலில் நிறுத்திப் பழக வேண்டும்.

(ஏனென்றால் உணர்வின் வேகத்தைக் கூட்டும் பொழுது தான் நமக்குப் பட படப்பும் இதயம் படக் படக் என்று அடிப்பதும் மற்ற உணர்ச்சி வசப்படும் நிலைகள் எல்லாமே வருகிறது – இது முக்கியம்)

அப்பொழுது அந்த அழுத்தம் வரும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று  இதனுடன் இணைத்து இதன் வழி கவருதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த உணர்ச்சியின் உணர்வுகளை புருவ மத்தியில் செலுத்தும் போது அதன் வலு கூடும். வலு கூடிய பின் தீமைகள் தடுக்கப்படுகின்றது.

தீமைகள் உள் புகாது தடைப்படுத்திய பின் நாம் என்ன செய்ய வேண்டும்?

யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். உண்மையின் உணர்வை அறியும் திறன் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் செயலெல்லாம் நல்ல நிலை பெற வேண்டும் என்று இவ்வாறு ஒவ்வொரு குணங்களுக்குத் தக்கவாறு நாம் தியானிக்க வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் மகரிஷிகளின் உணர்வுகளையும் நமக்குள் சேர்க்கும் போது இதற்கு முன்னாடி  உடலுக்குள் இருந்த பகைமை உணர்வுகளும் பய உணர்வுகளும் தணிக்கப்படுகின்றது.

ஆகவே தீமை என்று தெரிந்து கொண்டாலே அந்தத் தீமையை  அடக்க “ஈஸ்வரா...” என்று சொல்லி கண்ணின் நினைவை உயிருக்குள் கொண்டுவர வேண்டும். இந்தப் பழக்கம் அவசியம் வர வேண்டும்.