ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2017

முருகனின் தத்துவம் - 3

1. முருகன் - வள்ளி தெய்வ ஆணை
இந்ஆறாவது அறிவின் தன்மையை முருகன் வள்ளி தெய்வ ஆணை என்று தெளிவாகக் காட்டினார்கள் ஞானிகள்.

பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி வேட்டையாடித் தன்னை தன்னுடைய வாழ்க்கையை வளர்த்துக் கொண்டு வந்த அந்த சக்தியை வேடுவனின் மகள்.., வள்ளி என்ற காரணப்பெயரை வைத்து சுட்டிக் காட்டுகின்றார்.

வள்ளி.., திணைக் காட்டிலே காவல் இருக்கின்றாள் அந்த வலிமை மிக்க சக்தியாக (வல்லி – வள்ளி) எதனை விளைய வைத்தாரோ அதனைப் பாதுகாப்பாக வைத்துள்ளான் என்று காட்டுகின்றார்கள்.

மனிதனின் உடலில் ஆறாவது அறிவு வலிமை மிக்க சக்தியாக நமக்குள் பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி இந்த மனதை உருவாக்கி இதைக் காத்திடும் சக்தியாக இந்த ஆறாவது அறிவு இருக்கின்றது.

இந்த சக்தியைத்தான் தெளிவாகக் காட்டுகின்றார்கள் வள்ளி என்று. நம் உடலான திணைக்காட்டை காவல் இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.

இந்தக் காவல் காக்கும் உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்து உயிருடன் இணைக்கப்படும்போது இந்த உணர்வு நம் உடலுக்குள் சென்றபின் தெய்வ ஆணையாக மாறுகின்றது.

அதாவது, “காக்கும் உணர்வின் இயக்கமாக அந்த எண்ணங்கள் நம்மை இயக்கி தீமைகள் புகாத நிலைகளை உருவாக்கும். இதுதான் வள்ளி தெய்வ ஆணை.

ஆறாவது அறிவின் தன்மையாக இந்த உடலைக் காத்திடும் உணர்வை நாம் நுகர்ந்து இந்த உயிருடன் இணைக்கப்படும்போது அதன் செயலாக இந்த உடலை இயக்கும், அதனைக் காக்கும்
2. இச்சாசக்தி கிரியாசக்தி ஞானசக்தி
இதைத்தான், இச்சாசக்தி.., கிரியாசக்தி.., ஞானசக்தி.., என்று காட்டுகின்றார்கள்.

நாம் எதை இச்சைப்படுகின்றோமோ நம் உயிரிலே இணைக்கப்பட்டால் இச்சாசக்தி. அதன் வழி உடலில் கிரியை ஆகும்போது கிரியாசக்தி. உருவான அந்தச் சக்தி நம் உடலுக்குள் சுழன்று அதன் ஞானமாக இந்த உடலை இயக்கும் போது ஞானசக்தி.

மூலத்தை நாம் அறிவதற்கு.., ஞானிகள் இவ்வாறு தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஆனால், இன்று என்ன சொல்கிறார்கள்..?

முருகனுக்கு இரண்டு மனைவி. எப்படி என்றால் ஆசைக்கு ஒரு மனைவி அன்புக்கொரு மனைவி என்று இப்படித்தான் திரிபு பண்ணி உண்மையின் உணர்வை நாம் உணர முடியாது செய்துவிட்டனர்.

முருகனுக்குப் பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்தால் முருகன் அதற்காக மெச்சி என்னைக் காப்பான் என்றும் என் கடையில் வரும் வியாபாரத்தின் நிலையில் வியாபாரத்தைப் பெருக்குவான் என்றும் இதைத்தான் உணர்த்துகின்றார்கள்.

ஆகவே, தன் கஷ்டங்களையெல்லாம் சொல்லி கோவிலில் சரணாகதி தத்துவம்.., என்று இந்த அபிஷேகத்தைச் செய்தால் அவன் இங்கே செய்வான் என்ற சாங்கிய சாஸ்திரங்களைச் சொல்லி உண்மையின் உணர்வை நாம் பெறாத நிலைகளில் காலத்தால் தடைபடுத்தி விட்டார்கள்.

ஆனால், மெய் ஒளியின் உணர்வுகளை நாம் பெற்று அதன் மேல் இச்சைப்பட்டு அது உணர்வின் தன்மை தனக்குள் சேர்க்கப்படும்போதுதான் அது கிரியையாகி நமக்குள் தீமைகளை நீக்கும்.